Feb 16, 2013

இறைவனின் குருதி





எல்லா விவாகரத்தின் பின்னும்
சுமையாய்க் கிடக்கிறது
கிழித்தெறியவியலா

எவர் கைக்கொள்வதெனறியா
ஒரதிருமண ஆல்பம்


***

பொறுக்க மனிதர்களற்ற
கோவில் வாசல்களில்
சிதறடிக்கப்படும்
தேங்காய்களிலிருந்து
தெறிக்கிறது கொஞ்சம்
இறைவனின் குருதியும்!

***

இந்த மௌனத்தை
உடைக்கப்போவது
’ஒரு சொல் உளி’தானென்பது
ஏனோ
புரியாமலே
போய்விடுகிறது

***

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...