இரட்டைக் கொலை
சடசடவென முறிகிறது மரம்
பிடிபடாத கவிதைக்காக
கசக்கி எறிந்த காகிதத்தோடு
வலி
விழுங்கும் கோழித்துண்டு
தொண்டையில் குத்துகிறது
கூண்டுக்கோழி அனத்தலில்
பைத்தியம்
பிரிவுகளின் மையத்தில் நின்று
நாலா திசையும் வழி சொல்கிறான்
பைத்தியக்கார உலகத்துக்காக
சிறை
மதகிடுக்கில் பீறிட்டு வரும் நீரை
குடுவைகளில் சேமிக்கிறேன்
பிடித்த வடிவத்தில் சிறைவைக்க
_____________________________________
Jan 29, 2010
Jan 24, 2010
உதிரும் எழுத்துகள்
கனமாய், காதலாய், வலியாய்
சினமாய், மணமாய், காமமாய்
கலந்தடிக்கும் உணர்வுகளோடு
உனக்கான எழுத்துகளைத் தேடுகிறேன்
எண்ணத்தின் இண்டு இடுக்குகளில்
சிக்கிக் தவிக்கும் எழுத்துகளை
மீட்டெடுத்து வருகிறேன் உன்போல்
அழகாய் ஒரு வாக்கியம் எழுத
இலகுவாய் கோர்த்தெடுக்கிறேன்
மிகக் கச்சிதமாய் சில நேரங்களில்
இணைய மறுக்கின்றன சிலமுறை
என்னதான் போராடினாலும்
எப்படியோ எழுதி முடிக்கிறேன் உனக்காக
எனக்குப் பிடித்த ஒரு கவிதையை,
கால் கடுக்க நடந்த கடும் வெயிலில்
கண்ட வேம்பு நிழலின் சுகமாய்
உன்னிடம் வாசிக்க ஓடோடி வந்து
உன்முகம் பார்க்கும் போது ஏனோ
உதிர்ந்து போகிறது ஒவ்வொரு எழுத்தும்
எனக்காய் கவிதை சிந்தும் உன் புன்னகைக்கு முன்
_________________________________
சினமாய், மணமாய், காமமாய்
கலந்தடிக்கும் உணர்வுகளோடு
உனக்கான எழுத்துகளைத் தேடுகிறேன்
எண்ணத்தின் இண்டு இடுக்குகளில்
சிக்கிக் தவிக்கும் எழுத்துகளை
மீட்டெடுத்து வருகிறேன் உன்போல்
அழகாய் ஒரு வாக்கியம் எழுத
இலகுவாய் கோர்த்தெடுக்கிறேன்
மிகக் கச்சிதமாய் சில நேரங்களில்
இணைய மறுக்கின்றன சிலமுறை
என்னதான் போராடினாலும்
எப்படியோ எழுதி முடிக்கிறேன் உனக்காக
எனக்குப் பிடித்த ஒரு கவிதையை,
கால் கடுக்க நடந்த கடும் வெயிலில்
கண்ட வேம்பு நிழலின் சுகமாய்
உன்னிடம் வாசிக்க ஓடோடி வந்து
உன்முகம் பார்க்கும் போது ஏனோ
உதிர்ந்து போகிறது ஒவ்வொரு எழுத்தும்
எனக்காய் கவிதை சிந்தும் உன் புன்னகைக்கு முன்
_________________________________
வேற எந்தக் கெட்ட பழக்கமுமில்ல
அது ஒரு மூனு வருசம் இருக்கும். நான் ஷேர் மார்க்கட்டில் காலடி எடுத்து வைத்த ஆரம்பம் (பெரிய்ய்ய்ய்ய்ய்ய காலடி வைக்கிறாராம்... ங்கொய்யாலே பில்டப் வேறையா.... மேல சொல்லுய்யா). நானும் பெருசா பங்குச்சந்தையில வியாபாரம் பண்ணி பட்டாசு கிளப்பிடலாம்னு நம்பிக்கையோட தெனத்திக்கும் காத்தாலே ஒன்பதேமுக்காலுக்கு சோறு தின்னும் திங்காம வேகவேகமா ஷேர் புரோக்கிங் ஆபிசுக்கு ஓடீருவேன். வீட்ல ஷேர் மார்க்கட்டுக்கு போறதப் பத்தி ரொம்ப பெருமையா வேற பேசிக்குவாங்க. ஆனா அங்க போய் திருவிழாவுல தொலைஞ்சு போன மாதிரி, திருதிருனு நான் முழிக்கிறது யாருக்கும் தெரியாது.
