பருகிச் செரிக்கும் பிரியங்களும்
நனைத்துத் துடைக்கும் ரகசியங்களும்
பெயரறியாக் காட்டுப்பூ
ஒன்றின்
வாசனையை மீட்டுவது
ஏற்றிய முத்தக்கங்கில்
மெல்ல முளைக்கும் தீயின் சுவை
நதியொன்றின் முதற் துளியின்
குளிர்மை கொண்டது
கருணை
சூழ் வருடல்களும்
அன்பு
நுரைக்கும் சொற்களும்
கண்டு
வியந்த ஓவியமொன்றை
மீண்டும்
தீட்டுவது
அடைமழையில் நனைந்திறுகும்
மூத்த பறவையின் இறக்கையொத்த
நினைப்பை உலர்த்திட
கண்ணசைப்பொன்று போதும் இப்போது!
2 comments:
அருமை
அருமை தோழர்
Post a Comment