Jun 9, 2012

கீச்சுகள் - 19




நித்தியானந்தா கதாநாயகனாக நடித்தால்ஆன்மீக ஸ்டார் நித்தினு ரசிகர் மன்றம் ஆரம்பிக்க ஒரு கூட்டம் இருக்கும் போல!
#கலை தாகமாம்!

*

கணினிக்குள் மாபெரும் மாய உலகம் கண்டதிலிருந்து, கணினியை அணைத்துவிட்டு, சாலையில் இறங்கினால் வேறொரு உலகம் இருப்பதை மறந்துபோகிறோம்.

*

'பயங்கரவாதிகள் கொடூரமாக இருக்கின்றனர்' - பிரதமர்
# சார், உங்க இனிய நண்பர் ராஜபக்சேவை விடவா சார்!?

*

பொருளைப் பயன்படுத்தாத பிர(ரா)பலங்களே பெரிதும் அந்தப் பொருட்களுக்கு விளம்பரம் செய்கின்றனர்.

*

இலங்கை தமிழர்கள் மீது திமுகவுக்கு அக்கறை இல்லை - நாராயணசாமி #இன்ன்னோரு மொற சொல்லுங்ங்ங்ங்க!

*

ஆணவப் பூச்சு உதிரும் தருணம் உன்னதமானது!

*

தி.மு : எதைக்கேட்டாலும் மௌனத்தையே பதிலாகத் தந்தாய்!
தி.பி : மௌனத்தை கேட்டால் வார்த்தைகளையே பதிலாகத் தருகிறாய்!
# தி-திருமணம் :)

*

கல்யாண் ஜுவல்லர்ஸ் விளம்பரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய்க்கு ரூ. 20 கோடி #அய்யய்யோ, பிரபுவின்புரட்சி போராட்டம்தோத்துப் போயிடுச்சா!?

*

என்ன மாயமோ, மந்திரமோ தெரியல, நேற்று நான் சந்தித்த நபர்கள் அனைவருமே அன்பானவர்களாகவே தெரிந்தார்கள். மாற்றம் அவர்களிடமா? என்னிடமா?

*

விஜய் டிவிநீங்களும் வெல்லலாம் ஒரு கோடிநிகழ்ச்சியில் கலைஞர், ஜெ., கேப்டன் இவங்கெல்லாம் எப்ப பங்கெடுப்பாங்கன்னு ஆவலோடு இருக்கிறேன்!

*

360+ நாளும் கண்டுக்காம பொங்கல், புத்தாண்டு, தீபாவளிக்கு வாழ்த்துகளா வாரி வழங்குறவங்க அன்பை நினைச்சு மனசு கனக்குதே
#செரிங்க சேம் டூ யூ! :)

*

உங்களுக்கு தலைக்கனம் இருக்கிறதா இல்லையா என்பதை தயவுசெய்து நீங்கள் தீர்மானியுங்கள். மற்றவர்கள் தீர்மானிப்பதைப் பெரிதாக எடுக்க வேண்டியதில்லை!

*

மனசுக்கு விருப்பமானவர்களைச் சந்திப்பது, மிகவும் பிடித்த மலரின் வாசனையைச் சுவாசிப்பதற்கு நிகரானது!

*

மளிகைக்கடை முதல் உணவுவிடுதி வரைபில்கொடுத்தால், அதை எத்தனை பேர், பில்லை சரிபார்க்கிறோம்? சரிபார்க்காமல் விடுவது எத்தகைய மனோபாவம்?

*

இன்னும் கிடைக்காததை விட, அடைந்தது கை விட்டுப் போவதுதான் பெரும் துக்கம்.

*

நிலநடுக்கம் நிலத்தை மட்டும் அசைத்துப் பார்ப்பதில்லை. மனிதர்களின் கர்வத்தையும் நம்பிக்கையும் கூட அசைத்துப் பார்க்கத்தான் செய்கிறது. :(

*

பாகிஸ்தானிடம் 90 -110 அணு குண்டுகள்.. இந்தியாவிடம் 80 மட்டுமே.
# மன்மோகன் : அண்ணே நாங்க எட்டாவது பாஸ், நீங்க பத்தாவது ஃபெயில்ண்ணே!

