May 25, 2016

சட்டத்திற்குள் அடங்க மறுக்கும் பிரியம்





வெயிலை அறுத்தோடும்
இந்தப் பகற்பொழுது ரயில்
எந்த நிலையத்தைக் கடந்திருக்கிறது
நீ எங்கு ஏறினாய்
எந்தத் தருணத்தில் நான் இடம்பெயர்ந்தேன்
எதுவும் மனதில் தேங்கவில்லை

பின்னோடும் அடர் வனத்திலிருந்து
ஏதோ ஒரு செடியின் மலர் பறித்து
காற்றில் சரியும் கூந்தலில் சூட்டி
இதுவரையறியா மொழியொன்று பழகி
கவிதையாய் ஒப்பந்தமெழுதி
பிரியத்தின் முத்திரையிடுகையில்
இரைச்சலோடு எதிர் திசையிலிருந்து
ரயிலொன்று சீறிக் கடக்கிறது

இப்பயணம் நம்முடையது
என்பதை மட்டும் அறிகிறேன்
ஏதோ ஒரு நிலையத்தில்
நம்மில் யாரோ இறங்கியாக வேண்டும்
அதுவரையில்
ரயில் சிநேகம் என்ற சட்டத்திற்குள்
அடங்க மறுக்கும் இந்தப் பிரியத்திற்கு
என்ன பெயர் சூட்ட!?

-

No comments:

தொண்ணூறு சதவிகிதம் - ஈரோடு கதிர்

தொண்ணூறு சதவிகிதம் - ஈரோடு கதிர் ஒரே நாளில் பல்வேறு விதமான அனுபவங்கள் அமைவது இயல்பான ஒன்றுதான். சில வாரங்களுக்கு முன் ஒரு நாளில் , எனக்கு ...