Oct 1, 2018

கனவொன்றின் பாதியில்




நீந்திய மலை
ஏறிய கடல்
பறந்த நிலம்
தவழ்ந்த வானம்
நுகர்ந்த கோபம்
உணர்ந்த மணம்
தொடும் மகிழ்ச்சி
நினைத்த வருடல்
ஒலித்த கண்ணீர்
வழிந்த சொல்
தழுவிய நிழல்
படிந்த தேகம்
உறங்கும் விண்மீன்
ஒளிரும் இருள்
இவைகளைச் சற்றே மிச்சம் வைத்திருக்கும்
கரைந்தொழுகும் கனவொன்றின்
முதற் புள்ளியை
அடைந்துவிடும்
கனவொன்றின்
பாதியில் இருக்கிறேன்!

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...