Jul 5, 2014

மன்னிக்க வேண்டுமென்கிறார்கள்





வேர் முடிச்சுகளில்
புதைந்துறங்கும்
பிச்சைக்காரக் கிழவி
நைந்த மூட்டையோடு
வெறித்தபடி
இடம் பெயர்கையில்

வாடிக்கையாய் நிழல் பருகும்
உள்ளே குளிர்படிந்த
வெளிநாட்டுவகைக் காரொன்று
வேறு கிளைகள் தேடித்
தயங்கி ஊர்கையில்

இறக்கை முளைக்கா
குஞ்சுகளை

தாய்க்குருவியொன்று
இடமாற்றிடத் துடிக்கையில்

நாளை பூப்பெய்தலாமென
நினைத்த மொக்கொன்று
அவசரமாய் உதிரம் சொட்டியபடி
உதிர்கையில்

விரல்களைத் துண்டித்து
ஒரு கொலையைத்
துவங்குவதுபோல்
கிளைகளில்
துவங்குகின்றனர்
மரம் வெட்டும் கூலிகள்

கொதிக்கும் கோடையிலும்
மரம் வெட்டப்படுவதை
மேகங்கள் மன்னிக்க
வேண்டுமென்கிறார்கள்
மௌனமாய்க் கடந்து
செல்கிறவர்கள்!

-

7 comments:

gunasekaran said...

மழையும் வேண்டும்
மரமும் வேண்டும் என்கிறது
மனித மனம்

ஆனால்,
இங்கோ
அரிவாளோடும் ரம்பத்தோடும்
பாவம் செய்கிறது
கொஞ்சமும் ஈவிரக்கமின்றி...
எங்கே கொண்டு போய் விடப் போகிறார்களோ இப்பூவுலகை...?

அற்புதமான கவிதை நண்பரே..
வாழ்த்துக்கள் !

Thoduvanam said...

கொல்லும் மௌனம் ..

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கற்பனையும் உவமையும் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சேக்காளி said...

'பரிவை' சே.குமார் said...

அற்புதமான கவிதை அண்ணா...

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை.

Unknown said...

எந்த வார்த்தையும் தேவையில்லை என்று ஒதுக்கி விடமுடியாத படியான வார்த்தை ப்ரயோகம்...கவிதையும்,சொல்லாடலும் அசத்தல்

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...