அங்க பார்த்தாக்க, கம்ப்ப்யூட்டர் ஸ்கிரீன்ல பொளிச்சு பொளிச்சுனு ஒரே நெம்பரா ஓடிக்கிட்டிருக்கும்.... நானும் வேடிக்கை பார்த்துக்கிட்டேயிருந்தேன்... கண்ண மூடி முழிக்கிறதுக்குள்ளே பல தடவ மாறிடுது, ஆனாலும் ஒன்னும் புரியல.... ஆனா அதே கம்ப்யூட்டரச் சுத்தி ஏழெட்டு பேர் ஒக்காந்துக்கிட்டு உடா...............ம பார்த்துக்கிட்ருந்தாங்க... சரி நாமளும் தொழில கத்துக்குவோம்னு அவங்கள மாதிரியே கம்யூட்டர் ஸ்கிரீனையே பாத்துக்கிட்டு ஒக்காந்திருப்பேன். இப்படியே ஒரு வாரம் ஓடுச்சு, ஒன்னும் புரிபடலை. புரிபட்ட ஒரே விசயம் 11 மணி ஆச்சுன்னா, மசால் வடை மணக்க ஆரம்பிச்சிடும்.
அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிச்சது. அந்த ஏழெட்டு பேர்ல ரெண்டு பேர் மட்டும் ரொம்ப பிசியா எந்நேரமும் ஏதாவது சொல்லிட்டேயிருப்பாங்க... ”அத பை பண்ணுங்க சார், ம்ம்ம்ம் அடிங்க அவன பார்த்துக்கலாம்” (அடிங்கன்னா.. விக்கிறதாம்....அது தெரிய 30 நாள் ஆச்சு. ரெபிடெக்ஸ்ல முப்பது நாளில் பங்குச்சந்தை வார்த்தைகள் கற்றுக் கொள்ளலாம்னு புக்கு வரமா போனதால எனக்குத் தெரியல) அப்படினு பிசியாவே இருப்பாங்க.
நானும் இந்த ரெண்டு பேரையும் நல்லாப் பார்த்து தொழில கத்துக்கிடலாம்டானு நம்ம்ம்ம்ம்ப்பிக்கையா அவங்களையே பார்த்துக்கிட்டிருப்பேன். அவங்க வட சாப்புடறது, டீ குடிக்கிற ஸ்டைல கூடப் பார்ப்பேன்... காலையில வந்த உடனே ரொம்ப பிசியா இருக்கிற ஆளுக... மத்தியானம் ஆகஆக கொஞ்சம் டல்லடிக்க ஆரம்பிச்சிருவாங்க... அப்புறம் மேனேஜர் கிட்ட கேப்பாங்க... குருட் ஆயில் (கச்சா எண்ணைங்க) என்ன ரேட்டுன்னு..... அவ்வளவுதான் குருடு எறுது... மார்க்கெட்ட சாத்திருவாங்கனு சொல்லுவாங்க, நான் கேட்பேன்.. ”குருட் ஏறுனா ஏன் சந்தைய மூடிறுவாங்கனு” அதுல ஒருத்தரு அசோகன் (அதாங்க பழைய நடிகர்) மாதிரி சிரிப்பாரு, ”சாத்துவாங்கன்னா, மார்க்கட்ட அடிச்சிருவாங்னு அர்த்தம்”னு.
எனக்கு ஒரு கருமாந்திரமும் புரியல ”சந்தைய யார் வந்து அடிப்பாங்க, எப்புடி அடிப்பாங்க”னு, அப்புறம் தான் புரிஞ்சுது சாத்திருவாங்க, அடிச்சிருவாங்கன்னா... சந்தை இறங்கிடும்னு (மவனே ரெபிடெக்ஸு நீ மட்டும் கையில கிடைச்சா கொலைதான்)
தெனமும் காலையில உற்சாகமா வந்தவங்க... மூனரை மணிக்கு சந்தை முடிவடையும் போது காத்து போன பலூன் மாதிரி டல்லா வேற போவங்க. ரொம்ப நம்பிக்கையா வேற பேசிக்குவாங்க ”இன்னிக்கு தப்பு பண்ணிட்டோம், அந்த ஒன்ன மட்டும் மாத்திப் பண்ணியிருந்தா லாட்டரிதான், நாளைக்கு பார்த்துருவோம் ஒருகை”. எனக்கு அந்த தன்னம்பிக்கை ரொம்ப பிடிக்கும் (ஹ்ஹும், கெட்ட நேரம் வந்துதுன்னா... எல்லாம் பிடிக்கும்டா)
இப்பிடியே போச்சு... தெனமும் பத்தாயிரம் ரூவா பணத்தோட நானும் போவேன்... வெளியே வரும் போது பத்தாயிரம் ரூவா லாபத்தோட திரும்பிவருவேன்(!!!!). அட கொண்டு போன பணம்தான். மார்க்கட்ல நஷ்டம் பண்ணாத வரைக்கும் அது லாபம்தானே.
