கீச்சுகள் - 34



கோபத்தை மட்டும் வேகமாய் உடனுக்குடன் வெளிப்படுத்தும் மனது, அன்பையையும், நன்றியையும் அதே வேகத்தில் வெளிப்படுத்துவதில்லை!

-0-

இன்றைக்கு தேதி கிழிக்க மறந்து போனேன். அதனால் நேற்றிலேயே வாழ்ந்துவிட்டேன். #அடங்கப்பா எத்தன பல்பு! :)

-0-

பைக்ல இன்டிக்கேட்டர் இருப்பது ஆயுதபூஜைக்கு பொட்டு வெச்சு பூ மாட்டுறதுக்கு மட்டும்னு பலபேரு நினைக்கிறாங்க போல!

-0-

ஞாயிறு பிற்பகல் நகரப் போக்குவரத்தைப் பார்த்தால், 50 ஆண்டுகள் பின்னோக்கி போய்விட்டதுபோல் தோன்றுகிறது.

-0-



குடும்பத்தில் காட்டும் எல்லாக் கோபங்களுக்குப் பின்னாலும் ஒரு அன்பு இருக்கின்றதென்பதை தெரிவிக்க மறந்து விடுகிறோம்

-0-

தெளிவாக இருக்க முயல்வது போன்ற கிறுக்குத்தனத்திற்கு நிகர் ஏதும் இல்லை!

-0-

டாஸ்மாக் வாசலில் தள்ளுவண்டியில்கம்மங்கூழ்விற்பவன் ஏமாளியாகவும், புத்திசாலியாகவும், கருணை மிகுந்தவனாகவும் தெரிகிறான்.

-0-

நெருக்கடி மிகுகையில், விதவிதமாய்ப் பற்றும் கரங்களில் கடவுளை உணர்கிறேன்!

-0-

கம்மஞ்சோற்றை முதன் முதலில் படைத்தவன்/ள், ரொம்ப நாள் டாவடிச்சு போக்கு காட்டிய ஜீவனிடமிருந்து சூடாகாவோ / சில்லுனோ முத்தம் வாங்கிய ஒரு நேசிப்பு மிகுந்த தினத்தில்தான் உருவாக்கி, இப்படி பழைய சோறாக குடிக்க வேண்டும் என பக்குவமும் சொல்லியிருக்க வேண்டும்!
-0-

எல்லா கேள்வி, புகார்களுக்கு ஒற்றை முத்தம் பதில், தீர்வாக அமைந்து விடுவதுண்டு. சில பொழுது இல்லாத கேள்வி, புகார்களை எழுப்பியும்விடும்!

-0-

எதாச்சும் தத்துவத்தைப் போட்டு கீழே ”-யாரோஇப்படிப் போடுறாங்களே, இந்த ”-யாரோங்கிறது யாரா இருக்கும்?

-0-

போனில்அஞ்சே நிமிசத்துல கூப்பிடறேங்கனு சொன்ன ஒருத்தரைக்கூட, அஞ்சேகால் நிமிசத்துலகூட நான் கூப்பிட்டதேயில்லை #நல்லா வருவடா (மீ –>என்னை)

-0-

தென்னை உண்டு இளநீர் குடிப்பதில்லை, பனை உண்டு நொங்கு உண்பதில்லை..... ஆனாலும் பிள்ளைகள் வளர்கிறார்களாம். நாங்கள் வாழ்கிறோமாம்!

-0-

ஒவ்வொரு தினத்தையும் இன்பத்திலோ, துன்பத்திலோ நனைத்து உலரப் போடுகிறோம்! சில தினங்கள் மட்டும் அவ்வளவு எளிதில் உலர்வதில்லை!

-0-

பம்ப்செட் தண்ணி எடுக்கலைனா சாணியைக் கரைச்சு ஊத்தினா தண்ணி எடுக்கும்னு கண்டுபிடிச்ச விஞ்ஞானி நம்ம தமிழக விவசாயியாகத்தான் இருப்பார்!

