உதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :1


ஒரு கட்டுரை குறித்து ”அருமை... மிகவும் அருமை” என்பது போன்ற பின்னூட்டங்கள் மட்டும் உவப்பளிப்பதில்லை. இசைவான மற்றும் மாற்றுப் பார்வையை அளிப்பதுவும், இன்னொரு தளத்திற்கு நகர்த்துவதுமான உரையாடல் என்பதே அந்தக் கட்டுரையின் வெற்றியெனக் கருதுவேன்.

உதிரத்தின் நிறம் உரிமை – எனும் கட்டுரை குறித்து ஃபேஸ்புக் / வாட்சப்பில் பகிரப்பட்ட கருத்துகள் தொகுப்பு -1


*******

My wife crying After reading this. She wants to say thanks to you. She will call you soon

*

ஒவ்வொரு பெண்ணும் ஒரு கொடுமையான அனுபவத்தை கடந்துதான் வந்திருகக் வேண்டும். ஆனால் நான் எல்லாவற்றையும் கொஞ்சம் உடைக்கப் பழகிக் கொண்டேன். அந்த கட்டுக்கோப்புகளை நான் தாண்டும்போது தட்டிக் கொடுப்பது ஆணாக இருந்தாலும் தடுப்பது பெண்கள்தான்.

அலுவலகத்தில் கையில் எடுத்துக் கொண்டு பாத் ரூம் போனால் உடன் இருக்கும் தோழிகள்தான் கிண்டலடிப்பார்கள் மறைத்துக் கொண்டு போ என்று. ஆண்கள் அதை பெரிதாக கண்டு கொள்வதில்லை

இந்த சமூகம் இந்த விஷயத்தில் திருந்தும் என்பது நம் காலத்தில் இல்லை. இன்னமும் flex அடித்து சீர் செய்கிறார்கள்

*

உண்மையில் உங்க பேட்மேன் சேலன்ஜ் அப்போதான் அதுல என்ன இருக்குன்னே பார்த்தேன்...திருமணமான இந்த 14 ஆண்டுகளில்... நானும் செஃல்பி எடுத்தேன்... ஆனா போடல... ஏன்னு எனக்கும் தெரியல...

*
ஏற்கனவே தெரிந்த/அறிந்த விஷயம் என்றாலும், பிற்போக்காகத்தண்நாம் அதைக் கையாள்கிறோம்.

என்னுடைய பத்து வயதில் என் அப்பா இதைப்பற்றிய புரிதலை எனக்கு ஏற்படுத்தினார்.

"தீட்டு என்பதெல்லாம் இல்லை. மாதத்திற்கு ஒருமுறை ரத்தம் சுத்திகரிக்கப்படும்போது தேவையற்ற ரத்தம் வெளியேறுகிறது. அதில் கிருமி தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் அந்த நேரத்தில் பெண்களை தொடக்கூடாது என்கிறார்கள்" இதுதான் அவர் கூறியது.

என் இரண்டு பெண்களுக்கும் (தற்போது 14,7 வயது) சிறு வயதிலேயே மாதவிடாய் பற்றி என்னால் முடிந்த அளவு சொல்லி மனதளவில் அவர்களை தயார்படுத்தி இருக்கிறேன். இது என் அப்பாவிடமிருந்து நான் கற்றது...

நீங்கள் இதை ஒரு சமூகத்திற்கே கற்றுக் கொடுக்க முயல்கிறீர்கள்.
இந்தக் கட்டுரை படிப்பவர் மனதில் ஒரு புரிதல்/மாற்றம் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

*

From this article I got one point about my research. Thanks Anna

*

This should taught by mothers to their sons. Then these issues will solve meticulously. Even I remember the days my mom scolded me asking about this.

*

மாத விடாய் நாட்களின் தாக்கம் கூட ஒவ்வொரு பருவத்திலும் மாறுகிறது. அதையெல்லாமும் கூட குடும்பத்தினருக்கு சொல்லிக் கொடுக்கணும். பதின் பருவக் குழந்தைகளுக்கு பள்ளிகளில் பாடமாகச் சொல்லிக் கொடுக்கலாம். தமிழ்நாட்டுல எத்தன பள்ளிகளில் இது நடக்குதுன்னு தெரியல. இங்கல்லாம் பெண் குழந்தைகள் பயமில்லாமல் தெளிவா எதிர் கொள்ளறதப் பாக்கறப்போ, நான் முதல் முறை அழுததுதான் நினைவுக்கு வருது. ஆனால் இப்போஎனக்கு நடக்கும் உடல் மாறுபாடுகளை என் குழந்தைகளிடம் பகிர்கிறேன். மகளுக்கு இன்னும ஆரம்பிக்கலைன்னாலும், எல்லாமே தெரியும்.

பள்ளித்துறையின் சமீபத்திய மாறுதல்கள் நம்பிக்கை கொடுக்குது. பாக்கலாம்...