நாமதான் கம்னு இருக்க மாட்டோமே... சரி இந்த பத்தாயிரத்துல ரிஸ்க் எடுத்து அவங்க ரெண்டு பேரும் எந்த ட்ரேடில் (ஒரு தடவை வாங்கி விற்பதை ஒரு ட்ரேடு என்பார்கள்) சம்பாதிக்கிறாங்களோ அதுல நாமும் இறங்கனும்னு தயாரா இருந்தேன்... ஒரு மாசம் பார்த்ததில ஒரு ஃபார்முலா புரிஞ்சுது... சராசரியா மூன்று ட்ரேடு நஷ்டம் ஆச்சுன்னா அடுத்த ட்ரேடு லாபம் எடுப்பாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அதே மாதிரி நாலாவது ட்ரேடுல நானும் குதிச்சேன்... ரெண்டு பேரும் கைகுடுத்து... ”ஆர்டர் போடுங்க சார்... நாங்க கூட இருப்போம்னாங்க....” அட அந்த இடத்தில அந்த தன்னம்பிக்கைதான் முக்கியமாத் தெரிஞ்சுது. எவனொருவன் ஒரு காரியத்தை தொடங்கும் போது, அதே தொழிலில் இருப்பவனிடம் தன்னம்பிக்கையை பெறுகிறானோ... அவன் அதீத வெற்றி பெறுவான்... இந்த அருமையான தத்துவத்தை நானே கண்டுபிடிச்சு, எனக்குள்ளேயே திரும்ப திரும்பச் சொல்லிக்கிட்டேன்...
நானும் இறங்கினேன்... எதை, எங்கே வாங்கனும்னு அதுல பாண்டிங்கிறவருதான் சொன்னார். வாங்கினேன். அரை மணி நேரம் கழிச்சு.. இப்போ வித்துடுங்கன்னு சொன்னார்... கணக்கு பார்த்தா ஆயிரம் ரூபா லாபம்..... அட.... சாமி... கையில பிடிக்க முடியல.... ஏங்க பத்தாயிரம் போட்டு... அரை மணி நேரத்துல ஆயிரம் ரூபானு சொன்னா.. எப்பிடி இருக்கும்..
அடுத்த நாள் ஒன்பதை மணிக்கே ஆஜர்.... பாண்டியை தலைவரேனு கூப்பிட ஆரம்பிச்சேன்... முதல் நாள் செய்த அதே தந்திரம் வெறும் 200 ரூபாதான் கிடைத்தது. வீட்டில் போன் செய்து நேற்று போட்ட சட்டையை துவைத்து அடுத்த நாளுக்கு தயார் படுத்தச் சொன்னேன் (..ஸ்ஷ்ஷ்ஷ் சென்டிமென்டுங்க). ஆனா... அடுத்த நாள் பால் பாண்டி வரல. போன்லயே என்னென்னவோ ட்ரேட் பண்ணினார்.... இப்படியே இரண்டு வாரம் ஆனது... கையில் இருந்து கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ரூபாய் நஷ்டம் ஆகியிருந்தது..... அட பாண்டிக்கு இல்லைங்க... எனக்கு... எனக்கு
அந்த ஆபீஸ் மேனேஜர் மெல்லமா என்னிடம் பேச்சுக்கொடுக்கதார். ”ஏன் சார்.. இவ்வளவு வேகமா பண்றீங்க... நீங்க தனிப்பட்ட முறையில மார்க்கட்ட ஸ்டடி பண்ணுங்க... மத்தவங்களை ஒட்டு மொத்தமா ஃபாலோ பண்ணாதீங்க” என்றார். ஏனோ அவருடைய அட்வைஸ் பிடிக்க வில்லை...(அது பிடிச்சா உருப்பட்டுத் தொலைச்சிடுவோமே) இத்தனைக்கு பாண்டி ஷேர் மார்க்கட்ல இருபது வருச அனுபவம்(!!!!!) வேற.
பாண்டி ஷேர் புரோக்கிங் ஆபிஸ்க்கு அடிக்கடி வருவது குறைந்தது.... சில சமயம் வருவார், பத்து நிமிடம் கூட உட்கார முடியாது, அவருடைய மனைவியிடமிருந்து ஷேர் ஆபிஸ் நெம்பருக்கு போன் வரும்.... “எங்க வீட்டுக்காரி கேட்டா, நான் இங்க வரலைனு சொல்லிடுங்க”னு சொல்லிட்டு ஓடிப்போயிடுவார். எனக்கு ரொம்ப வருத்தமா போச்சு, அட நம்ம ஹீரோ இல்லாம எப்படி தொலைச்ச ஐம்பதாயிரத்த திருப்பி எடுக்கிறதுன்னு...