-0-

டீ கடக்கார அண்ணே, சூரியன் சார் புண்ணியத்துல கொதிக்கிற பைப் தண்ணிய புடிச்சு தூளு சக்கரை போட்டு டீ தர்றீங்களே, ஒரு எட்டணா குறைச்சிக்கபடாதா?

-0-

மதிய சோற்றைவிட குழம்பு, ரசம் இருமடங்காக இருக்கும் நாட்களில் சமூகம் ஏதோ சேதி சொல்லவிரும்புவது புரிகிறது. #வெயில்ல யோசிக்கத்தான் முடியல

-0-

வாசிக்கிற லட்சணத்துல பார்த்தா, கையில் இருக்கும் புத்தகங்களை வாசித்து முடிக்கவே இன்னொரு ஜென்மம் தேவைப்படும்போல இருக்கே! #சோம்பேறித்துவம்

-0-

நமக்குகெடுதல் நிகழப்போவதாகமனது கற்பனை செய்த அளவிற்கு, நிஜத்தில் நிகழ்ந்திருக்குமானால் நம் எவராலும் வாழ்ந்து கொண்டிருக்கவே முடியாது!

-0-

பிறழ்வும் இனிதே! பிடித்திருக்கும் தருணங்களில்.

-0-

சட்டத்திற்குள் அடங்குவதே அழகு என்பதும் மாயை.

-0-

இருப்பதை விட, நம்மை கூடுதல் அழகாய் காட்டும் நிழற் படங்களை வெளியிடுவது ஒரு வித போதையோ?

-0-

கெட்டவனா/ளா இல்லாம இருக்கிறதுதான் பெரிய விசயம்!

-0-

விடியலின் வர்ணம் ஊருக்கு ஊர் வேறுபடத்தான் செய்கிறது

-0-

காலை மினுமினுக்கும் மேக்கப்பில் பார்க்கும் முகங்களைவிட, களைத்து வாடிய மாலை நேரத்து முகங்கள் வெகு இயல்பாய், கூடுதல் அழகாய் இருக்கின்றன

-0-
  
கொதிக்கும் வெயிலில் பெட்ரோல் தீர்ந்து வண்டியைத் தள்ளுபவன் துரதிருஷ்டசாலியாகவோ, பாவப்பட்டவனாகவோ மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை. சரியான நேரத்துக்குப் பெட்ரோல் போடாத சோம்பேறியாகவும் கூட இருக்கலாம். இறங்கும் இடம் தெரியாத பயணங்களும், வாழ்வில் தவிர்க்க முடியாதவை!

-0-

யுத்தமில்லா உலகை, போர் மூலமா தீர்மானிக்க முடியும்?

-0-

"சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்ததுபோல்" # இப்படி யாருய்யா கற்பனை செஞ்சது. ஒரு மாதிரிபிசுபிசுனு இருக்காது

-0-
விளையாட்டா கன்னத்தில் அடித்த மகளுக்கு முத்தம் தந்தால், ”இதுக்கு திருப்பி அடிச்சேயிருக்கலாம்ங்குது # கரண்ட் இல்லாட்டியும் பல்பு மட்டும்

-0-

காதுல செல்போன் வெச்சுட்டு போஸ் கொடுத்த ரியல் எஸ்டேட் ஆளுக, இப்ப டேபிள்ல லேப்டாப் வெச்சுட்டு போஸ் கொடுக்கிறாங்க #டெக்னாலஜி இம்ப்ரூவ்டாம்

-0-

ஒரு வேலை ரொம்ப கடியா இருக்கும்னு 10 நாளா தள்ளிப்போட்டேன். வேறு வழியின்றி இன்றைக்கு எடுத்தேன். 4 மணி நேரத்தில் ஓவர் #கேடுகெட்ட முன்முடிவு

-0-

தோல்விகள், துன்பங்கள் என வலிக்கவலிக்க சுயசரிதை எழுதும் வாய்ப்பு வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது!

-0-




சில பிரச்சனைகள் எந்த ஒப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டது!


