Showing posts with label ஒப்பாரி. Show all posts
Showing posts with label ஒப்பாரி. Show all posts

May 18, 2016

முடிந்து வைத்திருக்கும் ஒப்பாரி





மரணத்தின் ருசி இதழோரம் கசிய
விரைத்துக் கிடக்கிறாள் கெழவி
இரவில் தடுக்கி விழுந்து
தனக்காகக் காத்துக்கிடந்த மரணத்திற்கு
கதவு திறந்துவிட்டிருக்கிறாள்

கெழவியின் கதை பேசும் அக்கம்பக்கம்
பெருஞ்சாவைக் கும்பிடும் பிள்ளைகள்
காரிய விருந்துக்கு விவாதிக்கும் உறவுகள்
மாரடிக்கும் அவசோட்டுக் கிழவிகள்

அம்மா மாமியா அம்மாயி ஆத்தா
மாமூட்டு அத்தை மூலையூட்டாயா
சின்னம்மா கண்ணாடிக்காரம்மா
வெவ்வேறு அடையாளம் அவள்

லாந்தர் வெளக்கும் சாக்குப்பையுமாய்
ஊரூராய் கூத்துப் பார்க்க அழைத்துப்போன
வாழ்வின் முதல் தோழியும் அவள்
நல்லதங்காளும் குன்னுடையான் கதையும்
படிப்பித்த ஆசிரியக்கெழவியும் அவள்

ஒத்தை எழவு விடாமல் ஒப்பாரி பாடியவள்
தன் சாவுக்காக முந்தானைக்குள்
முடிந்து வைத்திருக்கும் ஒப்பாரியை
அவிழ்ப்பார் யாரோ, பாடுவார் யாரோ!?

-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...