அடுத்த சில நாட்களில் திடீர்னு வர்றதும், கொஞ்ச நேரத்துக அவருக்கு போன் வர்றதும் சகஜமா இருந்துச்சு. ஒருநாள் பார்த்தா அவரோட சம்சாரம் ஆட்டோவுல ஷேர் ஆபிஸ்க்கு வந்துட்டாங்க. அதுக்கப்புறம் பாண்டி வரவேயில்லை. நானும் மார்க்கெட்ல ஒன்னும் பண்ணாம இருந்தேன். ”பணம் ரெடியா இருக்கு, ஆள் அனுப்புங்கன்னு” பாண்டிகிட்டேயிருந்து போன் வந்தது. பணம் வாங்கப்போன ஆள் என்னிடம் கள்ளச்சிரிப்பாய்”சார் உங்க தலைவர பார்க்கப் போறேன், வர்ரீங்களா” என்று கேட்டார்.
அட நம்மாளை போய் பாத்துட்டு வந்துடுவோம்னு நானும் சந்தோசமா போனேன். அவர் வீடு இருக்கும் பகுதிக்குப் போய் ஆள் நடமாட்டம் குறைவான வீதியில் நின்னுக்கிட்டு “பாண்டி சார், நான் ஸ்பாட்ல இருக்கேன்” னு இவர் போன் பண்ண, எனக்கு ஒரே மர்மமாக இருந்தது. கொஞ்ச நேரம் கழிச்சு இவரோட செல் போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்துச்சு. இவரு அண்ணாந்து பார்க்க மாடியிலிருந்து ஜன்னல் வழியாக ஒரு மஞ்சப்பை முடிச்சு விழுந்துச்சு. இவரு எடுத்துகிட்டு ஆபிஸ்க்கு போலம்னார். பாண்டி என்ன பார்த்து கைய அசைச்சாரு.
ஆபிஸ் வந்தும் எனக்கு ஆச்சரியம் அடங்கல என்ன நடக்குதுன்னு. அதுக்குப் பின்னாடிதான் தெரிஞ்சுது,
நம்ம பாண்டி மாசத்தில இருபதுக்கு குறைஞ்சது பதினாறு நாளாவது நஷ்டம் செய்வார்னு. ரெண்டு வருசத்துல இந்த ஆபிஸ்ல மட்டும் குறைந்தது பத்து லட்சம் நஷ்டம்னு.
பெரிய அளவில் பரம்பரையாக நடக்கும் கடை இருக்கிறதால பணம்பத்துன கவலை இல்லையாம். கொஞ்ச நாளாக அவரோட சம்சாரம் ரொம்ப கெடுபிடி பண்றதால, போன் பண்ணி ஜன்னல் வழியா பண முடிச்ச வீசுவாராம். அவருக்கு கம்பெனி, பணமே இல்லாம கூட ட்ரேடு பண்ணலாம், அதிக பட்சம் ஐந்தாயிரம் நஷ்டம் ஆயிடுச்சுன்னா அன்னிக்கு ட்ரேடு அவ்வளவுதானு சலுகை கொடுத்திருந்தாங்க. ஐந்தாயிரம் என்னைக்கெல்லாம் ஆகுதோ, அன்னிக்கு உடனே கூப்பிட்டு பணம் முடிச்ச வீசிடுவாரம்.
எனக்குள்ள கேள்வின்னா கேள்வி அத்தன கேள்வி. இத்தன வருசம் பண்ணி, கிட்டத்தட்ட தெனமும் நஷ்டமா? சரி தெனமும் நஷ்டம்னா அந்தக் கருமத்த ஏன் பண்ணனும்? இப்படி பல கேள்வி... ஒருநாள் பெரிசா லாபம் சம்பாதிச்சப்போ எல்லார்த்துக்கும் விருந்து வச்சாராம் ஒரு ஹோட்டலில். அப்போ மேனேஜர் ”ஏன் சார் இப்படி நிறைய நஷ்டம் பண்றீங்கன்னு” கேட்டப்போ “சார், சொத்து பலகோடிக்கு இருக்குங்க. நான் தண்ணி, தம்மு, சீட்டு இப்புடி எந்தக் கெட்ட பழக்கத்திலேயும். பணத்த அழிக்கிறதில்லை... மார்க்கட் மட்டும்தான் சார்... வேற எந்தக் கெட்ட பழக்கமுமில்ல, அதனால சரி இதுவாவது இருந்துட்டுப் போகுதேன்னு பண்ணிக்கிட்டிருக்கேன்”னு சொன்னாராம்
அதக் கேட்டுட்டு அன்னிக்கு ஓடிவந்தவன்தான் ட்ரேட் பண்றேன்னு அந்த ஷேர் ஆபிஸ்க்குள்ள மார்க்கெட் நடக்கிற நேரத்துல இதுவரைக்கும் போனதில்லை.. பாண்டியையும் பார்க்கவேயில்லை.
