Showing posts with label மிச்சமிருப்பவை. Show all posts
Showing posts with label மிச்சமிருப்பவை. Show all posts

Dec 30, 2011

சிறகசைப்பு


மனிதர்களுக்கு ஏன் இந்த உளச்சிக்கல் என்பதுதான் புரியவில்லை! ஒரு மனோநிலையைப் எழுத்தில் சில வார்த்தைகளில் பகிர்ந்துகொள்வது என்பது ஒருவித விடுபடல். அதேசமயம் அதை ஒத்த மனோநிலை கொண்டோரின் மனதையும் சற்றே மீட்டிப்பார்க்கவும், அதை நெகிழ்ச்சியாய் அனுபவிப்பதற்குமான ஒரு வாய்ப்பு மட்டுமே. உதாரணத்திற்கு எழுதுபவரின் மனோநிலையை பிரதிபலிக்கும் எழுத்து வாசிக்கும் யாரோ ஒருவருக்கு, அதே போன்ற மனநிலை, சூழலை நினைவூட்டலாம் என்பது போல்..



ஒவ்வொரு இருவரிச் செய்திக்குள்ளும், துணுக்கிற்குள்ளும், கவிதை வரிகளுக்குள்ளும் ஒளிந்து கிடப்பது,  யார் யார் என ஆவேசமாகத் தேடுவது ஒருவித நோய்மை மனோபாவம் என்றே தோன்றுகிறது. அப்படியே தேடி ஒரு ஆளின் பெயர் தெரிந்தால் மட்டும், அதில் என்னவித உணர்வு கிட்டிவிடப்போகிறது. ஒருவேளை அப்படி எவர் ஒருவரும் இடம்பெறாமல், ஒரு சூழலை வைத்து அந்த மனோநிலை சார்ந்த எழுத்து வந்திருந்தால், அப்போது எதைக்கொண்டு நிரப்பப்போகின்றோம்!

இதையெல்லாம் உற்று நோக்கும்போது அழுத்தமாக ஒன்று சொல்லத் தோன்றுகிறது… பெரிசா ஒன்னும் இல்ல “போங்கப்பா, போங்க போயி புள்ளகுட்டியைப் படிக்க வைங்க” என்றுதான்.

-0-

சமீபத்தில் ஒரு கிடா விருந்துக்கு அழைப்பு. பந்தியில் என் பக்கத்தில் ஒரு இளவட்டம் அநியாயத்துக்கு ஒல்லியாய். வந்து அமர்ந்ததிலிருந்து வலது பக்கக் காதில் அணைத்த போனோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். பேசியதில் இவர் எதோ காதலுக்கு பஞ்சாயத்து செய்கிறார் என்று மட்டும் புலப்பட்டது. 

ஆட்டுக்கறி, கோழிக்கறி, தலைக்கறி, பிரியாணி எனப் பரிமாறப்பட்டிருந்தது. என்னையொத்த எல்லோரும் சுவாரசியமாய் சாப்பிடுவது தெரிந்தது. அவர் மட்டும் சுவாரசியமாய் பஞ்சாயத்து செய்துகொண்டு நுனி விரல்களால் பிரியாணியைக் கொத்திக்கொண்டிருந்தார். இடையில் ஒருவர் ஒவ்வொரு இலைக்கும் வந்து ”என்னங்க வேணும், என்னங்க வேணும், கேட்டு வாங்கிச் சாப்பிடுங்க” எனக் கேட்டுக்கேட்டு பரிமாறச் செய்தார். என்னைக் கேட்டபோது பந்தி நாகரீகம்(!) கருதி, ”வேண்டாங்க” எனப் புன்னகையால் அவரை நகர்த்தினேன். இளவட்டத்திடம் கேட்டதற்கு தலைக்கறி இருந்த இடத்தை மட்டும் தொட்டுத்தொட்டு காட்டினார். யாரையோ அழைத்து ”தம்பி, இந்த இலைக்கு தலைக்கறி வை” என ஆணையிட்டார்.

நான் இடைவிடாது தீவிரமாக என் கடமையை ஆற்றிக் கொண்டிருந்தேன். திடீரென என் இலையில் தலைக்கறி ஒரு கரண்டி அளவுக்கு விழுந்தது. நிமிர்ந்து பார்த்தபோது, கறி வைத்த பையன் வாளியோடு மேசை நோக்கிப் போய்க்கொண்டிருந்தான். சுற்றும்முற்றும் பார்த்தேன், ஒல்லி இளவட்டம் பஞ்சாயத்து செய்துகொண்டு எச்சில் கை விரலை தலைக்கறி தீர்ந்த இடத்தில் இன்னும் தட்டிகொண்டுடிருந்தது. பிரியாணிக்குப் பிறகு சாதம், குழம்பு, ரசம், தயிர் என எல்லாம் நிறையும் நேரத்தில், ஒருவழியாய் ”ஒரு நிமிசம் மச்சி” என்று விட்டு, தயிர் ஊற்றிக்கொண்டிருந்தவரிடம் ”தலைக்கறி கேட்டேனே?” என்றது. எல்லோரும் இலையை மடக்கிக்கொண்டிருந்தனர். அந்த இலையில் பாதி பிரியாணி அப்படியே இருந்தது. பயபுள்ள ஏன் அநியாயத்துக்கு ஒல்லியா இருக்குதுனு அப்போத்தான் எனக்கு புரிஞ்சுது. நான் எழுந்து, கை கழுவ நகரும் போது, கூடுதலாய் ஒரு கரண்டி தலைக்கறியும் இருந்த என் வயிறு அவரின் முதுகுமேல் உரசி வேறு தொலைத்தது.

--0--

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...