Dec 29, 2014
ஆறாம் அறிவு
ஐந்து அறிவுகளை மட்டும்
வைத்துக்கொண்டு
மிஞ்சியிருக்கும்
வனமொன்றில்
தத்தித்தாவியோடி
பழங்கள் பூக்கள்
இலைகள் தானியங்களில்
பசியாறியவனுக்கு
ஆறாம் அறிவின்
துணைகொண்டு
மிஞ்சிப்போனதை
பெருங்கருணையோடு
பிச்சையிட்டு
பசியாறப் பழக்கிவிட்டீர்கள்
அவ்வப்போது
அரிசி மூட்டைச் சந்தில்
சுருட்டி வைக்கும்
நெகிழிப் பைகளை
என்ன செய்வதெனத்
தெரியாத நீங்களா
அவன் சுமந்தலையும்
அந்த நெகிழிச் சாபத்தை
என்ன செய்து தீர்ப்பதெனச்
சொல்லியிருக்கப் போகிறீர்கள்!
-
Subscribe to:
Post Comments (Atom)
வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்
பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...
-
ஒரு படைப்பாளி மனதில் மிதந்து கொண்டிருந்த விசயங்களை இறக்கி வைக்கும் ஒரு தளமாகவே பெரும்பாலும் வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கிறான். ஆரம்பத்தில் இலக...
-
பருவ மழை பொய்த்துப் போய் விடும், வறட்சி தாண்டவமாடும், எல்லோரும் செலவுகளைக் குறைப்போம் என விளம்பர யுக்தியோடு நாடு முழுதும் அரசியல் வாதிகள் அற...
-
வழக்கமான பொழுதுகள் வழக்கம்போல் கடந்து போக , துக்கம் பீடிக்கும் நொடிகள் நகர மறுத்து மனதிற்குள் கனத்தை ஏற்றிக்கொண்டே இருக்கின்றன. நேற்ற...
7 comments:
அருமை சார்.
Superb. ..
அருமை அண்ணா...
எந்த பகுத்தறிவு பிராணிகளிடமிருந்து மனிதனை பிரித்துக்காட்டுகிறதோ,கனவுகளால்,நிராசைகளால்,அறிவால் வருத்தியும் வைக்கிறது..
நெகிழிச்சாபம் தான் புரியல..
கல்வெட்டில் பெயர் பொறித்திருப்பது கூட ஆறாம் அறிவின் வேலையா இருக்குமோ?
Nice!
//நெகிழிச் சாபத்தை // Context?
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா...
Post a Comment