யாசகமிடும் காலம்

பசித்த மௌனமொன்று
யாசகம் கேட்டு
உறங்கும் சொற்கள் 
நிரம்பித் தளும்பும்
அறையின் கதவை
நெடுநேரமாய்த்
தட்டியபடி

கதவு தட்டும் சப்தம்
பேரொலியாய் இருப்பது
சொற்களுக்கு மட்டுமல்ல
மௌனத்திற்கும் முரணாய்

யாசித்திருக்கும்
மௌனத்திடம்
எந்தச்சொல்லை
யாசகமிடுவதென
மௌனமாய் யோசித்தபடி
காலம்!

4 comments:

Unknown said...

என்ன சொற்களை இட்டு பின்னோட்டம் இடுவது என்று நானும் நெடுநேரம் யோசித்தப்படியே .. அருமை .

Unknown said...

பாவம்....மெளனத்த ரொம்ப படுத்துறீங்க....பேசிட வேண்டியது தானே.....ஆனா மெளனத்தை இட்டு சொற்களால் இட்டு நிரப்பிய கவிதை அழகு

Unknown said...

silence is a signed blank cheque...everyone can write,what they like....

Pandiaraj Jebarathinam said...

சிறப்பான வரிகள்...

பசிக்கும் மௌனத்திற்கு
சொற்கள் தேடிய போது
கிடைத்ததை ரசிக்க
மனம் பழகிவிடுமோ..