*

The understanding has to come from small age. That is why i like the work you people are doing. If we teach the kids it will improve a generation

*

எம் பையன் எனக்கும் மகளுக்கும் நாப்கின் வாங்கி வருகிறான். அந்த நாட்களைப் பற்றிய ரகசியம் வீட்டில் இல்லை. எங்கள் வலி பற்றிய வெளிப்படை பேச்சு வீட்டில் உண்டு

*
உண்மை நிகழ்வுகளை உன்னதமான எழுத்துக்களால் உனக்கே உண்டான வடிவில். பெரும்பாலான பெண்களிடம் இன்றைக்கும் இருக்கும் தயக்கத்தை மிகவும் அழகாக எடுத்துரைத்து மனதில் எழுச்சியை ஏற்படுத்தியதற்காக பாராட்டுக்கள்

*

நேர்த்தியாக வெளிப்படுத்துதல்...
வீண் வார்த்தைகள், கற்பனை புனைவுகள் கடும் சொற்கள் ஏதுமின்றி படித்து, சிந்திக்கவைப்பது உங்களது எழுத்தின் சிறப்பு

*

Melted down. Thanks for the sharing

*

இதில் நானும் இன்னும் ஒரு குற்றவாளி தான் சார் .... வேண்டுமென்று தவிர்ப் பதில்லை இருந்தாலும் இது பற்றி கண்டு கொள்வதில்லை. கிட்டத்தட்ட 30 வருடங்கள் அம்மா & அக்காவெல்லாம் அந்த நாட்களில் தனி அறை , தனி படுக்கை , காலையில் குளித்து முடித்து பின் சமையல் , என்னென்னவோ வாங்க எத்தனை முறை கடைகளுக்கு அனுப்பினாலும் இந்த நாப்கின் வாங்க மட்டும் சொல்லாமல் , அவர்களே வாங்கி வந்து வீட்டில் ஒதுக்குப்புறமாக வைப்பது , இது போல பல வகைகளில் தள்ளியே இருந்ததால் அதைப் பற்றிய எந்த அறிவும் & யோசனையும இல்லாமல் கடந்து வந்து விட்டு இப்போது வூட்டம்மா அந்த அளவு கட்டுப்பாடு இல்லாமல் சாதாரண நாட்கள் போல கடப்பதை பார்த்து மகிழ்ச்சி தான் இருந்தாலும் அந்த நாட்களில் அவர்கள் வலியை உணர எண்ணினாலும் அது பற்றி பேசியதே இல்லை என்பது தான் எனக்கு குற்றவாளி போன்று உணர வைக்கும் சார் , ஆனாலும் அடுத்த முறையாவது அந்த நாட்களில் விசாரிக்க வேண்டும் என்று நினைப்பேன், ஆனால் செய்ததில்லை, இந்தக் குற்ற உணர்ச்சியால் தான் அந்த பேட்மேன் சேலஞ்ச்ல கூட கலந்து கொள்ள மனம் இடம் தரலை

*
இன்றளவிலும் எவ்வளவு முன்னேற்றம் வந்தாலும் பெண்களாகிய எங்களுக்கு உங்களவு யோசிக்கவோ கேக்கவோ பேசவோ வருத்தப்பட ஆளில்லை என்பதே நிதர்சனமான உண்மை பெண் ஜென்மத்திற்க்கே உண்டான வலிகள் வேதனைகள் அனுபவித்தே ஆகவேண்டும் அவ்வளவுதான்

*
அந்த ஆரோக்கிய சூழல் பள்ளியில் மட்டுமல்லாமல் , சமூகத்திலும் , குறிப்பாக வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆண்களின் பங்கு சரிசமமானது.

*
தங்களால், என்னால் இவ்வளவு உணர்ந்து கொள்ள முடிந்தமைக்கு நன்றி.

ஆனால் சென்னை வெள்ள பேரிடர் துயரத்தின்பொழுது சென்னைGST bhavan யில் உள்ள அதிகாரிகள் ஒண்றிணைந்து whatsapp group எற்படுத்தி இச்சிறியோனையும் அக்குழுவில் உள்ள நல்லிதயமீக்க நண்பரினால் இணைக்கப்பட்டேன்.
எவ்வாறு இக்குழு உருவானதெனில் அத்துறையில் உள்ள கருணையே வடிவான உயர் பெண் அதிகாரி அப்பேரிடாரின் பொழுது கூவம் அற்றங்கரையின் பாலத்தில் நின்று கவனித்தப் பொழுது குடிசைவாழ் பெண்களின் மேற்குறித்த துயரத்தை மனதில் உள்வாங்கி whatsapp group தொடங்கி சென்னையின் அனைத்து குடிசைப் பகுதிகளிலும் நாப்கின்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் தேவையானப் பொருட்கள் வழங்கி இறுதியில் whatsapp group அவரால் நல் உள்ளங்களுக்கு வாழ்த்துச் சொல்லி முற்றுப் பெற்றது சார்.
இச்சிறியோனும் அவர்களால் அன்றுணர்ந்தேன் வலியை இரு பெண் குழந்தைகளின் தகப்பனாக..

