உதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :2


கண்களில் கண்ணீரோடு தான் சில வரிகளைக் கடந்தேன் அண்ணா.. பத்து வயது கடந்த நிலையிலேயே என் மகளும் இந்த வலியை அனுபவிக்கிறாளே என்று நிறைய கஷ்டப்பட்டுருக்கேன்.. அந்த மாதிரியான சமயங்களில் அவளின் முகம் கொஞ்சம் வாடினாலும் .. அவளை நாங்கள் பள்ளிக்கு செல்ல அனுமதிப்பதில்லை...

எங்கள் இருவரின் வலியையும் தாயாய் உணர்ந்த என்னவரால் அந்த வலி கூட சுகமாக மாறிவிடும் பல வேளைகளில்...

ஆண்கள் கூட புரிந்து கொள்ளும் வேதனையை அதை நன்றாக உணர்ந்த பெண்கள் புரிந்து கொள்ளாதது வேதனையான விஷயம்...

*

I remember the day .. During 3 rd of my periods ..the situation took me to travel..
After get inside the train with in 2 hours my bleed started unconditional.
Full dress wetted. All knows that the express trains particularly in north side sleeper also we can't travel..near bathrooms and pathways oocupaid by passengers...

I started cry..my husband went to see ttr for a ac coach. That s the most untorable pain in my life in heart and body...

I take one towel and wipe the seat where i sit..with water.. And wrape me with a big bedsheet ...which i bring for sleep...

200 Nos more than i crossed to reach the new coach...

Where i sit there also all know abt my periods all are talk about that..

After this incident i ask myself why i was cry..
That s because of pain.. Or bcoz of shy..
Still i don't know ..

But most unconditional moment..
That struck on my mind..

Even i use napkins during..that much over bleed that's s also a 3 rd day how could it hpn i don't know.

Feeling painful..

*

தங்களின் பதிவால் நிச்சயம் பல நல் உள்ளங்கள் பெண் களின் வலியை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன. பொய்மை விலங்கை உடைக்க முயற்சி எடுத்த தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி

*

கடையில் போய் நாம் கேட்டாலும் அதை பேப்பரில் மடித்து தரும் நிலைதான் இருக்கிறது

*
நாம இன்னும் நிறைய மாற வேண்டியிருக்கிறது இந்த விஷயத்தில்

*

இன்று பல பள்ளிகளில் இயற்கை உபதைகளில் இருந்து விடுபட அனுமதி கேட்பதற்கே இளவயது பெண்கள் கஷ்டப்படுகிறார்கள். இதுதான் உண்மை.

*

ஆண்களுக்கு இதெல்லாம் ஜென்மத்தில் புரியப் போவதில்லை என்ற என் எண்ணத்தை உடைத்து விட்டீர்கள்.

*

அறியாமையை உணர வைக்கிறது....

*

நாம் இன்னும் நாப்கின் பற்றி பேசுவதையே taboo வாக கருதிக்கொண்டிருக்கிறோம்.. Tampon எனும் வகை பேட்கள் இன்னும் சவுகரியமானவை என்கிறார்கள் அதை உபயோகித்தவர்கள்.. இளம் தலைமுறைக்கு அதை பழக்க அம்மாக்கள் தயங்குகிறார்கள் ஏனெனில் அவர்களுக்கே அது ஏற்கமுடியாததாகவும் அச்சமாகவும் இருக்கிறது.. நீச்சலுக்கு செல்ல, கறைப்படும் என்ற கவலையில்லாமல் இருக்க என்று பல விதமாய் உபயோகம். வலி தவிர வேறு எதுவும் அந்நாட்களில் பெண்களின் அன்றாடத்தை கட்டிப்போடக்கூடாது.. இன்னும் கடக்கவேண்டியத்தொலைவு நிறைய இருக்கிறது..

*

எனது வீட்டில் இரண்டு பெண்களுக்கும் மனைவிக்கும் இதுவரை அவர்கள் சென்று வாங்கியதாய் ஞாபகம் இல்லைங்க..அந்த பயமும் ஒரு மன இறுக்கம் இல்லாமல் இன்றும் எதிர்கொள்கிறார்கள் எனது பெண்கள்.இது அவர்களின் சிறு வயதிலேயே கற்பிக்கும் ஒரு முக்கியமான பாடம்

*

இன்னும் நிறைய பதிவுகள்,கட்டுரைகள் வர வேண்டும்.

*

உணரவேண்டிய பதிவு....ஆண்கள் மட்டுமல்ல சில பதவியில் இருக்கும் பெண்களும்..... நான் ஆசிரியையாக வேலை செய்து கொண்டிருக்கும் போது.....வலியுடனும் வேதனையுடனும் விடுமுறை கேட்டும் கிடைக்காத தருணம் இதைப் படிக்கும் போது நினைவில் வந்தது.....

*

நீங்க சொன்ன மாதிரி தனிதட்டு , தனிப்படுக்கைன்னு கிராமங்களில் இன்னும் இருக்குங்க .

