May 28, 2016

மீனாகும் கருவாடு





கருணையின்றிப் பொழியும் வெயிலை
வேம்பின் கிளையொன்று தழுவும்
மதிற்சுவர் மேலிருக்கும் பூனை
தம் முன்னங்காலால் புறந்தள்ளுகிறது

இன்று தயிர்சோற்றில்
புளிப்பு கூடுதலாய் இருந்ததை
நினைத்துக் கொள்கிறது
விழி திறத்தலையும் இமை மூடலையும்
செல்லமாய்ப் போராடிக் கையாள்கிறது
கொழுத்த கருவாடொன்று நினைவில் மோத
மீசையில் உரசும் வண்ணம் நா சுழற்றுகிறது

மதிற்சுவரோரம் அமர்ந்திருப்பவனை
ஒரு மியாவ் அனுப்பி
அச்சுறுத்தவோ சிநேகிக்கவோ முயல்கிறது
மேலெழும்பும் பீடிப் புகையிலிருக்கும்
கஞ்சா மணம் கிறக்கமூட்டுகிறது

அருகாமைச் செடிக்கு ஒருவர்
தண்ணீர் வார்த்துப் போகிறார்
மலரும் செடியின் மூச்சுக்காற்று
பூனையின் சுவாசத்தில் சேர்கையில்
நினைவில் கிடந்த கருவாடு
மீனாய்த் துள்ளிக்குதித்து
வேரடி நீரில் பிரியம் பகிர்கிறது.

-

No comments:

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...