Showing posts with label அதீதம். Show all posts
Showing posts with label அதீதம். Show all posts
Sep 5, 2013
பயணம் ஒரு கோட்டில்
நேர் கோடென நீளும்
பாதையில் ஊர்கிறேன்
உயரத்தில் இறக்கை விரித்த
பருந்தொன்று
ஒத்த அலைவரிசையில்
உடன் பயணிக்கிறது
என் கோட்டில் அது பறக்கிறதா
அதன் கோட்டில் நான் நகர்கிறேனா
இருவருக்குமே தெரியவில்லை
இடதோ வலதோ
மெல்ல அசைந்து நகர்கையில்
வருடியும் வருடாமலும் செல்கிறது
விரிந்த பறவையின் நிழல்
எனக்கு கீழும் கூட
ஒரு எறும்பு
என் கோட்டிலேயே பயணிக்கலாம்
பறவையின் நிழல் என்னை வருடிய
எதோ ஒரு நொடியில்
என் கால் எறும்பினை
மரணத்தில் புதைத்திருக்கலாம்.
***
Nov 5, 2012
ஒளி விருட்சம்
இல்லாதது கண்டஞ்சி
இல்லாததற்குள்ளும்
இருள் கண்டஞ்சி
இருட்டுக்குள்ளும்
ஒளிந்துகொள்கிறேன்
பயம் அஞ்சி அகலுகிறது.
இருட்டுக்குள்ளும்
ஒளிந்துகொள்கிறேன்
பயம் அஞ்சி அகலுகிறது.
***
நீ பொத்தியிருந்து
தனித்துவிட்ட
என் கைகளுக்குள்
ஒரு விதையை
ஒளித்துவைத்திருக்கிறேன்
விதைக்குள் இருக்கும்
விருட்சம் எனக்குள்
வளர்ந்துகொண்டிருக்கிறது
தனித்துவிட்ட
என் கைகளுக்குள்
ஒரு விதையை
ஒளித்துவைத்திருக்கிறேன்
விதைக்குள் இருக்கும்
விருட்சம் எனக்குள்
வளர்ந்துகொண்டிருக்கிறது
***
கரு மேகம் பூத்த வானமாக
இருளடைந்த மனது
தாகத்தில் நிலமுமில்லை
பெய்யும் நோக்கத்தில்
மேகமுமில்லை
நான் மட்டும் மழையாய்
கரைந்து கொண்டிருக்கிறேன்!
இருளடைந்த மனது
தாகத்தில் நிலமுமில்லை
பெய்யும் நோக்கத்தில்
மேகமுமில்லை
நான் மட்டும் மழையாய்
கரைந்து கொண்டிருக்கிறேன்!
***
உடையும் விருப்பமும்
இருந்ததில்லை
உடைபடாமல் காக்கும்
வித்தையுமறிந்ததுமில்லை
உடைபடாமல் பிடித்தியிறுத்தும்
ஏதோ ஒரு ஈரச் சொல்
எங்கோ அன்பில்
நனைந்து பிறந்திருக்கலாம்!
இருந்ததில்லை
உடைபடாமல் காக்கும்
வித்தையுமறிந்ததுமில்லை
உடைபடாமல் பிடித்தியிறுத்தும்
ஏதோ ஒரு ஈரச் சொல்
எங்கோ அன்பில்
நனைந்து பிறந்திருக்கலாம்!
***
*
Subscribe to:
Posts (Atom)
வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்
பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...
-
பருவ மழை பொய்த்துப் போய் விடும், வறட்சி தாண்டவமாடும், எல்லோரும் செலவுகளைக் குறைப்போம் என விளம்பர யுக்தியோடு நாடு முழுதும் அரசியல் வாதிகள் அற...
-
ஒரு படைப்பாளி மனதில் மிதந்து கொண்டிருந்த விசயங்களை இறக்கி வைக்கும் ஒரு தளமாகவே பெரும்பாலும் வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கிறான். ஆரம்பத்தில் இலக...
-
வழக்கமான பொழுதுகள் வழக்கம்போல் கடந்து போக , துக்கம் பீடிக்கும் நொடிகள் நகர மறுத்து மனதிற்குள் கனத்தை ஏற்றிக்கொண்டே இருக்கின்றன. நேற்ற...

