கீச்சுகள் தொகுப்பு - 50



சுயசரிதையின் ஒரு முக்கியக் காரணி, அதிலிருப்பதை உண்மையென நம்புமாறு நிர்பந்தம் செய்வது!

-

தன் மீதிருக்கும் சந்தேகம் சில நேரங்களில் பாதுகாப்பு, பல தருணங்களில் பெரும்பிணி

-

நமக்குள்ளிருக்கும் உலகத்தின் எல்லைகளை, தான் நீண்டு செல்லும் பாதையெங்கும் விரிவுபடுத்துகிறதுவிவாதம்’.



-

திட்டமிட்ட சந்திப்புகளைவிட, எதிர்பாராமல், திட்டமிடாமல், முன்முடிவுகளற்று நிகழும் சந்திப்புகள் தரும் சுவை அலாதியானது.

-

ஒரு தனியார் பள்ளியின் அரங்கத்தில் காமராஜர் படம் பெரிதாக ஒட்டப்பட்டிருக்கிறது. சமூகத்திற்கு என்னவோ சொல்ல வர்றாங்க... ஆனா எனக்குப் புரியல!

-

வாக்கிங் போறேன்னு கடுப்பேத்தியவனிடம், “நடந்து போ!” எனச் சொல்லி தற்காலிகமாகப் பழி தீர்த்துக் கொண்டேன்! :)

-

இந்த மழை மண் வாசனையைக் கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை. தார் ரோட்டில் தேய்ந்த டயர்களின் நாற்றத்தை அகற்றும் அளவிற்கேனும் வந்தால் போதும்!

-

கிளையில் அமரும் பறவை மரத்தின் வேர் குறித்தெல்லாம் ஆராய்ச்சி செய்வதில்லை!

-

கீழ்நோக்கி வரைந்த கோடு ஒன்றினை முற்றுப்புள்ளி வைத்து நிறுத்தினேன் புள்ளி வழிந்துகொண்டிருக்கிறது

-

நெடுஞ்சாலைடோல்கேட்களில் வேலை செய்யும் பையனிடம் கட்டணம் குறித்த கோபத்தைக் காமிப்பதும் உலகின் தலைசிறந்த மொக்கைத்தனமே!

-

தராசுத் தட்டுகளில் அமைதியும் கொண்டாட்டமும்! முள்ளொன்றும் நேராக நிற்க வேண்டியதில்லை!

-

அடர் வனமொன்றில் அவசரமாய்த் தொலைந்து போகலாம் வாருங்கள்! அவசரமொன்றுமில்லை ஆற அமரத் தேடிக்கொள்வோம்!

-

டிபன் பாக்ஸ்லயிருந்து திங்கிறது என்ன சோறுனு தெரியாம அள்ளிப் போடுறதும், போன் பண்ணி அதென்ன சோறுனு கேக்காம மறந்து போறதும்கூட ஜென் நிலைதான்!

-

கடந்தோடும் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யங்களை நம் உள்ளங்கையில் வைத்து, விரல்களை மடக்கி மூடி, விரல்களின் மேல் செல்லமாய் தட்டிவிட்டுப் போகின்றன.

-

முரண்களின் மொத்தத் தொகுப்பாகவும், சுவாரஸ்யங்களின் கிடங்காவும் தங்களை தகவமைத்துக் கொள்வதில் மனிதர்களுக்கு நிகர் மனிதர்களே.

-

ஒரு விடியலின் சாயம் குழந்தைக்கு ஒருவிதமாகவும், பெற்றோர்களுக்கு அதன் நேரெதிராகவும், அக்கம்பக்கத்தாருக்கு இன்னொரு விதமாகவும் அமைகின்றது

-

வாழ்க்கையின் ஆகச்சிறந்த சுவாரஸ்யம் நாம் வாழவேண்டிய எந்த ஒரு நாளையும், அது இப்படித்தான் இருக்க வேண்டுமென வடிவமைத்துக்கொள்ள

-

என்னைக் குறித்து நீங்கள் நினைக்கும், கற்பனை செய்யுமளவிற்கு இருக்க, நினைக்க, கற்பனை செய்ய எனக்கு என்னிடம் அனுமதியில்லையென்பதே நிதர்சனம்!

-

நாத்திகன் மேல் ஆத்திகனுக்கு வரும் கோபம், கடவுளை நம்பவில்லையே என்பதைவிட, தன் நம்பிக்கையை நம்பவில்லையே என்பதுதான்! :)

-

எட்டிப்பிடிக்க முடியா முதுகின் மையத்தில் ஊர்ந்து செல்லும் எறும்பை நசுக்கவோ/உதறவோ தவிப்புபோல் வாழ்வின் சில சூழல்கள் தவிக்க வைக்கின்றன.

-

5 comments:

சேக்காளி said...
This comment has been removed by the author.
சேக்காளி said...

/கீழ்நோக்கி வரைந்த கோடு//
நீங்கள் வரையவில்லை என்றான பின் அதை எப்படி கீழ் நோக்கி வரைந்தது என்று சொல்ல முடியும்?

'பரிவை' சே.குமார் said...

கீச்சுக்கள் அருமை அண்ணா...

தாஸ். காங்கேயம் said...

சுயசரிதையின் ஒரு முக்கியக் காரணி, அதிலிருப்பதை உண்மையென நம்புமாறு நிர்பந்தம் செய்வது!

SACHIN!?

Unknown said...

class as usual