Showing posts with label தொழிற்புரட்சி. Show all posts
Showing posts with label தொழிற்புரட்சி. Show all posts

Feb 22, 2011

வண்ண வெடிப்புகளுக்கிடையே


அழகான தங்கத்திருவோடு
வாங்கும் வறுமைக்கு
அட்சய பாத்திரத்தில்
மலம் கழித்த பெருமையும்…

வீச்சத்தை மறைக்க
வாசம் வழியும் பூவை
வலிக்கவலிக்க மேலும் கசக்கி
போர்தொடுக்கும் கலவியும்…

பச்சைப்பிள்ளை பசியில்வாட
பால் கனக்கும் மார்புக்காம்புகளில்
கண்ணைப்பறிக்கும் வர்ணமென
விஷம் பூசும் விபரீதமும்…

விளக்குகளில் குளிர்காய்ந்து
இரவுகளைப் பகல்களாக்கி
எலும்புகளுக்குள் நோய்புகுத்தி
இற்றுப்போகும் மனதுகளையும்...

எழுதிச் சலித்து விட்டது
வெளுத்துச் சாயமிட்ட விஷத்தில் 
மாண்டுபோன நிலங்களின் 
வண்ண வெடிப்புகளுக்கிடையே!

-0-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...