Jul 10, 2009
உறங்காத முயல்குட்டியாய்
வெயில் தணியும்
மாலை நேரமது
கிழக்கு நோக்கி
மெல்ல நடக்கின்றோம்...
நிழல் நீண்டு
வளர்ந்து கொண்டிருக்கிறது
என் மேல் இருக்கும்
உன் நேசம் போல்...
வெதுவெதுப்பாய்
முதுகில் தடவும் சூரியன்
கதகதப்பாய்
இதயத்தில் முழுதும் நீ...
நடக்கும் அசைவில்
உரசிப் பற்றும் விரல்களில்
சொட்டுச் சொட்டாய்
ஊடுருவுகிறது புத்துணர்ச்சி...
உன் கண்கள் படபடத்து
பேசும் போதெல்லாம்
என் உதடுகள்
இரண்டும் உறைநிலையில்
நீ மௌனிக்கும்
நிமிடங்களிலெல்லாம்
மணந்து கொண்டிருக்கிறது
நீ பேசிய வார்த்தைகள்...
உன் உள்ளங்கையில்
என் முகத்தை ஏந்துகையில்
உலகம் சுருங்குகிறது
உள்ளம் விரிகிறது...
குளிர் சூழும் இரவுகளில்
மூடிய போர்வைக்குள்
கதகதப்பான முயல்குட்டியாய்
உறங்காமல் உன் நினைவு...
~
Subscribe to:
Post Comments (Atom)
வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்
பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...
-
க ண்ணுக்குத் தெரியாத மின் காந்த அலைகளினூடாக பின்னப்பட்ட வலைத்தளம் இணைத்து வைத்த உறவுகளை பெரும்பாலும் வாசிப்பிலும், பின்னூட்டங்களிலும் சில ச...
-
பருவ மழை பொய்த்துப் போய் விடும், வறட்சி தாண்டவமாடும், எல்லோரும் செலவுகளைக் குறைப்போம் என விளம்பர யுக்தியோடு நாடு முழுதும் அரசியல் வாதிகள் அற...
-
ஒரு படைப்பாளி மனதில் மிதந்து கொண்டிருந்த விசயங்களை இறக்கி வைக்கும் ஒரு தளமாகவே பெரும்பாலும் வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கிறான். ஆரம்பத்தில் இலக...

4 comments:
நிழல் நீண்டு
கொண்டே போகிறது
என் மேல் இருக்கும்
உன் பாசம் போல்...
சூப்பர் யார் அந்த கொடுத்து வைத்த தேவதை. அந்த தேவதை மேல் தான் யவளவு நம்பிக்கை Super Kathir Keep it up
அந்தி நேர தென்றலாய் கவிதை செம டச்
Nice lines!
பலமுறை படிக்க தூண்டிய அழகு கவிதை...உணர்வை கவிதையாய் மாற்றுவதில் கில்லாடி..அத்தனை சொற்களும் அழகு சேர்க்கின்றன காதல் காவியத்திற்கு.....
Post a Comment