இறைவனின் குருதி





எல்லா விவாகரத்தின் பின்னும்
சுமையாய்க் கிடக்கிறது
கிழித்தெறியவியலா

எவர் கைக்கொள்வதெனறியா
ஒரதிருமண ஆல்பம்


***

பொறுக்க மனிதர்களற்ற
கோவில் வாசல்களில்
சிதறடிக்கப்படும்
தேங்காய்களிலிருந்து
தெறிக்கிறது கொஞ்சம்
இறைவனின் குருதியும்!

***

இந்த மௌனத்தை
உடைக்கப்போவது
’ஒரு சொல் உளி’தானென்பது
ஏனோ
புரியாமலே
போய்விடுகிறது

***