Showing posts with label தீபாவளி. Show all posts
Showing posts with label தீபாவளி. Show all posts

Nov 5, 2010

தீபாவளியும் தீய்ந்த முறுக்கும்




வெய்யத்தாழ விறகடுப்புக்கூட்டி
விறகோடு விறகா 
விரல்களும் எரிய

இனிப்போ காரமோ
எண்ணைச் சட்டியில் விழும்
வியர்வைத்துளி ருசியோடு..
அத்தையைத் துணைக்கு வச்சு
அம்மாவும் பாட்டியும்
 

வெந்தும் வேகாமலும்
தீய்ந்தும் கருகியும்
சுட்டுச் சுட்டுப்போடும்
முறுக்கு, ஜிலேபி, லட்டுகளை

சுடச்சுடத் தின்று,
ஆறமர ஆறவைத்துத் தின்று
அக்கம்பக்கம் கொடுத்து
பாதிக்குமேல் பத்திரப்படுத்தி
பலநாள் தின்பதில்
ருசித்துக் கழியும்
தீபாவளி நோம்பி….

அடையாரோ
கிருஷ்ணாவோ
ஹால்திராம்ஸோ

வடிவாய் நறுக்கி 
வழவழ காகிதம் போர்த்தி
வண்ணப் பெட்டி
காற்றுப்புகா பையென
எடைபோட்டு வாங்கிவரும்
இனிப்பு காரங்களில்
தீய்ந்து போய்க்கிடக்கிறது
தீபாவளி ருசி!


_________________

Oct 13, 2009

நல்லாத்தானே வச்சிருக்கோம் நரகாசுரனை


போனசு புத்தாடை
பட்டாசு மத்தாப்பு பலகாரம்
அரைப்பவுனு தோடு அடுத்த நாள்
ஆட்டுக்கறி, கோழிக்கறி

போட்டி போட்டுக்கொண்டு
ஒளிபரப்பாகும் புதுப் படங்கள்
தின்பதையெல்லாம் சீரணிக்க
இன்னும் ரெண்டு நாள் விடுமுறை

தீபாவளியைக் கொண்டாட
எத்தனையோ காரணம் இங்கே
நரகாசுரனைக் கொன்றதாய் பொய் சொல்லி
நாடு முழுதும் பட்டாசு வெடிக்கிறோம்

ழத்தமிழனின் உதிரம் தோய்ந்த
நீளமான சிவப்புத் துண்டோடு..
அள்ளிக் கொடுத்து ஆயுதம் கொடுத்து
நல்லாத்தானே வச்சிருக்கோம் நரகாசுரனை


ன்ன நியாயம் இருக்கு
என்ன தேவை இருக்கு
இரத்தம் காயுமுன்னே
இங்கு தீபாவளி கொண்டாட

காடிழந்து வீடிழந்து கற்பிழந்து
கம்பிவேலி தாண்ட முடியாமல்
காய்ந்து போன பச்சிளம் குழந்தையை
கண்ணீர் கோடுகளோடு கையில் ஏந்தி

நாம் வெடிக்கும் பட்டாசு நவுத்துப் போகட்டும்
உடுத்தும் புத்தாடைகள் கிழிந்து போகட்டும்
தின்னும் பலகாரம் கசந்து போகட்டுமென”
வயிறெரிந்து சபிக்கமாட்டாளா வாழ்விழந்தவள்

வள் ஈழத்துத் தாய் ஆகவே சபிக்கமாட்டாள்
ஆனாலும் இந்தத் தீபாவளியில்
இனிப்புகளை ஒதுக்கி புத்தாடை துறந்து
ஈழத்தை நெஞ்சில் சுமப்போம்

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...