_______________________________
Jan 22, 2010
பொய் முகங்கள்
குழந்தையாய்
சிறுவனாய்
இளைஞனாய்
காதலனாய்
கணவனாய்
அப்பாவாய்
தாத்தாவாய்
.................என
நினைவு தெரிந்த
நாள் முதலாய்
அழகில்
அன்பில்
அறிவில்
பண்பில்
காதலில்
காமத்தில்
பணத்தில்
குணத்தில்
கோபத்தில்
பொறுமையில்
தொடர்ந்து தொடர்ந்து
யாரோ ஒருத்தனோடு
ஒப்பிடப்படுகிறான்
ஒருபோதும்
பொருந்தவேயில்லை
ஒருத்தருக்கும் தெரியவில்லை
ஒருபோதும்
அவனை அவனோடு மட்டும்
ஒப்பிட்டுப் பார்க்க!
________________________________
சிறுவனாய்
இளைஞனாய்
காதலனாய்
கணவனாய்
அப்பாவாய்
தாத்தாவாய்
.................என
நினைவு தெரிந்த
நாள் முதலாய்
அழகில்
அன்பில்
அறிவில்
பண்பில்
காதலில்
காமத்தில்
பணத்தில்
குணத்தில்
கோபத்தில்
பொறுமையில்
தொடர்ந்து தொடர்ந்து
யாரோ ஒருத்தனோடு
ஒப்பிடப்படுகிறான்
ஒருபோதும்
பொருந்தவேயில்லை
ஒருத்தருக்கும் தெரியவில்லை
ஒருபோதும்
அவனை அவனோடு மட்டும்
ஒப்பிட்டுப் பார்க்க!
________________________________
தூக்கணாங்குருவிக்கூடு
ஊட்டோரம் ஒசந்த தென்னையில
ஒய்யாரமா வளைஞ்ச மட்டையில
எங்கிருந்தோ வந்த ஒரு குருவி
என்னமோ மாயம் பண்ணுச்சு
ஓடியாடி வேல பாத்து தேடித்தேடி
எடுத்து வந்து அவசரமா கட்டுனதுல
ஆடி அசையுது அழகான கூடு ஒண்ணு
ஓலக்கீத்துல ஒட்டிவச்ச பந்து போல
ஆடி மாசம் அடிச்சு தள்ளுன காத்துல
பத்தாளு மேஞ்ச கூரை பறந்து போகப்பாத்துச்சு
மரம் ஆடுச்சு, மட்டையும் ஆடுச்சு கூடவே
கூடும் ஆடுச்சு ஆனா குருவி ஆடுச்சு ஒய்யாரமா
ஐப்பசியில பேஞ்ச அடமழைக்கு
ஆறேழுபக்கம் ஒழுகுது ஊத்துது...
குருவியும் குறுகுறுனு கூடு தங்குச்சு
ஒரு சொட்டு தண்ணி உள்ள படாம
மலைய கொடஞ்சோம், மரத்த வெட்டுனோம்
மழைய தொலச்சோம், மண்ண கெடுத்தோம்
ஆனா ஒருத்தருக்கும் தெரியலையே
ஒரு தூக்கணாங்குருவி போலக் கூடுகட்ட
________________________________________________
Jan 21, 2010
முனையுள்ள நூல்கண்டு
பார்வையை சற்று விசாலப்படுத்தித் தேடிப்பாருங்கள். இரண்டு விதமான மனிதர்களை நாம் பார்க்க முடியும், ஒன்று தனக்கு வந்த பிரச்சனைகளை சரி என ஏற்றுக்கொண்டு நடைபோடுபவர்கள் மற்றொன்று தனக்கு வந்த அந்த பிரச்சனையை ஏற்றுக்கொள்ள மறுதலித்து அதை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு அதைப் பற்றியே என்னேரமும் பேசிக் கொண்டிருப்பவர்கள். ஒன்று மட்டும் தவிர்க்க முடியாத உண்மை பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் இல்லை.
வாழ்க்கையில் ஏதாவது ஒரு வடிவில் சிக்கல்களோ அல்லது பிரச்சனைகளோ வருவதை ஒரு போதும் தவிர்க்க முடியாது. ஆனால் வந்த பிரச்சனையை எப்படி கையாள்கிறோம் என்பதுதான் முக்கியம்.
காரணம் இருந்தாலும், சில சமயம் காரணம் இல்லாவிட்டாலும் கூட பிரச்சனை என்பது ஏதோ ஒரு உருவத்தில் வரத்தான் செய்யும். முதலில் நமக்காக வரும் பிரச்சனையை முழுதாய் உள்வாங்குவது அவசியம், அப்போதுதான் அதன் நீள அகலம் தெரியும், அதை எப்படி அணுகுவது என்பது குறித்து ஆராய முடியும். இங்கு மிக முக்கியம் குறைந்த பட்சம் பிரச்சனையை உள்வாங்குவது, அதை விடுத்து பிரச்சனையை உள்வாங்காமல் உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு, எனக்கு பிரச்சனை வந்துடுச்சு, எப்படித் தீர்க்கப்போறேனேனு தெரியலை என்று புலம்புவதால் ஒரு போதும் பிரச்சனையைத் தீர்க்க முடிவதில்லை.
