Apr 8, 2019

ஒட்டியிருக்கும் மணற்துகள்கள்




ஆகப் பெருகு
துவும்
ஆகச் சிறுகுவதுவுமே
நதியின் இயல்பு

நதி நமக்கானதில்லை
நதியைச் சார்ந்தவர்களே நாம்

கால் நனைத்தபடி
கடந்தோடும் நீரில்
மீண்டும் ஒருமுறை
நனைய முடியாது

நதியைவிட்டு நகரும் முன்
கூழாங்கல் ஒன்றினை
கையகப்படுத்துங்கள்
தாமதித்து எடுப்பதற்குள்
அது வேறு வடிவம்
அடைந்துவிடலாம்

கூடவே காலடியில்
கொஞ்சம் மணற்துகள்கள்
ஒட்டியிருப்பின் அவற்றைக்
காப்பாற்றிக் கொள்ளுங்கள்!



விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...