*

பெண்ணாய் இதை உணர முடிகிறது, மேலும் இன்றைய பல ஆண்கள் தங்கள் மனைவி மற்றும் மகளின் மாதவிடாய் சமையங்களில் ஏற்படும் மன பிரச்சனைகளை புரிந்து மிகவும் அனுசரனையாக நடந்து கொள்ளகிறார்கள் இதுவும் மிக பெரிய மாற்றமே

*

நீங்க எழுதியிருக்கும். மாணவி, தலைமையாசிரியை நிகழ்வு குறித்து ஒரு கருத்து. பெரும்பாலும் பெண்களுக்கிடையில் இந்த மாதவிடாய் பெரிய விடயமே இல்லாதது போல் ஒரு பாவனை இருக்கும். அதிலும் வயது மூத்த பெண்கள் இளவயது பெண்களின் வயிற்றுவலிக்கு, 'என்னமோ எங்களுக்கு இல்லாதது மாதிரி.. எல்லோருக்கும் உள்ளதுதான்..' என்கிற ரீதியில் அதை பார்ப்பது வழக்கம்.  இம்மாதிரியான அனுபவங்களை சித்தி, அத்தை, அக்கா என்று வயது மூத்த பெண்கள் எங்களிடம் காட்ட தான் செய்தார்கள்.

இளவயதில் இருக்கும் மாதவிடாய் சிரமங்கள், அதீத இரத்தப்போக்கையும் வயிற்றுவலியையும் புரியாத புதிர் தன்மையையும் கொண்டதாக இருக்கும் என்பதை மூத்தவர்கள் புரிந்துக் கொள்ள தவறுகிறார்கள். இதுவும் ஒரு வகையில் இன்று வரை சமூகத்தில் தொடரும் மாமியார் - மருமகள் பிரசனையைப் போன்றதுதான்.

*

முட்டு வீட்டுல முழுசும் ஓய்வில் இருக்கும் பழக்கம் தான் ,ஆதலால் அந்த நாளில் பெண்கள் ரொம்ப நல்ல சத்தான ஆகாரம் உண்டும்,உடலில் ஏற்படும் அசதியை போக்கவும் தான் அந்த முட்டு வீடு.

*

நாங்கள் இன்னும் கூட இப்படித்தான் இருக்கிறோம்....அந்தக் கடினமான நாட்களை கடத்துதல் என்பது வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மாபெரும் சவால்...தான்...

*

ஒரு தந்தையாக, கணவனாக உங்கள் கூற்று 100% சரியே. தவிர உங்கள் கையாளும் முறை அபாரம். அதற்காக உங்களுக்கு தலை வணங்குகிறேன். பொதுவாக பெண்களின் பிரச்சனையை இப்போது ஆண்கள் சுலபத்தில் புரிந்துகொள்கிறார்கள் என்பது பெரும் நிம்மதியை கொடுக்கிறது. நன்றி அய்யா."தீட்டுஎன்று இப்போதும் தொடர்வது குறித்து கேள்விகளுண்டு" என்று குறிப்பிட்டிருந்தீர்கள். முன்பெல்லாம். பெண்களுக்கு தீட்டு வந்தால் இன்றயத்தை போல பாட்ஸ் எதுவும் கிடையாது. தவிர உடல் உபாதைகள் இருக்கும். அந்த நேரத்தில் அவளுக்கு ஓய்வு தேவை. அதனாலேயே அவர்களை ஒரு வட்டத்துக்குள் மறதி மூன்று நாட்களுக்கு பத்தியமாக பாதுகாத்தார்கள். அதனால் தான் என்னவோ சுலபமாக இந்த ஸ்கேனிங்கும் இல்லாமல் 15 பிள்ளைகள் பெறமுடிந்தது. இப்போ அந்த வழக்கம் அருகிப்போனதால் ஒரு பிள்ளைக்கும் 15 ஸ்கானிங் என்றாகிவிட்டது. எப்போ இந்த வழக்கம் தவறான நோக்கில் பார்க்கப்பட்டது என்று எனக்கு தெரியவில்லை. பாஞ்சாலி சபதத்தில் தான் வீட்டுக்கு விளக்காக இருப்பதாக பாஞ்சாலி கூறும் செய்தியை பார்க்கும் பொது அப்போதெல்லாம் அவர்கள் இதை மறைத்துப் பார்க்கும் செய்தியாக பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது.

