செருப்பில்லாதவன் நடக்கும்
பாதையிலே உமிழ்ந்த எச்சில்
காலணிக்குள் உறுத்துகிறது
சிறு கல்லாய்...
புகைவண்டியில் சீப்பு
விற்கும் குருடனிடம்
பேசிய பேரம் எரிகிறது
கண்ணுக்குள் நெருப்பாய்..
அழுகையோடு உறங்கிய
என் குழந்தையின் கண்ணீர்
இரவு முழுவதும் மழைநீராய்
சொட்டுகிறது கனவில்......................
Subscribe to:
Post Comments (Atom)
வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்
பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...
-
பருவ மழை பொய்த்துப் போய் விடும், வறட்சி தாண்டவமாடும், எல்லோரும் செலவுகளைக் குறைப்போம் என விளம்பர யுக்தியோடு நாடு முழுதும் அரசியல் வாதிகள் அற...
-
ஒரு படைப்பாளி மனதில் மிதந்து கொண்டிருந்த விசயங்களை இறக்கி வைக்கும் ஒரு தளமாகவே பெரும்பாலும் வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கிறான். ஆரம்பத்தில் இலக...
-
வழக்கமான பொழுதுகள் வழக்கம்போல் கடந்து போக , துக்கம் பீடிக்கும் நொடிகள் நகர மறுத்து மனதிற்குள் கனத்தை ஏற்றிக்கொண்டே இருக்கின்றன. நேற்ற...
21 comments:
பிரமாதமான வரிகள் அண்ணே...
முகத்திலடிக்கும் குறுங்கவிதை.
நெடு நாள் கழித்து கிடைத்திருக்கிறது.
ஒளித்து வைக்காத பொருட்களோடு
நிஜத்தை விவரிக்கும் தரமான கவிதைகள்.
முன்னேறுங்கள் கதிர் அருமை.
இப்போதுதான் படித்தேன் எல்லாப்பதிவுகளும்
ஈர்ப்பு மிகுந்தவை.
வாருங்கள் பதிவுலகுக்கு இதுபோல
நல்ல பொருள் பொதிந்த தீக்கவிதை
தாருங்கள்
பாராட்டுகளுக்கு நன்றி... இங்கிலீஷ்காரன்
அன்பு காமராஜ்..
//இப்போதுதான் படித்தேன் எல்லாப்பதிவுகளும்
ஈர்ப்பு மிகுந்தவை//
தங்களின் ஆழமான பாராட்டிற்கும்,
வாழ்த்திற்கும் நன்றிகள்.
//ஒளித்து வைக்காத பொருட்களோடு
நிஜத்தை விவரிக்கும் தரமான கவிதைகள்.//
தங்கள் பாராட்டே இனிய கவிதையாக இருக்கிறது...
அசாத்தியமான கவிதைகள்
இதுக்கு வாழ்த்தாம போனா எனக்கும் மனசு உறுத்தும்
மனது இனிக்கிறது வசந்த்.... நன்றி
நல்ல கவிதைகள்.
ஹைக்கூ மூன்று வரிகளுக்குள் அடங்க வேண்டுமில்லையா?
//ஹைக்கூ மூன்று வரிகளுக்குள் அடங்க வேண்டுமில்லையா?//
நன்றி... ஜோ.. முயற்சிக்கிறேன்
dv
அருமை அருமை கவி கதிர்!
// kk said...
dv//
!!!????
நன்றி... பழமை
Very srong & powerful thoughts. Nice one
நன்றி பாஸ்கர்
வெகு அருமை. உறுத்தல்கள் தொடர்கையில் பழக்கங்கள் தானாக மாறிவிடும். உறுத்தலே இல்லாதவர்களுக்கு? நல்ல கவிதை கதிர்!
நன்றி ராமலக்ஷ்மி
ஒவ்வொரு கவிதையும் உறுத்துகிறது கதிர்.. சிறப்பு!!
அருமையான கவி வரிகள் தோழரே .....
அருமையான கவி வரிகள்
தோழரே....
True lines!
Post a Comment