இன்னிக்கு பரபரப்பு நியூஸ் ஒன்னுமேயில்ல!



செய்தி தொலைக்காட்சிகள் செய்திகளை 24 மணி நேரமும் மக்களுக்கு வாரி வழங்கத் தொடங்கிய பின், மக்கள் வேறு ஒருவித மனநிலைக்கு நகர்ந்துவிட்டனர் எனத் தோன்றுகிறது. அதுவும் செய்தி தொலைக்காட்சிகளுக்கிடையே போட்டி உருவான பின்னர், நேயர்களின் போக்கில் இரு பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒன்று செய்திகளை அறிந்துகொள்வதில் இருந்த காத்திருப்பு, தேடல் தொலைந்து விட்டது. மற்றொன்று செய்திகளை ஏனோதானோவென்று சட்டெனக் கடந்துபோகும் தன்மை பெருகிவிட்டது.

ஒவ்வொரு தொலைக்காட்சியும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தத்தம் அரசியல் சார்பு நிலையோடு செய்திகளை வழங்கத்தொடங்கின பிறகு ஒட்டுமொத்தமாக செய்திகள் குறித்த நம்பகத் தன்மை நீர்த்துப் போய்விட்டது என்பதை மறுக்க முடியுமா எனத் தெரியவில்லை.

இன்னிக்கு பரபரப்பு நியூஸ் ஒன்னுமேயில்ல!என டீக் கடையில் ஒருவர் அலுத்துக் கொள்கிறார். எப்போதும் பரபரப்பு விரும்புகின்ற, என்ன மாதிரியான உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் எனக் கேள்வி தோன்றுகிறது.







பின்னிரவு நேரம். வீதிகளின் வழியாக பெருந்துறை சாலையில் இணையும் இடத்தில் இருக்கும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு வாசலருகே மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கிறேன். அப்போதுதான் ஒரு 108 வந்து நிற்கிறது. பக்கத்திலேயே ஒரு வாடகை ஆம்னி வேனும் வந்து நிற்கிறது. ஆம்னியில் இருந்து ஒரு ஊரே இறங்குகிறது. ஆம்புலன்சின் பின்பக்க கதவு நோக்கியும், தாழ் தளத்திலிருக்கும் அவசர சிகிச்சை படிகளின் அருகிலும் பதட்டமாக ஓடுகிறது.

அம்மா போன்று தோற்றமளிக்கும் பெண்மணி ஒருவர், மஞ்சள் பையோடு, தூக்கிப் போடப்பட்ட கொண்டையோடு, கதறலோடு ஆம்னியிலிருந்து இறங்கி, தள்ளாடியபடி மருத்துவமனை வாசலை நோக்கி நகர்கிறார்.

தீர்ந்துபோகும் அந்த நாளில் தேக்கிய அத்தனை மகிழ்வும் உற்சாகமும் அந்தப் பெண்ணைக் கண்ட நொடியில் வடிந்து போகிறது. குப்பென மனதில் இருள் அப்புகிறது.  அடிவயிற்றில் ஏதோ ஒன்று உருள்கிறதா, அடைக்கிறதா என உணரமுடியாத ஒரு உணர்வு.

அவள் கடந்த ஒவ்வொரு அடியிலும், ஒரு போதி மரம் முளைவிட்டு கிளை பரப்புகிறது.

ஒவ்வொரு பரபரப்பின் பின்னாலும் நிறைய பரிதவிப்பும், பதட்டமும் வலியும், பயமும் இருக்கும் என டீக் கடையில் கண்ட, முகம் மறந்துவிட்ட ஆளிடம் சொல்லத் தோன்றுகிறது.






பொதிகை தொலைக்காட்சி கவிதைகள் - தொகுப்பு


"கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்" நிகழ்ச்சியில் 07.07.2013 பகுதி-1

 நான் வாசித்த கவிதைகளின் சுட்டிகள்..
----------------------------------------------------------
சொல்ல மனம் கூசுதில்லையே...
http://maaruthal.blogspot.in/2009/11/blog-post_13.html

சொர்க்கமும் நரகமும்
http://maaruthal.blogspot.in/2011/09/blog-post.html

தூக்கணாங்குருவிக்கூடு
http://maaruthal.blogspot.in/2010/01/blog-post_22.html

மழை நாட்கள்
http://maaruthal.blogspot.in/2011/12/blog-post_03.html








"கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்" நிகழ்ச்சியில் 07.07.2013 பகுதி-2

வண்ண வெடிப்புகளுக்கிடையே
http://maaruthal.blogspot.in/2011/02/blog-post_22.html

முத்த யுத்தம்
http://maaruthal.blogspot.in/2012/05/blog-post_17.html

சபிக்கப்பட்ட பதில்கள்
http://maaruthal.blogspot.in/2009/07/blog-post_23.html
  






"கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்" நிகழ்ச்சியில் 21.07.2013 பகுதி-1

வருடப்படாத வடுக்கள்
http://maaruthal.blogspot.in/2012/01/blog-post_07.html

காணாமல் காணும் ஓவியம்
http://maaruthal.blogspot.in/2010/12/blog-post_17.html

பூவில் வழிந்த சுடு கண்ணீர்
http://maaruthal.blogspot.in/2010/11/blog-post_14.html

அம்மாவைப் பற்றிய ஆவணக்குறிப்புகள்!
http://maaruthal.blogspot.in/2012/07/blog-post.html



"கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்" நிகழ்ச்சியில் 21.07.2013 பகுதி-2
கனவாகவே
http://maaruthal.blogspot.in/2010/07/blog-post_14.html

கூடிக்களிக்கும் தனிமை
http://maaruthal.blogspot.in/2011/11/blog-post_21.html

இருட்டு
http://maaruthal.blogspot.in/2010/11/blog-post_12.html






"கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்" நிகழ்ச்சியில் 28.07.2013 பகுதி-1

கூடுகட்டாத பறவைகளுக்காக
http://maaruthal.blogspot.in/2009/09/blog-post_15.html

போதை கனக்கும் டாஸ்மாக் குடுவை
http://maaruthal.blogspot.in/2012/01/blog-post_31.html

ஒரு தற்கொலை
http://maaruthal.blogspot.in/2009/06/blog-post_25.html

முடிவு செய்றது யார்?
http://maaruthal.blogspot.in/2011/04/blog-post_23.html





"கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்" நிகழ்ச்சியில் 28.07.2013 பகுதி-2
முடிவு செய்றது யார்?
http://maaruthal.blogspot.in/2011/04/blog-post_23.html

இணையும் புள்ளி தெரியாமல்
http://maaruthal.blogspot.in/2009/07/blog-post_30.html

நாம் எனப்படும் நானும் நீங்களும்
http://maaruthal.blogspot.in/2013/02/blog-post_7.html




 

   

வெட்க ஆறு


புழுதி கிளம்பும் பெருங்காற்றில்
உதிரும் புளியம்பழம் போல்
கொட்டுகிறது முத்தம்

தீராப் பசியோடு
இரை கொத்தும் பறவைபோல்
இதழ்கள் இதழ்களைக் கொத்த

மல்லிகைப்பந்தல் கடந்த காற்றில்
கசியும் வாசமாய்
கமழ்கிறது கலந்த மூச்சுக்காற்று

அப்போதுதான் ஓய்ந்த மழையில்
வழியும் இலை நுனி நீராய்
அவளிடம் சொட்டுகிறது வெட்கம்

வெட்கச் சொட்டுகளில் நனையும்
அவன் தலையை அவள் துவட்டுகையில்
அவனுள்ளும் ஒரு வெட்க ஆறு!

-