கனவொன்றின் பாதியில்




நீந்திய மலை
ஏறிய கடல்
பறந்த நிலம்
தவழ்ந்த வானம்
நுகர்ந்த கோபம்
உணர்ந்த மணம்
தொடும் மகிழ்ச்சி
நினைத்த வருடல்
ஒலித்த கண்ணீர்
வழிந்த சொல்
தழுவிய நிழல்
படிந்த தேகம்
உறங்கும் விண்மீன்
ஒளிரும் இருள்
இவைகளைச் சற்றே மிச்சம் வைத்திருக்கும்
கரைந்தொழுகும் கனவொன்றின்
முதற் புள்ளியை
அடைந்துவிடும்
கனவொன்றின்
பாதியில் இருக்கிறேன்!