என்னிடம் யாராவது தங்களுடைய பிரச்சனையை குறித்து பேசும் பொழுது, முதல் தடவை அதை முழுதாக கேட்பேன். அதே நபர் திரும்பவும் அதே பிரச்சனை குறித்து முதலில் பேசிய விசயத்தையே மீண்டும் பேசினால் கிட்டத்தட்ட புரிந்துவிடும், அவர் தன்னுடைய பிரச்சனையை எதிர்கொள்ளத் தயாரில்லை. யார் ஒருவர் தன் பிரச்சனையை உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு அதைப் பற்றியே பேசுகிறாரோ அவருக்கு தீர்வு கிடைப்பது கடினம்.
அது போல் எப்போதும் பிரச்சனையை மட்டுமே தொடர்ந்து, தொடர்ந்து பேசும் நபர்களிடம் அடிக்கடி சொல்லும் விசயம்... ” நீ உயிரோடு இருப்பதற்கு, புத்தி தெளிவாக இருப்பதற்கு, உடல் நலத்தோடு இருப்பதற்கு, வேலையோ தொழிலோ செய்வதற்கு முதலில் சந்தோசப்படு, ஏதோ ஒரு கட்டத்தில் பிரச்சனையைத் தீர்த்து விடலாம் அல்லது பிரச்சனை பக்கத்தில் வைத்துக்கொண்டே வாழ்க்கையை நல்லபடியாக நகர்த்த பழகிக்கொள்ளலாம்” என்பதுதான்.
முகத்திற்கு நேராக கையை நீட்டி விரல்களை விரித்து அந்த விரல்களின் வழியே பாருங்கள்.... விரல்களின் ஊடாக உலகம் தெரியும், இப்போது விரல்களை மட்டும் பாருங்கள், விரல்கள் மட்டும்தான் தெரியும், உலகம் மங்கிப்போயிருக்கும்
முனைகள் இல்லாத நூல் கண்டு இல்லை, தேடினால் கிடைக்கும், சில சமயம் உடனே.... சில சமயம் காலம் தாழ்ந்து...
_______________________________________
வாழ்க்கையில் ஏதாவது ஒரு வடிவில் சிக்கல்களோ அல்லது பிரச்சனைகளோ வருவதை ஒரு போதும் தவிர்க்க முடியாது. ஆனால் வந்த பிரச்சனையை எப்படி கையாள்கிறோம் என்பதுதான் முக்கியம்.
காரணம் இருந்தாலும், சில சமயம் காரணம் இல்லாவிட்டாலும் கூட பிரச்சனை என்பது ஏதோ ஒரு உருவத்தில் வரத்தான் செய்யும். முதலில் நமக்காக வரும் பிரச்சனையை முழுதாய் உள்வாங்குவது அவசியம், அப்போதுதான் அதன் நீள அகலம் தெரியும், அதை எப்படி அணுகுவது என்பது குறித்து ஆராய முடியும். இங்கு மிக முக்கியம் குறைந்த பட்சம் பிரச்சனையை உள்வாங்குவது, அதை விடுத்து பிரச்சனையை உள்வாங்காமல் உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு, எனக்கு பிரச்சனை வந்துடுச்சு, எப்படித் தீர்க்கப்போறேனேனு தெரியலை என்று புலம்புவதால் ஒரு போதும் பிரச்சனையைத் தீர்க்க முடிவதில்லை.
என்னிடம் யாராவது தங்களுடைய பிரச்சனையை குறித்து பேசும் பொழுது, முதல் தடவை அதை முழுதாக கேட்பேன். அதே நபர் திரும்பவும் அதே பிரச்சனை குறித்து முதலில் பேசிய விசயத்தையே மீண்டும் பேசினால் கிட்டத்தட்ட புரிந்துவிடும், அவர் தன்னுடைய பிரச்சனையை எதிர்கொள்ளத் தயாரில்லை. யார் ஒருவர் தன் பிரச்சனையை உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு அதைப் பற்றியே பேசுகிறாரோ அவருக்கு தீர்வு கிடைப்பது கடினம்.
