காலை 7.30 மணி அழுக்கடைந்த நகரப்பேருந்தின் ஜன்னல் ஓரம் கை முட்டியில் அழுக்குப் படாமல் சிறிது ஒடுங்கி உட்கார்ந்திருக்கிறேன். நகரப் பேருந்து என்பதால் மனிதர்கள் ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறார்கள். காலை நேரம் என்பதால் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது, ஆனாலும் நடத்துனர் முன்னும் பின்னும் அலைந்து கொண்டேயிருந்தார்.
மனிதர்கள் ஏறும்போதும், இறங்கும்போதும் பெரும்பாலும் அந்த நடத்துனர் அவர்களை மனிதர்களாக பார்க்கவில்லையென்றே தோன்றியது. "ஏ... ஏறி வா, ஏறி வா, ஏறி வா!!!, சீக்கிரம், சீக்கிரம், சீக்கிரம் எறங்கு" என்று அனிச்சையாய் வார்த்தைகள் கோப நெருப்பை எச்சிலாய் மனிதர்களின் மனதில் உமிழ்ந்து கொண்டிருந்தது. அதை உள்வாங்கி உணரும் நிலையில் பயணிகள் என அழைக்கப்படும் மனிதர்கள் இல்லை.....
மனிதர்கள் ஏறும்போதும், இறங்கும்போதும் பெரும்பாலும் அந்த நடத்துனர் அவர்களை மனிதர்களாக பார்க்கவில்லையென்றே தோன்றியது. "ஏ... ஏறி வா, ஏறி வா, ஏறி வா!!!, சீக்கிரம், சீக்கிரம், சீக்கிரம் எறங்கு" என்று அனிச்சையாய் வார்த்தைகள் கோப நெருப்பை எச்சிலாய் மனிதர்களின் மனதில் உமிழ்ந்து கொண்டிருந்தது. அதை உள்வாங்கி உணரும் நிலையில் பயணிகள் என அழைக்கப்படும் மனிதர்கள் இல்லை.....
மூலப்பட்டறை அருகே குறுகலான திருப்பத்தில் இருக்கும் நிறுத்தத்தில், சிறிது தூரம் தள்ளி பேருந்து நிற்கிறது. நடத்துனர் யாரையோ திட்டுவதுபோல் தெரிகிறது, எதையோ எடுத்து படிக்கட்டு வழியே வீசுகிறார், ஒரு திடுக்கிடலோடும், கொஞ்சம் ஆர்வத்தோடும் சன்னல் வழியே எட்டிப் பார்க்கிறேன். நான்கு முனைகளும் இழுத்து மையத்தில் முடிச்சு போடப்பட்ட ஒரு பழைய துணிமூட்டை விழுந்த வேகத்தில் லேசாய் அதிர்கிறது. சில நொடிகளில் ஒரு நைந்துபோன கிழவி இறங்குவது தெரிகிறது. நகரும் பேருந்தின் பக்கவாட்டில், அவசரமாய், தள்ளாடிக்கொண்டு, துணி மூட்டையை நோக்கி குனியும் கூன்விழுந்த முதுகு தெரிகிறது. ஏனோ என்னுடைய பாட்டி நினைவுக்கு வருகிறார், அந்த நடத்துனரின் தாயோ, பாட்டியோ அந்த கிழவியின் வயதொட்டி இருக்க வேண்டும் என மனம் நினைக்கிறது.
சற்று நேரத்தில், ஈரோடு பேருந்து நிலையத்தை அடைந்து, நவீன கட்டண கழிப்பிட அறைக்கு அருகில் நிற்கிறது. உள்ளிருந்த பயணிகளை துப்பிவிட்டு, புதிதாய் மனிதர்களை நிரப்பிக்கொண்டிருந்தது பேருந்து. மனிதர்களை பயணிகளாக்குவதற்கு "பார்க், ஸ்டேசன், நால்ரோடு" என நடத்துனர் கூவி அழைத்துக் கொண்டிருந்தார் ....
நவீன கட்டண கழிப்பிட அறை நகரத்தின் சாட்சியமாகவும், நரகத்தின் ஒரு முன் மாதிரியாகவும் அழுக்கும், துர்நாற்றமும் தன் அடையாளமாக கொண்டு நிற்கிறது. கொஞ்சம் நீளமாக இருக்கும் அறைக்கு, இரண்டு நுழைவாயில்கள், ஒருபுறம் ஆண் படமும், இன்னொரு புறம் பெண் படமும் பொருத்தப்பட்டிருக்கிறது. இரண்டு கதவுகளுக்கும் இடையே இருக்கு மைய இடைவெளியில் ஒரு தகர நாற்காலியும், தகர மேசையும், மேசை மேல் விரித்துப்போட பட்ட பழைய செய்திதாளும், அடுக்கி வைக்கப்பட்ட சில்லறை காசுகளும் தெரிகிறது.
நவீன கட்டண கழிப்பிடப்பிடத்தின் எல்லா அம்சங்களும் பொருந்திய அழுக்கோடு ஓட்டை விழுந்த பனியனோடு இருந்த கழிப்பிடப் பொறுப்பாளார், கழிப்பிடத்திற்கு வந்த வாடிக்கையாளனோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அநேகமாக சில்லறை குறித்த சண்டையாக இருக்கலாம் என மனதுக்குப்பட்டது. பேருந்து மெல்ல நகரத்துவங்கியது...
நவீன கட்டண கழிப்பிடப்பிடத்தின் எல்லா அம்சங்களும் பொருந்திய அழுக்கோடு ஓட்டை விழுந்த பனியனோடு இருந்த கழிப்பிடப் பொறுப்பாளார், கழிப்பிடத்திற்கு வந்த வாடிக்கையாளனோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அநேகமாக சில்லறை குறித்த சண்டையாக இருக்கலாம் என மனதுக்குப்பட்டது. பேருந்து மெல்ல நகரத்துவங்கியது...
மனிதர்களால் காலை நேரத்திலும் கூட கோபங்களையும், சண்டைகளையும் தவிர்க்க முடிவதில்லை. மனிதனுக்கு மனிதனோடு என்றும் சண்டை வருவதில்லை. மனிதன் நடத்துனராகவும், மனிதன் பயணியாகவும் அடையாளம் மாறும்போது கோபம் எளிதாக வருகிறது. மனிதன் கழிப்பிட பொறுப்பாளனாகவும், மனிதன் வாடிக்கையாளனாகவும் அடையாளம் மாறும் போது சண்டை எளிதாக வருகிறது.
மனிதனாக இருக்கும் வரை சுகமே.... கனவுகளின்றி ஆழ்ந்து தூங்கும் போது மனிதனாகவே இருக்கிறோம், அதுதான் நிஜமுகமும் கூட.
விழித்தது முதல்......
கணவனாக, மனைவியாக, தந்தையாக, தாயாக, பயணியாக, நிர்வாகியாக, நண்பனாக, தலைவனாக, தொண்டனாக...... என நிஜமுகத்தின் மேல் வர்ணங்களும், வடிவங்களும் புதிது புதிதாய் ஒட்டிக்கொள்ளும் போது மனிதன் தொலைந்துபோய் கொண்டேயிருக்கிறான்.
கணவனாக, மனைவியாக, தந்தையாக, தாயாக, பயணியாக, நிர்வாகியாக, நண்பனாக, தலைவனாக, தொண்டனாக...... என நிஜமுகத்தின் மேல் வர்ணங்களும், வடிவங்களும் புதிது புதிதாய் ஒட்டிக்கொள்ளும் போது மனிதன் தொலைந்துபோய் கொண்டேயிருக்கிறான்.
________________________________________________________