Showing posts with label பலகாரம். Show all posts
Showing posts with label பலகாரம். Show all posts

Nov 5, 2010

தீபாவளியும் தீய்ந்த முறுக்கும்




வெய்யத்தாழ விறகடுப்புக்கூட்டி
விறகோடு விறகா 
விரல்களும் எரிய

இனிப்போ காரமோ
எண்ணைச் சட்டியில் விழும்
வியர்வைத்துளி ருசியோடு..
அத்தையைத் துணைக்கு வச்சு
அம்மாவும் பாட்டியும்
 

வெந்தும் வேகாமலும்
தீய்ந்தும் கருகியும்
சுட்டுச் சுட்டுப்போடும்
முறுக்கு, ஜிலேபி, லட்டுகளை

சுடச்சுடத் தின்று,
ஆறமர ஆறவைத்துத் தின்று
அக்கம்பக்கம் கொடுத்து
பாதிக்குமேல் பத்திரப்படுத்தி
பலநாள் தின்பதில்
ருசித்துக் கழியும்
தீபாவளி நோம்பி….

அடையாரோ
கிருஷ்ணாவோ
ஹால்திராம்ஸோ

வடிவாய் நறுக்கி 
வழவழ காகிதம் போர்த்தி
வண்ணப் பெட்டி
காற்றுப்புகா பையென
எடைபோட்டு வாங்கிவரும்
இனிப்பு காரங்களில்
தீய்ந்து போய்க்கிடக்கிறது
தீபாவளி ருசி!


_________________

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...