அது போல் எப்போதும் பிரச்சனையை மட்டுமே தொடர்ந்து, தொடர்ந்து பேசும் நபர்களிடம் அடிக்கடி சொல்லும் விசயம்... ” நீ உயிரோடு இருப்பதற்கு, புத்தி தெளிவாக இருப்பதற்கு, உடல் நலத்தோடு இருப்பதற்கு, வேலையோ தொழிலோ செய்வதற்கு முதலில் சந்தோசப்படு, ஏதோ ஒரு கட்டத்தில் பிரச்சனையைத் தீர்த்து விடலாம் அல்லது பிரச்சனை பக்கத்தில் வைத்துக்கொண்டே வாழ்க்கையை நல்லபடியாக நகர்த்த பழகிக்கொள்ளலாம்” என்பதுதான்.
முகத்திற்கு நேராக கையை நீட்டி விரல்களை விரித்து அந்த விரல்களின் வழியே பாருங்கள்.... விரல்களின் ஊடாக உலகம் தெரியும், இப்போது விரல்களை மட்டும் பாருங்கள், விரல்கள் மட்டும்தான் தெரியும், உலகம் மங்கிப்போயிருக்கும்
முனைகள் இல்லாத நூல் கண்டு இல்லை, தேடினால் கிடைக்கும், சில சமயம் உடனே.... சில சமயம் காலம் தாழ்ந்து...
_______________________________________
Jan 20, 2010
தங்கக்கூண்டு
இந்தத் தலைமுறை இது வரை எந்தத் தலைமுறையும் கொண்டாடாத அளவிற்கு குழந்தைகளை தாங்குதாங்கென்று தாங்கிக் கொண்டாடுகிறது. அதுவும் நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களின் குடும்பங்களில் வரும் சின்னச் சின்ன சண்டைகளுக்கு குழந்தைகள் மீது காட்டும் அதீத அன்பும் காரணமாக இருக்கின்றது.
கிராமப் பின்னணியிலிருந்து நகரத்துக்குள் புலம் பெயர்ந்தவர்கள் கூட குழந்தைகளை வீதிகளில், மண் புழுதியில், தங்கள் பகுதியில் இருக்கும் பூங்காக்களில், மொட்டை மாடிகளில் விளையாட அனுமதிப்பதில்லை. பள்ளிக்கு காடு, கரையில் நடந்து போய், பலமைல் தூரம் மிதிவண்டியில் போய் படித்தவர்கள் கூட தங்கள் பிள்ளைகளை குறைந்த பட்சம் தங்கள் வீதியின் எல்லை வரை நடக்க இன்று அனுமதிப்பதில்லை. வாசலிலேயே பள்ளி வாகனத்தில் ஏற்றி, இறக்க ஏற்பாடு செய்திருக்கிறோம்.
வெளியில் விளையாடினால் ஆரோக்கிய குறைவாகிவிடும் என வீடியோ விளையாட்டுகளில் கட்டிப் போட்டு, வெளியில் அழைத்துச் செல்ல வாசல் படியில் நம் வாகனத்தை தயாராக நிறுத்தி எல்லா வகையிலும் நம் குழந்தைகள் சராசரியான வாழ்க்கையைத் தாண்டி வாழவேண்டும் என நினைப்பதும், இரவில் நீண்ட நேரம் குழந்தைகள் தொலைக்காட்சி பார்க்கவும், காலையில் தாமதமாக எழுந்திருக்கவும் அனுமதிப்பதையும், பள்ளிக்கு கிளம்பும் அவசரத்தில் ஏதோ ஒரு ஜங் ஃபுட்டை திணிப்பதையும், பாட்டிலில் அடைத்த குளிர்பானங்களையும், சாக்லெட்களையும் எப்போதும் குளிர்சாதனப் பெட்டியில் நிரப்பி வைத்திருப்பதையும் அன்பின் வெளிப்பாடு என்று நினைக்கிறோம்.
வீட்டில் அவர்களை சுயமாக பல்துலக்க, குளிக்க வைப்பதை கூட அனுமதிக்காமல் அல்லது அதை செயல் படுத்தத் தெரியாமல் நாமே செய்ய நினைப்பது அன்பின் பெயரில் திணிக்கும் வன்முறையாகவே தோன்றுகிறது. குழந்தைகள் மேல் இதுபோல் அன்பும் செல்லமும் பொங்கி வழிகிறது, திகட்டுமளவிற்கு பல நேரங்களில்.
யார் நமக்கு இப்படிக் கற்றுக் கொடுத்தது? எங்கே கற்றுக் கொண்டோம், ஏன் கற்றுக்கொண்டோம் இப்படி குழந்தைகளை வளர்க்க.
இன்னொரு விதமான குழந்தைகள் உலகமும் நமக்கு மிக அருகில் தானே இருக்கின்றது. நம் பகுதியில் இருக்கும் ஏதாவது ஒரு அரசு ஆரம்பப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அவர்கள். பெரும்பாலும் காலை நேரங்களில் சாரை சாரையாக தார் சாலையின் ஓரத்தில் அணி அணியாக கொஞ்சம் கசங்கிய சட்டையோடு, காலில் செருப்புகள் கூட இல்லாமல் தினமும் பள்ளிக்கு நடந்தே வருவதை கவனித்திருக்கிறேன். ஐந்திலிருந்து பத்து வயதிற்குள் இருக்கும்.
எல்லோரின் முதுகிலும் ஒரு புத்தகப்பை தொங்கிக் கொண்டிருக்கிருக்கும். சிலரிடம் மதிய உணவுக்கான பை தொங்கும், மற்றவர்கள் அநேகமாக பள்ளியில் மதிய உணவை உண்ணும் பிள்ளைகளாக இருப்பார்கள்.
நெரிசலான சாலைகளை மிக அநாயசமாக கடந்து போகக் கூடிய தைரியத்தை அவர்களுக்கு வாழ்க்கை கற்றுக் கொடுத்திருக்கிறது. தங்களை கடந்து போகும் இரு சக்கர வாகனங்களை எந்த வித கூச்சமும் இல்லாமல் கைகளை நீட்டி, கட்டை விரலை உயர்த்தி “அண்ணா... ஸ்கூலு வரைக்கு வர்ரேண்ணா... ப்ளீஸ்ணா” என கேட்கும் மன உறுதியை அந்தப் பிள்ளைகளிடம் சமூகம் கற்றுக் கொடுத்திருக்கிறது.
அநேகமாக அவர்கள் நகரத்தின் ஓரத்தில் பிதுங்கி நிற்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மனிதர்களின் பிள்ளைகளாகத்தான் இருப்பார்கள். நிச்சயமாக அந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் தினக்கூலிகளாகத்தான் இருக்க வேண்டும். சில பிள்ளைகளுக்கு காலை நேர உணவை வீட்டில் தயாரித்துக் கொடுக்க பெற்றவர்களுக்கு நேரம், வசதி இருப்பதில்லை. முதல் நாள் இரவு சமைத்த உணவையே அடுத்த நாள் காலையிலும் சாப்பிடவேண்டிய நிலை இந்தப் பிள்ளைகளுக்கு இருந்து கொண்டிருக்கும்.
மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது அந்தப் பிள்ளைகள் சாலையோரங்களில் குதூகலமாக விளையாடிக்கொண்டு போவதைப் பார்க்கமுடியும். வீட்டுக்குச் திரும்பும் நேரங்களில் அவர்களின் பெற்றோர் வீட்டில் இருக்க வாய்ப்பில்லை. யாராவது வேலைக்கு போகமுடியாத வயதானவர்கள் இருந்தால்தான் அவர்களைக் கவனிக்க வாய்ப்பிருக்கும், அப்படியில்லாத குடும்பங்களில் அந்த பிள்ளைகள் இரவு வரை கவனிப்பார் யாரும் இல்லாமல்தான் அவர்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் அந்த குழந்தைகளிடம் ஏதோ ஒரு துணிவு அதிகம் குடி கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.
விலை உயர்ந்த கல்வி, உலகத்தை உள்ளங்கையில் கொண்டு வரும் தொடர்பு வலை, விலை உயர்ந்த, சத்தான (!!!) உணவு, குடும்பத்தினரின் அதீத கவனிப்பு என கிடைக்கும் குழந்தைகளுக்கு, சமூகத்தோடு ஊடுருவிப் பழகும் வாய்ப்பு, சாலைகளில் சகஜமாக விளையாடிப் பெறும் நோய் எதிர்ப்பு சக்தி, சட்டென இன்னொரு மனிதனோடு ஒட்டும் திறன், எந்தச் சிக்கலையும் எதிர்கொள்ளும் மனோபாவம் திகட்டத் திகட்ட நாம் திணிக்கும் அன்பால் கொஞ்சம் குறைவாகவே புகட்டப்படுவதாகவே என நினைக்கிறேன்.
தங்கத்தில் செய்தாலும் கூண்டு சிறைதானே....
______________________________________________
Subscribe to:
Posts (Atom)
வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்
பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...
-
க ண்ணுக்குத் தெரியாத மின் காந்த அலைகளினூடாக பின்னப்பட்ட வலைத்தளம் இணைத்து வைத்த உறவுகளை பெரும்பாலும் வாசிப்பிலும், பின்னூட்டங்களிலும் சில ச...
-
பருவ மழை பொய்த்துப் போய் விடும், வறட்சி தாண்டவமாடும், எல்லோரும் செலவுகளைக் குறைப்போம் என விளம்பர யுக்தியோடு நாடு முழுதும் அரசியல் வாதிகள் அற...
-
ஒரு படைப்பாளி மனதில் மிதந்து கொண்டிருந்த விசயங்களை இறக்கி வைக்கும் ஒரு தளமாகவே பெரும்பாலும் வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கிறான். ஆரம்பத்தில் இலக...

