மௌனமாய் அந்த மாலை...
கரிய இருள் போல்
ஏதோ குழப்பம் என்னை
சூழ்ந்திருந்த வேளை...
தேவதை போலெல்லாம் நீ
வரவில்லை....
சாதாரணமாகத்தான் நீ வந்தாய்...
எப்போதும் போல்
ஆனால்.....
என் உள்ளுணர்வுக்கு மட்டும்
உன்னிடமிருந்து
சுகந்தமாய் ஒரு வாசனை
குளிராய் மெல்லிய காற்று....
நீ உற்று பார்த்தபோது
உன் கண்களுக்குள்
நான் அழகாய் தெரிந்தேன்...
சாதாரணமாக வந்த நீ
திரும்பிப்போகும் போது
என்னை திருடிக்கொண்டு
போய்விடுவாய் என்பதை வழக்கம்போல்
தாமதமாகவே உணர ஆரம்பித்தேன்..
திருடப்படுவதிலும் கூட
சுகமிருப்பதை நான் உணரும் போது
மாலை நேரம் கொஞ்சம்
கூடுதலாய் பிரகாசித்தது....
Subscribe to:
Posts (Atom)
வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்
பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...
-
பருவ மழை பொய்த்துப் போய் விடும், வறட்சி தாண்டவமாடும், எல்லோரும் செலவுகளைக் குறைப்போம் என விளம்பர யுக்தியோடு நாடு முழுதும் அரசியல் வாதிகள் அற...
-
ஒரு படைப்பாளி மனதில் மிதந்து கொண்டிருந்த விசயங்களை இறக்கி வைக்கும் ஒரு தளமாகவே பெரும்பாலும் வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கிறான். ஆரம்பத்தில் இலக...
-
வழக்கமான பொழுதுகள் வழக்கம்போல் கடந்து போக , துக்கம் பீடிக்கும் நொடிகள் நகர மறுத்து மனதிற்குள் கனத்தை ஏற்றிக்கொண்டே இருக்கின்றன. நேற்ற...