*
Excellent ....
இதை எழுதக்கூட ஒரு தைரியம் வேணும்....
கடவுளையே சபிக்கத் தோணும் பல கடினமான நேரங்கள்ல....
என்ன செய்ய....

*

படித்தவர்களே சில நேரங்களில் சில இடங்களில் பேச முடியவில்லை

*
இன்றைக்கும் எங்கள் நிறுவனத்தில் மாதவிடாய் ஏற்பட்டதை வெளிப்படையாக சொல்ல தயங்கும் பெண்களே அதிகம்.

*
People don’t have awareness about mensuration .. let us forward max

*

இங்கே பல பெண்களின் நிலைப்பாடு இது தான்..மெனோபாஸ் காரணமாக பதினைந்து நாட்களாக உதிரப் போக்கு அவஸ்தை மூன்று நாட்கள் மருத்துவ விடுப்பு முடிந்து இன்று ஓரளவு பரவாயில்லை என்று பணியில் வந்தேன் .திங்கள்தான் பணியில் சேரலாம் என்று இருந்தேன் ..கடுமையாகத் தான் பேசினார்கள் எங்கள் தலைமை ...கண்களில் நீரொடு கடமை யாற்ற வேண்டிய சூ ழல் .நீங்க அந்த பெண் கிட்ட கேட்டத்தும் அவள் ரியாக்சனும் நெகிழ வைத்து விட்டது .பெண்கள் எல்லோரும் இதைக் கடந்து வந்தாலும் சக பெண்களிடம் ஏன் இப்படி இருக்கிறார்கள்..சில இடங்களில் மாமியார் தொல்லை..சில இடங்களில் கணவர் .சில இடங்களில் உயரதிகாரிகள்...

பெண்களுக்கான பிரச்சனைகளை இவ்வளவு அழகாக பெண்களால் கூட சொல்ல முடியாத அளவு அருமையாக நட்புணர்வுடன், தந்தையுள்ளத்துடன் எழுதிருக்கீங்க...

*

படிப்பவர்களை யோசிக்கவும் பின்பற்ற வைக்கவுமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது

*

இந்த விடயங்களில் நம் வீடுகளில் பெண்களுக்குப் பெண்களே தனிமைப்படுத்துகிறார் களே... அம்மாக்கள் நாசூக்காகவும்.... மாமியார்கள் அதட்டலாகவும் ... பிறகு நாம் என்ன செய்ய ...

*


பள்ளிக்கு செல்லும் குழந்தை மாலை வரை ஒரே நாப்கினை பயன்படுத்தினால் புற்று நோய்க்கான வாய்ப்பு அதிகம் என்பதால் 20162ல் ஜேஸீஸ் மண்டலம் 17-ன் தலைவரின் சிறப்பு திட்டமாக நாப்கின் லெண்டிங் மிசின் இன்சினேட்டர் மிஷின்களை அரசு பள்ளிகளில் நிறுவும் திட்டத்தை கொண்டு வரப்பட்டது. அது 2016 ஆம் ஆண்டு தேசிய தலைவரின் திட்டமாக அறிவிக்கப்பட்டு இந்தியா முழுவதும் செயல் படுத்த பட்டது.

*

பெரிய படிப்பில்லாதவராக இருந்தாலும் எங்க அப்பா, இதில் ரொம்ப அட்வான்சாக இருந்தாங்க. நான் சிறுவனாக இருந்தபோது அம்மா மறைத்து வைத்திருந்த நாப்கினை எடுத்து இது என்ன என கேட்க, அம்மா என்னை திட்டிவிட்டு அதை பிடுங்கி வேறு மறைவான இடத்தில் வச்சிட்டாங்க.

அப்பா தோட்டத்தில் இருந்து வந்தவுடன் இதை நான் சொல்ல, உடனே அப்பா அந்த நாப்கினை எடுத்து வந்து எனக்கு புரியும் வகையில் சொன்னாங்க.

*

நான் எனது வகுப்பறையில் குழந்தைகள் இது பற்றி வெளிப்படையாக ,உரிமையாக , தைரியமாக வெளிப்படுத்த வழிகாட்டி உள்ளேன்

*

ஆணுக்குத் தெரிந்தாலும் தெரியக்கூடாத விஷயமாக ஏன் பார்க்கிறது இச்சமூகம்.!!!

*

முகத்திரையை கிழிக்கும் அற்புதமான விவரணை ங்க அண்ணா....

*

Excellent uncle... my husband mugam sulikkum pothu ennaku romba kastamaa irrukum...periods pathi naan ethana mura sonnaalum atha purinkittathe illa...

*

Fantastic..Happy to come know that important and positive thought processes are going on...This will simply help both the gender to uplift mankind..

*

very touching anna. But here college girls are conveying freely. This trend should spread in nook and corners

*



No comments: