Feb 28, 2014
நீள் பயணத்தின் பின்
நீள் பயணத்தின் பின்
வீடு வந்தாயிற்று
மகளை அணைத்தாயிற்று
மனைவியைக் கொஞ்சியாயிற்று
அம்மா அப்பாவிடம் பேசியாயிற்று
அலுவலகம் வந்தாயிற்று
மின்மடல்களுக்கு பதில் தந்தாயிற்று
அழைப்பிதழ்களின் தேதி குறித்தாயிற்று
நண்பர்களோடு தேநீர் அருந்தியாயிற்று
காத்திருப்புகளுக்கு பதில் சொல்லியாயிற்று
விசாரிப்புகளுக்கு தலையசைத்தாயிற்று
காசோலைகளுக்கு யோசித்தாயிற்று
தவறிய அழைப்புகளுக்கு மன்னிப்பு கோரியாயிற்று
கிட்டிய உதவிகளுக்கு நன்றி பகிர்ந்தாயிற்று
உறவுகளிடமும் அன்பை உரசியாயியிற்று
இன்னபிறவென எல்லாமாயிற்று..
ஏனோ நான் என்னிடம் மட்டும்
இன்னும் பேசிடவேயில்லை!
-
Subscribe to:
Post Comments (Atom)
அந்த வெகுமதிக்கு இன்னொரு பெயருண்டு
தமக்கு ஒவ்வாத, தம்மை சற்றும் முன்னகரவிடாமல் இழுத்துப் பிடிக்கும் எந்த ஒன்றிலுமிருந்து விடுபடுவது மிகத் தேவையான ஒன்று. ஆனால் அப்படிப் பிடித்த...

-
பொ துவாக வெற்றி அத்தனை எளிதில் வாய்த்துவிடுவதில்லை . பெரும்பாலும் அது நிகழ்த்தக் கோருவது யாராலும் அவ்வளவு எளிதில் நிகழ்த்த முடிய...
-
வாய்ப்பளித்த ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும், நிகழ்ச்சி தயாரிப்பாளர் சரவணராஜ், பதிவுலக நண்பர்கள் ஆரூரன், உண்மைத்தமிழன், வானம்...
-
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி வெறி கொண்டு முழங்கிய தமிழ் இனத்தில்தான், சொட்டுப்பாலுக்கு வக்கில்லாமல்,...
8 comments:
இப்போது தான் பேசி விட்டீர்களே...!
ரசித்தேன்...
என்னை எடுத்து தன்னை எழுதிகொண்ட வாழ்க்கையில்... நான் "என்னை" காண கொஞ்சம் மறந்துதான் போனேன்...
அருமை:)!
அருமை sir....:)!
ரசித்தேன் அண்ணா...
இப்போ பேசிடீங்களா ?
அப்புறம் நட்பா ஒரு நினைவூட்டல்.
நீங்க ஜம்ப் பிரேக் கொடுக்காததால, என் பேஜ் ல உங்க முழு கவிதையையும் படிச்சுட்டேன். கருத்து போடத்தான் இங்க வந்தேன். இது வ்யுவர்சை குறைக்கும் தானே? தப்பா சொல்லிருந்தா மன்னிக்கவும்.
அருமை கதிர்.நா தாமதமா தான் இத பாத்தேன். :-(
:))
எங்களுடன் நாம் நாமாகப் பேசும் அந்தக் கணங்கள் இனிமையானவை. வேறு எவ்விதமாகவும் பிரதியிட முடியாதவை.
Post a Comment