*

எதிர்பாராமல் அமைவது எதிர்பார்த்தால் அமைவதில்லை

*

அரசியல் கரை(றை) வேட்டியோடு வரும் ஒட்டு உறவுகள் கூட, ஒட்டு உறவாகத் தெரியாமல், ”அவங்க எதோ வேற சனம்ப்பாஎன்பதுபோல் தோன்றுகின்றனர்.

*

மனதில் தோன்றுவதில் சில, நிறைவேறாமல் இருப்பதே ஒருவித சுகம்!

*

Twitterல் Follower, Retweet, Favorite குறித்து சிந்திக்க, பேச ஆரம்பித்துவிட்டோமெனில் Twitterக்கு அடிமையாகி விட்டோமென்று அர்த்தம் #FB too

*

ஆணவத்துடன் கூடிய அதிகாரம் மிகுந்தவர்களுக்கு ஓய்வுபெறுதல் தான் மிகப்பெரிய தண்டனை.

*

வாங்க நல்லாருக்கீங்ளாஎன பலர் கேட்பது நம் நலம் அறிய மட்டுமல்ல. சம்பிரதாயங்களைத் தாண்டி நாம் நலமாய் இருக்கவேண்டும் எனும் நினைப்பிலும்தான்!

*

இருக்கும் நிலவை, இல்லாது போகும் மின்சாரமே வெளிச்சமிடுகிறது

*

கோபத்தோடு ஒருவரை சந்திக்கச் சென்றேன். ”ஒரு சின்ன உதவி, ஏழைப்பசங்க இருந்தா சொல்லுங்க, படிக்க வைக்கலாம்என்றார். அமைதியாய் திரும்பினேன்

*

பாகிஸ்தான் செல்கிறார் ராகுல் # பீகார், தமிழ்நாடு, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் புகழ்பெற்ற ராகுல் பல்பொடி இனி பாகிஸ்தானிலும் கிடைக்கும்

*

இந்திய அணுமின் நிலையங்கள் குறித்து இலங்கை அச்சம் # பொறுங்கப்பா பொறுங்கப்பா எங்க ஊரு அணு விஞ்ஞானி நாராயணசாமியை அனுப்பி வைக்கிறோம்

*

மீண்டும் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது என்னை நானே!

*

'சரக்கு' விற்பனைக்கு டாஸ்மாக் கடைகளில் இலக்கு நிர்ணயிக்கவில்லை- தமிழக அரசு
# குடிமகன்கள் இருக்க பயமேன்னு விட்டுட்டீங்க போல!

*

.பி.எல் போட்டிகள் சூதாட்டத்தில் 75,000 கோடி # டேய்ய்ய்ய்ய்ய்ய்... நல்லாருங்கடா!

*

யார் யாரையோ  மன்னிக்கிறோம். என்னை நீயும்,  உன்னை நானும்  மன்னிக்க மாட்டோமா?

*

நில அபகரிப்பு வழக்கு சலிச்சுடுச்சாம், நரசிம்மாலட்ரான்ஸ்பார்மரைவெடிச்ச கேப்டன் மேலமின் மோசடிவழக்கு போடலாமனு யோசிக்கிறாங்களாம்!

*

நண்பர்களோடு இருக்கும் நிழற்படங்களில், நம்மை மட்டுமே தேடித்தேடி ரசிப்பதற்கு(!) பெயர் என்ன?

*

இருப்பதை வைத்து மகிழ்ச்சி கொள்ளவேண்டும்என்பவர், ஒன்று குறைவாகவே வைத்திருப்பவராக இருக்கிறார் அல்லது நன்றாக சமாதானம் சொல்றவரா இருக்கிறார்

*

எட்டாம் வகுப்பு மாணவிக்கு ஆபாச SMS அனுப்பிய ஆசிரியர் கைது # எட்டாங்கிளாஸ் புள்ளைக்கு எதுக்குடா செல்போனு. உங்க விஞ்ஞான ஆசைக்கு அளவேஇல்லையா?

*

வர்ணப்பூச்சுகளோடு கற்பனை சுவாரசியமாக இருக்கின்றது. நிஜம்நிஜம் போலவேஎளிமையாக இருக்கின்றது


*

முட்டாளிடம் விவாதிக்கும் போது, ”நான்தான் முட்டாள்என ஏற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம்!

*

ராமதாஸ் 10 சீட் வாங்கட்டும்.. நான் கட்சியையே கலைத்து விடுகிறேன் - வேல்முருகன்
# சண்ட போடாதீங்க ஏட்டய்யா! ? :)))

*

சசிகலா வெளியே போனதுக்கு அத்தன பேர் பட்டாசு வெடிச்சாங்களே? உள்ளே வந்ததுக்கு ஒரு பயலாச்சும் பட்டாசு வெடிச்சாங்களா? # கொளுத்திப்போடே!

*

ஈரோட்ல இருக்கிற மூனேமுக்கா ரோடுல மட்டமத்தியானத்துல, வெயில் மண்டையைபிளக்க இத்தனபேர் போறாங்ளே, வெயில வேடிக்கை பார்க்கப்போறாங்ளோ? #Traffic

*

முதல்ல 2 இத்தாலி வீரர்கள் கேரளாவில் கைது, அடுத்து ஒடிசாவில் 2 இத்தாலியர் கடத்தல்
#நாமும் இத்தாலியர்களும் ஒன்னுக்குள்ளே ஒன்னாயிட்டோம்டா :)

*

அளிப்பவர்களுக்குத் தெரியாது அன்பின் அடர்த்தியும் அளவும், உள்வாங்கி அனுபவிப்போருக்குத்தான் தெரியும்.

*

மன்மோகன்சிங்கை குடியரசுத் தலைவராக்கத் திட்டம்!? # இந்தப் பதவிக்கு 10 வருசம் முன் அனுபவம் பெற்ற ஒரே ஒருவர் இவர்தான் :)

*

சோகத்தில் இருக்கும்போது சோகப்படுத்துனவங்களை விட, சோகப் பாட்டு போட்டு கொல்லுறவங்க மேலதான் கொலவெறி வருது!

*

ஈரோடு டாஸ்மாக் - புரட்சி திட்டம் - ஹோம் டெலிவரி
# அதெல்லாம் சரிய்யா.... டெலிவரி சரக்கா? மட்டையாகுற ஆளா?

*

கரகாட்டம் ஆடும் பெண்ணின் ரவிக்கையில், பணம் குத்துற ஈனத்தனமா நுட்பத்தை இன்னும்கூட கடைப் பிடிக்கிறாங்கப்பா #வல்லரசாயிடுவோம்யா :(

*

"உங்க கவிதை புரியவே மாட்டேங்குது" என்றார் வருத்தமாக. "ஆமாங்க அந்தக் கருமம் எனக்கும்தான் புரியறதில்லை" என்றேன். சந்தோசமாகப் போனார் :)

*

ஏப்ரல் 1 - நம்மை ஏமாற்றும் குழந்தைகள் ஏமாறாமலிருக்க ஏமாந்தது போல் நடித்து ஏமாற்றுகிறோம் # இருவருக்கும் வெற்றி :)

*


Jun 3, 2012

சீனத் திரைப்படம் - Raise the Red Lantern

தன் தாயின் வற்புறுத்தலில் கல்லூரிப் படிப்பை விட்டுவிட்டு ராஜகுடும்பத் தலைவனின் நான்காவது மனைவியாக காலடி எடுத்து வைக்கிறாள் 19 வயது நாயகி சோங்க்லியன் (கோங்க் லீ).

நான்காவதாக மனைவியாய் வந்த சோங்க்லியன் உடன் உறவு வைத்துக்கொள்ள வரும் தலைவனை, உடல்நிலை சரியில்லை என்றழைக்கும் மற்ற மனைவிகளின் செயல்களில் துவங்குகிறது சிக்கல். மூன்று மனைவிகளால் தோற்றுவிக்கப்படும் உணர்வு அரசியலும், நான்காவது மனைவியாக வந்த சோங்க்லியன் அதை எதிர்கொள்ள நிகழ்த்தும் அரசியலும் என கதை மிக நுண்ணிய உணர்வுகளை பூத்தபடி நகர்கிறது.



ஒவ்வொரு மனைவியும் தங்கள் வீடுகளுக்கு முன்பு பிள்ளைகளோடு, வேலைக்காரப் பெண்மணிகளோடு சிங்காரித்து நிற்க, அந்த இரவு யாரோடு என்பதை தலைவன் முடிவுசெய்ய, அந்த மனைவியின் வீடு சிவப்பு லாந்தர் விளக்கு வைக்கப்படுகிறது. தலைவன் தங்கும் மனைவிக்கு கிடைக்கும், சிவப்பு லாந்தர்கள் ஏற்றப்படும் அங்கீகாரமும், கவனிப்பும், கால் மசாஜ் சுகமும், வேலையாட்களின் மரியாதையும், அடுத்த நாள் உணவை முடிவுசெய்யக் கிடைக்கும் உரிமையும் என, ஒவ்வொருவரும் தனக்கான காய்களை நகர்த்த காரணங்கள் நிறைய.

மனைவிகளில் தலைவியாய் திகழும் முதல் மனைவியும், சூதும்வாதும் நிறைந்த இரண்டாம் மனைவி, மருத்துவரோடு ரகசியத் தொடர்பு கொண்டிருக்கும் ஓபெரா பாடகியான மூன்றாவது மனைவி, மனைவி எனும் இடத்தை அடைய நினைக்கும் வேலைக்காரப் பெண், நான்காம் மனைவி படுக்கையில் இருந்து சென்ற சிறிது நேரத்தில் வேலைக்காரப் பெண்ணை அணைக்கும் தலைவன் எனும் உலகத்திற்குள் சோங்க்லியன் பொருந்தியும் பொருந்தாலும் படும் அவஸ்தை, ஒவ்வொரு பெண்ணும் பல சந்தர்பங்களில் மென்று முழுங்கிக் கடந்து செல்லும் நிதர்சனங்கள்தான்.

முதல் மனைவின் மகன், விடுப்பில் அரண்மனைக்கு வருகிறார். அவன் ஏற்கனவே சோங்க்லியனோடு நட்பு கொண்டிருந்தவன்.

இரண்டாம் மனைவி நான்காம் மனைவியை தனக்கு முடி வெட்டிவிடப் பணிப்பதும், நான்காம் மனைவி இரண்டாம் மனைவியை முதுகு அமுக்கிவிட வைப்பதும் என ஒவ்வொரு மனமும் பழிதீர்க்க தனக்கான வாய்ப்புக்காக காத்திருக்கின்றன.

சோங்க்லியனின் இரவுகளை மற்ற மனைவிகளும் களவாட, தனக்கான இடத்தை தக்கவைக்க, பொய்யாய் கர்ப்பம் என சோங்க்லியன் சொல்ல அவளுக்கு திடீரென அதீத மரியாதை கிட்டுகிறது.

கர்ப்பம் பொய் என வேலைக்காரப் பெண் இரண்டாவது மனைவி வாயிலாகக் காட்டிக்கொடுக்கிறாள். சோங்க்லியன் வேலைக்காரப் பெண்ணின் மீறல்களைக் காட்டிக்கொடுக்க, முதல் மனைவி வழங்கிய தண்டனையில் வேலைக்காரப் பெண் செத்துப்போகிறாள். அவள் சாவுக்கு தான்தான் காரணம் என சோங்க்லியன் தனக்குள் வதைபடத்தொடங்குகிறாள்.

தனிமை அவளைச் சிதைக்க, பிறந்த நாளன்று அதிகமாய் மது அருந்தி, முதல் மனைவியின் மகனோடு ரகளை செய்கிறாள். பொய்க் கர்ப்பம் என பொய் சொன்னது முட்டாள் தனம் என்கிறான் முதல்மனைவியின் மகன். இல்லை, அது புத்திசாலித்தனம், கர்ப்பம் எனச் சொன்னது பொய் என்றாலும், அது முதற்கொண்டு தன்னோடு தங்கும் கணவன் மூலம் விரைவில் கர்ப்பம் அடைந்துவிட தான் திட்டமிட்டதையும், மற்ற மனைவிகள் அதைக் கெடுத்ததையும் கொட்டித் தீர்க்கிறாள்.

மிதமிஞ்சிய போதையில் இருக்கையில், அங்கு வரும் இரண்டாம் மனைவியிடம், மூன்றாம் மனைவிக்கும் மருத்துவருக்குமான ரகசிய உறவு குறித்து போதையில் உளறுகிறாள். மூன்றாம் மனைவி நகரத்து விடுதி அறையில் கையும் களவுமாக பிடிபட்டு அரண்மனைக்கு இழுத்து வரப்படுகிறாள். அரண்மனையின் மேல்தள அறையில் கொடூரமாய் தண்டனையாகத் தூக்கிலிடப்படுகிறாள். அவள் சாவுக்கும் தான்தான் காரணமென நினைக்கும் சோங்க்லியன் மனச்சிதைவுக்கு ஆளாகிறாள்.

அடுத்த கோடைகாலத்தில் அரச குடும்பத் தலைவனுக்கு ஐந்தாவதாக மனைவி ஒருத்தி வருகிறாள். ஐந்தாவது மனைவியின் அறைமுன்பு சிவப்பு லாந்தர் ஒளிர்கிறது, கால் மசாஜ் நடக்கிறது, இங்கிருந்து இன்னொரு கதை துவங்கலாம்….

1920களில் நடந்த கதை, 1991ல் வெளிவந்த சீனப் படம்.

பருவநிலை மாற்றங்கள், அரண்மனை, விளக்குகள் ஏற்றப்படும் அழகிய நிகழ்வு, உடை, பனிப்பொழிவு, இசை என ரசிக்க எத்தனையோ இருந்தாலும். அந்தப் பெண்களில் உள, உணர்வுப் போராட்டங்கள் மட்டுமே விஞ்சி நிற்கின்றன. அது தவிர்த்து வேறு எதையும் ரசிக்க அனுமதிக்காததே இந்தப் படத்திற்கான வெற்றியும் கூட!

-0-

May 31, 2012

கீச்சுகள் - 18



அடிமையாகிவிட்ட ஒன்றை மற்றவர்கள்அதற்கு நீ அடிமையாகி விட்டாய்என்று பரிகசிப்பதைத் தவிர்க்கவே, அதை அதீதமாய் சிலாகிக்கிறோம்!

~

டீசல் விலை ஏறினப்போ பஸ்நிலைய கழிவறையில சிறுநீர் கழிக்க 1 ரூவா ஏத்தின சமூகத்துல, மின் கட்டண உயர்வுக்கு எங்கெங்கு விலை உயரப்போகுதோ தெரியல!?

~
அரசியல் தலைவர்களை கொலை செய்தவர்களைத் தண்டிக்க துடிப்பதிலும், விடுவிக்க முயல்வதிலும் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது! #அரசியல்ல சாதாரணமப்பா!

~

காலப்போக்கில் தொலைந்து போனவை, தீர்ந்து போனவை, மீட்க முடியாதவைமறக்க முடியாதவைபட்டியலில் தானே சேர்ந்துகொள்கின்றன!

~

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைச்ச பிறகு ஒழுங்கா சோறு போட மாட்டாங்களா!? ரொம்ப இளைச்சு, குண்டர் சட்டம் ஒவ்வொன்னா ரத்தாகுதே?

~

ராமஜெயம் கொலைக்காக தினத்தந்தி செய்தித்தாளோடு தேநீர் கடையில் ஒருவர் பொங்கிக்கொண்டிருந்தார் தேநீரைவிட சூடாக #தேநீர்கடை அரசியல் சுவாரசியம்

~

நீ சுறுசுறுப்பாய் இயங்குகையில் எனக்குள் கிறுகிறுப்பு நிரம்புகிறது, நீ சோம்பல் முறிக்கையில் என்னுள் அசதி கரைகிறது.

~

விசுவாசம்என்பதைவிசு வாசம்னு தப்பா எழுதுறவங்களை என்ன பண்றது!

~

தீனி போட்டா சமத்தா ஓடுது, பட்டினி போட்டா தறிகெட்டு ஓடுது ..... கற்பனைக் குதிரை

~

மத்திய அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுவிட்டது - பாஜக # அங்கே மட்டுமா, மத்திய அரசுக்கும் மக்களுக்குமே பெரிய இடைவெளிதானே!

~

ஐசிஐசியை ப்ரடன்சியலில்அப்பா ஆகறதுக்கு லைசென்ஸ்தர்றாங்களாமே! - அமிதாப் சொல்றாரு # லைசென்ஸ் கூடவே ஸ்கூல் ஃபீஸும் கொடுத்துட்டா பரவாயில்ல

~

சரியான நேரத்தில் தவறவிட்டுட்டு, தவறான நேரத்தில் தவிப்பது ரயில் மட்டுமல்ல, திருமணமும்தான்.

~

மரணம் குறித்து ஒரு முறையேனும் பயம் கொள்ளாதவன், இன்னும் பிறக்காதவன் மட்டுமே!

~

கிழக்கே மீனவர்கள் தாக்குதல், மேற்கே முல்லைப்பெரியாறு, தெற்கே கூடங்குளம், வடக்கே காவிரி # இந்தியன் என்பதில் பெருமிதம் கொல்

~

சினிமாவில் நடிக்க பிரதமரிடம் அனுமதி பெற்றேன் - நெப்போலியன்
#
உங்களுக்கு அனுமதி கொடுக்க அவரு சோனியாகிட்டே அனுமதி வாங்கினாரா?

~

மின் வெட்டு குறித்து அதிகமாக, மிக அதிகமாக, மிகமிக அதிகமாக தமிழன் கோவப்படும் இடம், டாஸ்மாக்கில்கூலிங் பீர்கிடைக்காத மதிய நேரத்தில்தான்!

~

கிடைக்காத பொழுது தேடப்படுவதாகவும், கிடைக்கும் பொழுதில் அவசியமற்றதாகவும் இருக்கின்றன. # நிறைய!

~

கோடைக்கு நீர்மோர், குடிநீர் பந்தல் - கட்சியினருக்கு ஜெ. வேண்டுகோள்
#”
விலையில்லா நீர்,மோர்காசுக்கு கரண்ட் தராம, எதெதையோ இலவசமா தர்றீங்க

~

ஒருவனை அடித்து துவைப்பதைவிட, அவதூறினைப் பரப்புவதே கொடும் வன்முறை

~

பேச நிறைய இருப்பதும், பேச ஒன்றுமே இல்லாததும் காதல்

~

மாண்புமிகு அம்மாவின் அரசு, மாண்புமிகு அம்மாவின் அரசு, மாண்புமிகு அம்மாவின் அரசு……” - .பன்னீர்செல்வம் #‘தமிழக அரசுஎன்பதையும்மாண்புமிகு அம்மாவின் அரசுனு மாத்திடுவாங்களோ!?

~

இவ்ளோ தூரத்துல இருக்கிற நமக்கே இப்படி சுடுதே! அங்கேயே இருக்கிற சூரியனுக்கு எவ்ளோ சுடும்! # வெயில் ஜாஸ்திப்பா! :))))

~

கண்டபடி உயரும் சென்னை வீட்டு வாடகை # இன்னும் கொஞ்சநாள்ல வீட்டோட மொத்த விலையையே ஒரு மாச வாடகைனு கேட்டாலும் கேப்பாங்க போல!

~

ஆயுதம் ஏற்படுத்தும் கண்ணீரை விட அன்பு ஏற்படுத்தும் கண்ணீர் பெருவெள்ளமாகப் பாயக்கூடியது.

~

டாஸ்மாக் பார் வாசல் சுவரில் சாய்ந்தவாறு தேநீர் அருந்துபவன் ஒரு ஹைகூ கவிதையாய்த் தென்படுகிறான்!

~

19 வயது நண்பனுக்கு மது கொடுத்து, மப்பில் போதை ஊசி போட்டு, கழுத்தை நெரித்து கொலை. செய்தவர்கள் வயது 20-21
# என்னமோ நடக்குது இந்தியாவில் :(

~

”Sorry” எனும் வார்த்தை எப்போதும் உதட்டிலிருந்து, எப்போதாவது உள்ளத்திலிருந்து!

~
வறுமைக்கோடு எவ்ளோனு கணக்குப் போடத்தெரியாத கபோதிகதான் வறுமையை ஒழிக்க திட்டமும் போடுமோ! :(

~
நகர்புறத்தில் வறுமைக்கோடு 28 ரூபாய்னு கண்டுபிடிச்ச விஞ்ஞானிகிட்டே 1 ரூபா கூட போட்டுக்கொடுத்து ஒரு நாளைக்கு பொழப்பு நடத்துனு சொல்லனும்!

~

பணப் போராட்டத்தையே பல நேரங்களில் மனப் போராட்டம் எனக்கொள்கிறோம்!

~

6ஜி, 7ஜி, 8ஜி வர்ற வரைக்கும் 2ஜி வழக்கை நடத்துவாங்களோ!? #டவுட்டு!

~
பலநேரங்களில் துன்பங்களை ஆற்றுப்படுத்துபவை மற்றவர்களின் பெருந்துன்பங்களே

~
இரண்டாவது இடம் யாருக்கு எனும்ஈகோவிற்காகவே நடத்தப் பட்டிருக்கிறது சங்கரன்கோவில் இடைத்தேர்தல்! :)

~

இந்தியாவில் ஏழைகள் 9% குறைந்துள்ளனர். வறுமைக்கோடுக்கான வருமானம் ரூ 5-10னு சொல்லியிருந்தா இன்னும் குறைஞ்சிருப்பாங்களே.

~

பள்ளி கல்லூரி புரிய வைக்காதகெமிஸ்ட்ரியைபருவம் புரிய வைக்கின்றது!

~

காலையில் வீதி முனைகளில், பிள்ளைகளை பள்ளி வாகனத்தில் திணித்துவிட்டு, வீடு திரும்பும் பெண்களின் முகத்தில் ஒரு விடுதலை உணர்வு தெரிகிறது #நகரம்

~

சூதும் வாதும் நிரம்பி வழிகிறது அரசாங்கத்திடம், கேட்டால் சாணக்கியத்தனம் எனச் சமாதானம் சொல்லப்படுகிறது. #பாவம் சாணக்கியன்!

~

படைப்பாளியை முன்னிறுத்தியே படைப்புகளை அணுகுகிறோம்!

~

தான் செய்யவேண்டிய வேலைக்கு கூலித்தொழிலாளியிடம், விவசாயிடம், அனாதை ஊதியம் பெறும் ஆதரவற்றோரிடம் கறக்கும் கையூட்டு மலம் தின்பதற்கு ஒப்பானது

~

யாருமற்று, நீண்டு கிடக்கும் மாலை நேரத்து தேசிய நெடுஞ்சாலை போல், ஞாயிறு காலை பரபரப்பற்று அமைதியாக இருக்கின்றது!

~

மின்சாரமற்ற முன்இரவுகளில் நகரத்து குடியிருப்புப் பகுதி நிசப்தம் கவிதையாய் தெரிகிறது. கவிதை எல்லோருக்குமா புரிந்து (பிடித்து) விடப்போகிறது!

~

அதிமுக என் தலைவர் MGR-ன் கட்சி என்பதால் பொறுமையாக இருக்கிறேன் - விஜயகாந்த் #அப்படியே திமுக-வும் MGR இருந்த கட்சி தானேனு விட்டுடு தலைவா!

~

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...