Sep 5, 2013
பயணம் ஒரு கோட்டில்
நேர் கோடென நீளும்
பாதையில் ஊர்கிறேன்
உயரத்தில் இறக்கை விரித்த
பருந்தொன்று
ஒத்த அலைவரிசையில்
உடன் பயணிக்கிறது
என் கோட்டில் அது பறக்கிறதா
அதன் கோட்டில் நான் நகர்கிறேனா
இருவருக்குமே தெரியவில்லை
இடதோ வலதோ
மெல்ல அசைந்து நகர்கையில்
வருடியும் வருடாமலும் செல்கிறது
விரிந்த பறவையின் நிழல்
எனக்கு கீழும் கூட
ஒரு எறும்பு
என் கோட்டிலேயே பயணிக்கலாம்
பறவையின் நிழல் என்னை வருடிய
எதோ ஒரு நொடியில்
என் கால் எறும்பினை
மரணத்தில் புதைத்திருக்கலாம்.
***
Subscribe to:
Post Comments (Atom)
வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்
பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...
-
நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான். உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...
-
அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...
-
வெயில் விழுதுகளாய் விழுந்து கொண்டிருக்கும் நடு மதிய நேரத்தில், கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந...

6 comments:
பறவையின் நிழல் என்னை வருடிய
எதோ ஒரு நொடியில்
என் கால் எறும்பினை
மரணத்தில் புதைத்திருக்கலாம்.\\ அருமை கதிர்!
நேர்க்கோட்டுப் பயணத்தை மூன்று காட்சிப் பொருள்களைக் கொண்டு விளக்கிய விதம் அருமை கதிர்...
(இந்த மாதிரியெல்லாம் பின்னூட்டமிட்டு எவ்ளோ நாளாச்சு!....)
நிஜமா நல்லா இருக்கு கதிர்...
பிரபாகர்...
வணக்கம் அண்ணா....
தங்களைப் பற்றி இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்திருக்கிறேன்... நேரமிருக்கும் போது வந்து வாசியுங்கள்...
அதற்கான சுட்டி இதோ..
http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_974.html
நன்றி.
பறவையின் நிழல் வருடுவதை உணர பெற்றால் அங்கு நிகழ்வது அற்புதம் ..!
பறவையின் நிழல் என்னை வருடிய
எதோ ஒரு நொடியில்
என் கால் எறும்பினை
மரணத்தில் புதைத்திருக்கலாம்//.....fine anna
-VEERA
பறவையின் நிழல் என்னை வருடிய
எதோ ஒரு நொடியில்
என் கால் எறும்பினை
மரணத்தில் புதைத்திருக்கலாம்//.....fine anna
-VEERA
Post a Comment