ஆனால் இதில் இன்னொரு பக்கமும் இருக்கிறது. இந்த சவாலில் எனக்கு நிச்சயமாக உடன்பாடு இல்லை. ஒரு பெண்ணாக அவளுடைய உணர்வுகளையும் புரிந்துகொள்ள வேண்டும். என்னதான் முற்போக்காக சிந்தித்தாலும் கூட ஒரு பெண் எந்த அளவுக்கு இத்தகைய சவால்களையும் விரும்புகிறாள் என்பதையும் பார்க்க வேண்டும். நிசஹகாயமாக அவளுக்கு இத்தகைய சவால்கள் சங்கடத்தைக் கொடுக்கும். யார் இந்த சவால்களை முன்வைத்தார்களோ எனக்கு தெரியவில்லை. ஒரு பெண்ணாக என்னால் இதை நினைத்ததுக்கூட பார்க்க முடியவில்லை. இதனால் என்னை ஒரு பிற்போக்கு வாதி என்று முத்திரை குத்தாலம். இந்த விஷயத்தில் நான் பிற்போக்குவாதியாகவே இருக்க விரும்புகிறேன். பெண்ணின் மாதவிடாய் என்பது இயற்க்கையாக நடக்கக் கூடிய ஒரு சம்பவம். அந்த நேரத்தில் அவளுக்கு இருக்கும் மனநிலை, உடல் மாற்றம், வலி என்பன எல்லாம் வெறும் சவாலுக்கு உரியதா? அதை இப்படி பகிரங்கமாக விளம்பர படுத்துவது... சரியா என்று எனக்கு தெரியவில்லை. அது பாட்டுக்கு நடந்துகொண்டு போகட்டுமே... விட்டுடலாமே.

*

இதை பற்றி எழுதுவதற்கு ஒரு தைரியம்மும் முற்போக்கு சிந்தனையும்,பெண்கள் மீது நல்ல அன்பும் வேண்டும்.

*

இது குறித்து எனக்கு சில ஆதங்கம் உண்டு. அந்த காலத்தில் தீட்டுன்னு சொல்லி ஒதுக்கி வைத்ததுக்கு முக்கியமான காரணங்கள் இருந்தது. அந்த மாதிரி நாட்கள்ள உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். அப்போ அவங்களுக்கு முழுமையான ஓய்வும் அவசியம் தேவை. அந்த காலத்தில் இதெல்லாம் கிடைச்சது. ஆனா இப்போ, அந்த கஷ்டத்தோட வீட்டு வேலைகளையும் செய்து, வேலைக்கும் போயிட்டு வந்து, குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பெண்கள் பற்றிய சிறு அக்கறை கூட யார்கிட்டயும் இல்லை. அந்த காலத்தில் ஒதுக்கி வைச்சாங்க, இந்த காலத்தில் வீட்டுக்குள்ள சேர்த்திக்கறாங்க. ஆனா அந்த காலத்தில் கிடைத்த ஓய்வும் கவனிப்பும் தொலைந்து போயி மேலும் சிரமங்கள் மட்டுமே மிச்சமானது


*

திரு அக்ஷய் குமார் பல சமூக அக்கறை கொண்ட படங்களில் நடித்திருக்கிறார்... திறந்தவெளியை தவிர்த்தல் மற்றும் ஒவ்வொரு வீட்டிலும் கழிவறையின் அவசியத்தை உணர்த்தும் படம்...

தலைமை ஆசிரியையின் பார்வையும் செயலும் தவறென்பது எனது கருத்து.. பள்ளியின் தேர்ச்சி சதவீதம் நூறாகயிருக்க வேண்டும்.. அனைவரும் எண்பது விழுக்காடுக்கு அதிகமாக மதிப்பெண்கள்... இத்யாதி.. இல்லையேல் மாவட்ட கல்வி அதிகாரி மெமோ... etc., ஒவ்வொரு முறையும் ஒரு மாணவி தன்னை சந்தித்து ஏதாவது கேட்கையில்(However naughty or notorious he/she maybe)... இவள் சொல்வது உண்மை"யோ" எனும் பார்வைதான் இருக்க வேண்டும்... இவர்கள் /இவள் எப்போதும் இப்படித்தான் என்ற... Pre(determined /conceived )closed mind to be shunned. அவரது பதவி, வயதுக்கு முதிர்ச்சியான பார்வையிருந்திருக்க வேண்டும்...

பள்ளி /கல்லூரி மாணவியோ அல்லது பணிக்கு செல்லும் பெண்களோ அல்லது விடுதியில் தங்கியிருப்பவர்களோ (கோவை), விரும்பத்தகாதது நடப்பின் துணிச்சலோடு தட்டிக்கேட்பது மற்றும் தன் சம்பந்தப்பட்டவர்க்கு தெரிவிப்பது பற்றி சிறு பிராயத்திலிருந்தே ஊக்குவித்தல் அவசியம். நீ பாட்டுக்கு பதிலே பேசாம வா... வேறு தெருவில போய்வா.. அலுவலக மேலதிகாரி. Transfer, harassment or CR etc., ஏதாவது ஒன்றிற்கு பயம்... A psychological war within herself subdues her..

மறுபடியும் அதே பள்ளி மாணவி.. பல வழிகளில் சொல்லியிருக்கலாம்... துண்டு சீட்டில் எழுதி.. சைகையால்.. அருகே சென்று மெதுவாக செவியில்.. வெளியே சென்றபோது பின்தொடந்து சென்று.. அதைவிட்டு அதேயிடத்தில் அழுதுகொண்டே.... மாற்றம் தேவை பெற்றோர் /ஆசிரியர்களிடம்...

*

In Dubai I have never seen a used napkin anywhere whether in a public or private toilet but in all my working places in India I have seen used napkins flooding in female toilets . No one takes it seriously..

*


No comments: