__________________________________________________________
__________________________________________________________

__________________________________________________________
விடியற்காலை நேரம், எங்கள் தோட்டத்திற்கு அருகில் செல்லும் அந்த சாலையில், நின்று கொண்டிருக்கிறேன். குறிப்பிட்ட இடைவெளியில் மட்டும் பேருந்துகள் வந்து கொண்டிருக்கும் போக்குவரத்து நெரிசல் சிறிதும் இல்லாத சாலை அது. நீண்ட நாட்களுக்குப் பின் அந்தச் சாலையில், அந்த அதிகாலை நேரத்தில் நின்று கொண்டிருக்கிறேன்.
பெயர் இல்லாத, வெளிர் மஞ்சள், வெளிர் நீலம் வரி வரியாக பூசப்பட்ட பேருந்துகள், நான் நின்று கொண்டிருந்த குறுகிய நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாய் கடந்து கொண்டிருக்கிறது. முன் பக்க கண்ணாடியில் ஒரு எண் மட்டும் பெரிதாக எழுதப்பட்டிருக்கிறது.
அந்த காலை நேரத்திலும் பேருந்துகள் நிரம்பி சென்று கொண்டிருந்தது. அருகில் இருந்த உறவினரிடம் கேட்டேன்
பெயர் இல்லாத, வெளிர் மஞ்சள், வெளிர் நீலம் வரி வரியாக பூசப்பட்ட பேருந்துகள், நான் நின்று கொண்டிருந்த குறுகிய நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாய் கடந்து கொண்டிருக்கிறது. முன் பக்க கண்ணாடியில் ஒரு எண் மட்டும் பெரிதாக எழுதப்பட்டிருக்கிறது.
அந்த காலை நேரத்திலும் பேருந்துகள் நிரம்பி சென்று கொண்டிருந்தது. அருகில் இருந்த உறவினரிடம் கேட்டேன்
“என்னங்க இது, பேர் போடாம நிறைய பஸ் போகுது”
“எல்லாம் சிப்காட்கு ஆள் கூட்டிட்டுப் போறங்க” என்றார்.
புதிதாக உருவாகும் பின்னலாடை நிறுவனங்களில், ஆள் பற்றாக்குறை அதிகமாக இருக்க, நிறுவனம் சார்பில் பழைய பேருந்துகளை வாங்கி, 50 முதல் 100 கிலோ மீட்டர் தூரம் வரை அனுப்பி, கிராமப் பகுதியில் இருக்கும் ஆட்களை வேலை செய்ய வலை விரித்து, பிடித்துக் கொண்டு வருவது.
காலை 6 மணிக்கு, பேருந்து நிறுவனத்திலிருந்து 60-70 கி.மீ தள்ளி இருக்கும் ஊர்களிலிருந்து புறப்பட்டு, பெரும்பாலும் கிராமங்கள் வழியாக சுற்றிச்சுற்றி பின்னலாடை நிறுவனத்தை நோக்கி வருகிறது. “தொழில் தெரியுமா நல்லது, தெரியாத அது அதை விட நல்லது, எளிதில் கற்றுக்கொள்ளலாம்.” ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் 130-150 ரூபாய் சம்பளம், வீட்டிற்கு அருகிலே வந்து அழைத்துச் சென்று, மீண்டும் திரும்ப கொண்டு வந்து விட்டு விடுவர். (12 மணி நேரம் ஷிப்ட் (காலை 8 முதல் இரவு 8), கிட்டத்தட்ட நின்று கொண்டேயிருக்க வேண்டும், காலை 7 மணிக்கு கிளம்பி இரவு 9 மணிக்குத் தான் வீடு வந்து சேர முடிகிறது எனவும் ஒரு சிலர் வருத்தப் படுவதுண்டு)
காலங்காலமாக விவசாய நிலங்களில் கூலிகளாக இருந்தவர்கள், மிகக் குறைந்த அளவிலான நிலம், வைத்திருந்தவர்கள், கால்நடைகளை வைத்து பால் கறந்து ஊற்றி அதன் மூலம் வருமானம் ஈட்டியவர்கள் என பல தரப்பட்ட கிராம மக்கள் திடீரென காலை நேரங்களில் கிராமத்தின் மையச் சாலையில் ஹாரன் அடித்து அழைக்கும் பேருந்துகளுக்கு மகுடி இசைக்கு பணியும் பாம்பு போல் மயங்கி சாரை சாரையாய் போவதை உணர முடிகிறது. வெயிலில் வேலை செய்ய வேண்டியதில்லை, கோவணம் கட்டிக் கொண்டோ, சேலையை எடுத்துச் சொருகிக் கொண்டோ சேற்றில், மண்ணில் வேலை செய்ய வேண்டியதில்லை.
விளைவு விவசாய விளை நிலங்களுக்கு மிகப் பெரிய அளவில் ஆள் பற்றாக்குறை.
புதிதாக உருவாகும் பின்னலாடை நிறுவனங்களில், ஆள் பற்றாக்குறை அதிகமாக இருக்க, நிறுவனம் சார்பில் பழைய பேருந்துகளை வாங்கி, 50 முதல் 100 கிலோ மீட்டர் தூரம் வரை அனுப்பி, கிராமப் பகுதியில் இருக்கும் ஆட்களை வேலை செய்ய வலை விரித்து, பிடித்துக் கொண்டு வருவது.
காலை 6 மணிக்கு, பேருந்து நிறுவனத்திலிருந்து 60-70 கி.மீ தள்ளி இருக்கும் ஊர்களிலிருந்து புறப்பட்டு, பெரும்பாலும் கிராமங்கள் வழியாக சுற்றிச்சுற்றி பின்னலாடை நிறுவனத்தை நோக்கி வருகிறது. “தொழில் தெரியுமா நல்லது, தெரியாத அது அதை விட நல்லது, எளிதில் கற்றுக்கொள்ளலாம்.” ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் 130-150 ரூபாய் சம்பளம், வீட்டிற்கு அருகிலே வந்து அழைத்துச் சென்று, மீண்டும் திரும்ப கொண்டு வந்து விட்டு விடுவர். (12 மணி நேரம் ஷிப்ட் (காலை 8 முதல் இரவு 8), கிட்டத்தட்ட நின்று கொண்டேயிருக்க வேண்டும், காலை 7 மணிக்கு கிளம்பி இரவு 9 மணிக்குத் தான் வீடு வந்து சேர முடிகிறது எனவும் ஒரு சிலர் வருத்தப் படுவதுண்டு)
காலங்காலமாக விவசாய நிலங்களில் கூலிகளாக இருந்தவர்கள், மிகக் குறைந்த அளவிலான நிலம், வைத்திருந்தவர்கள், கால்நடைகளை வைத்து பால் கறந்து ஊற்றி அதன் மூலம் வருமானம் ஈட்டியவர்கள் என பல தரப்பட்ட கிராம மக்கள் திடீரென காலை நேரங்களில் கிராமத்தின் மையச் சாலையில் ஹாரன் அடித்து அழைக்கும் பேருந்துகளுக்கு மகுடி இசைக்கு பணியும் பாம்பு போல் மயங்கி சாரை சாரையாய் போவதை உணர முடிகிறது. வெயிலில் வேலை செய்ய வேண்டியதில்லை, கோவணம் கட்டிக் கொண்டோ, சேலையை எடுத்துச் சொருகிக் கொண்டோ சேற்றில், மண்ணில் வேலை செய்ய வேண்டியதில்லை.
விளைவு விவசாய விளை நிலங்களுக்கு மிகப் பெரிய அளவில் ஆள் பற்றாக்குறை.
ஒவ்வொரு முறை விதைக்கும் போதும், இந்த போகத்திற்கு விதைக்க, மூன்று, நான்கு முறை களையெடுக்க, அறுவடை செய்ய ஆள் கிடைக்குமா என்ற அவ நம்பிக்கையுடனே ஆரம்பிக்கின்றனர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள்.
சாலை ஓர விளை நிலங்கள் மிக எளிதில் ரியல் எஸ்டேட் வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. வாங்கப் பட்ட நிலம் உடனே, சமன்படுத்தப் பட்டு, வேலி போடப்பட்டு, சாலைகள் அமைக்கப்பட்டு, சாக்கடைகள் கட்டப்பட்டு, பூங்காக்களுக்கென நிலம் (கொடுமை விளைந்து கொண்டிருந்த நிலத்தை கற்பழித்து விளையாட பூங்கா அமைப்பது) ஒதுக்கப்பட்டு குடும்பப் பெண்ணாய் இருந்த நிலம் சீவி சிங்காரிக்கப்பட்டு கடை பரப்பப்பட்டது. சில வாரங்களில் போட்ட முதலீட்டில், எண்ணிப்பார்க்க முடியாத அளவு லாபத்துடன் வீட்டு மனைகளாக விற்கப்படுகிறது.
அடுத்தடுத்த பேருந்துகள் ஆட்களோடு பறந்து கொண்டிருந்தது.
“என்னங்க இத்தன பஸ் போகுது” என்றேன்
”இனிமே இங்க யாரும் விவசாயம் பண்ண முடியாது, காட்ல கூலிக்கு ஆளு அம்பே கெடைக்கிறதில்ல, இருக்கற தண்ணிக்கு ஏதாவது மரத்த வெக்கோனும், இல்லைனா நல்ல விலைக்குப் போனா வித்துப்போட்டு, பணத்தை வச்சி பொழச்சிகோனும், இனுமே விவசாயங்கறது நாய் படற பாடு ஆயிப்போச்சு” என்றார்.
“இப்பிடியே போன அப்புறம் சோத்துக்கு எங்க போவங்களோ தெரியல” அவர் மனைவி.
“ப்ச்...” என்று உதடு பிளுக்கினார்.
சாலை ஓர விளை நிலங்கள் மிக எளிதில் ரியல் எஸ்டேட் வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. வாங்கப் பட்ட நிலம் உடனே, சமன்படுத்தப் பட்டு, வேலி போடப்பட்டு, சாலைகள் அமைக்கப்பட்டு, சாக்கடைகள் கட்டப்பட்டு, பூங்காக்களுக்கென நிலம் (கொடுமை விளைந்து கொண்டிருந்த நிலத்தை கற்பழித்து விளையாட பூங்கா அமைப்பது) ஒதுக்கப்பட்டு குடும்பப் பெண்ணாய் இருந்த நிலம் சீவி சிங்காரிக்கப்பட்டு கடை பரப்பப்பட்டது. சில வாரங்களில் போட்ட முதலீட்டில், எண்ணிப்பார்க்க முடியாத அளவு லாபத்துடன் வீட்டு மனைகளாக விற்கப்படுகிறது.
அடுத்தடுத்த பேருந்துகள் ஆட்களோடு பறந்து கொண்டிருந்தது.
“என்னங்க இத்தன பஸ் போகுது” என்றேன்
”இனிமே இங்க யாரும் விவசாயம் பண்ண முடியாது, காட்ல கூலிக்கு ஆளு அம்பே கெடைக்கிறதில்ல, இருக்கற தண்ணிக்கு ஏதாவது மரத்த வெக்கோனும், இல்லைனா நல்ல விலைக்குப் போனா வித்துப்போட்டு, பணத்தை வச்சி பொழச்சிகோனும், இனுமே விவசாயங்கறது நாய் படற பாடு ஆயிப்போச்சு” என்றார்.
“இப்பிடியே போன அப்புறம் சோத்துக்கு எங்க போவங்களோ தெரியல” அவர் மனைவி.
“ப்ச்...” என்று உதடு பிளுக்கினார்.
“தண்ணீரும், சோறும் தந்த மண்ண விட்டு...” முதல் நாள் ஒரு தொலைக்காட்சியில் கேட்ட கருத்தம்மா படப் பாடல் வரி நினைவுக்கு வந்து, மனதைப் பிசைந்தது.
-------------------------------------------------------------------------
கருத்தை பதிவு செய்யுங்கள். தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.
கருத்தை பதிவு செய்யுங்கள். தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.