 -0-

இணைய சமூகதளங்களில் சாதி, கட்சி, சினிமா என மக்கள் அடித்துக் கொள்வதில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட, இவர்களுக்கு சாதி / அரசியல் / சினிமா குறித்த உணர்வுகளை ஊட்டிய தலைகள்(!), தங்கள் எதிரிகளைச் சந்தித்தால் நிகழ்ந்துவிடாது...
இத்தனைக்கும் அவர்களின் கல்வியறிவு (கல்விக்கும் பக்குவத்திற்கும் தொடர்பில்லையெனினும்) இங்கேயிருப்போரைவிட சிறிது குறைவாகவும்கூட இருக்கலாம்!

-0-

நெருக்கடியான தருணங்கள் வாழ்க்கை குறித்த புரிதலோடு, அன்பாய், பரிவாய், கதகதப்பாய்ப் பற்றும் கரங்களையும் இனம் காட்டுகிறது!

-0-

IPL மேட்ச் பார்த்துட்டிருந்த நண்பர் இன்னுமா Nokia போன் வெச்சிருக்கீங்னு கேட்டாரு, நான் இன்னுமா IPL பாக்றீங்கனு கேட்டேன் #ஏன் முறைக்கிறாரு!

-0-

ரொம்ப பிசியா இருக்கிற ஆஸ்பத்திரில ஒருபொழுது இருந்து பார்த்தாத் தெரியும், உடல் ஆரோக்கியத்தோட வாழ்ந்துட்டு இருக்கிறதே எத்தனை பெரிய வரம்னு!

-0-

காதுகள் இரண்டாக இருக்கும் போதிலும், வாய் ஒன்று மட்டுமே இருப்பதென்பது ஏனோ அடிக்கடி மறந்து போய்விடுகிறது!

-0-

மன இடுக்கெங்கும் நிரம்புகிறது வெயில்!

-0-

ரயில்ரோட்டோரம் கெடக்குற இரும்பை பேரீச்சம்பழத்துக்கு போட்டாலே, இந்தியாவுல இருக்கிறவங்களோட இரும்புச் சத்துக்குறைபாட்டை சரி செய்திடலாம்.

-0-

நிஜமா சொல்றேன்ஓசி சோத்துக்குருசி அதிகம்! :)

-0-

தெருவில் சண்டை போடுபவனுக்கு எப்போதும் சண்டை முக்கியமில்லை வேடிக்கை பார்ப்பவனே முக்கியம்!

-0-

குளிர்காலத்துல பேங்க் போனா A/cய 16லவெச்சு முக்காமணி நேரம் வெயிட் பண்ணவெச்சாங்க, இன்னிக்கு போனா A/cய30லவெச்சுட்டு 3 நிமிசத்துல துரத்துறாங்க?

-0-

ட்விட்டர்ல யார்யாரையோ நான் ஃபாலோ பண்றேன், யார்யாரோ என்னை ஃபாலோ பண்றாங்க, என்னை நான் ஃபாலோ பண்றேனானு மட்டும் தெரியல!

-0-

90 நிமிசம் லேட்டா வர்ற ரயிலுக்கு என்னத்த "பயணிகளின் கனிவான கவனத்திற்கு" வேண்டியிருக்கு. "கடுப்பான கவனத்திற்கு"னு வேணா சொல்லுங்க.

-0-

அதென்ன சூரியன் சார், சினிம தியேட்டர் வாசல்ல மணிக்கணக்கா நிக்கிறவங்கள விட்டுட்டு, ஒன்னேகால் நிமிசம் சிக்னல்ல நிக்கிறவனை இப்படி சுடுறீங்க!

-0-

பல நேரங்களில் வேலை செய்வது சிரமமில்லை. வேலை குறித்த முன்முடிவுதான் சிரமப்படுத்துகிறது!

-0-

முதலில் தன்மீதும், அடுத்து பிறர்மீது குற்றம் காணாத மனிதன் சர்வநிச்சயமாக முன்னேறியே தீருவான்.

-0-

எங்கூர்ல கரண்ட் இருக்குனு சொன்னவங்களை விட, இப்போ எங்கூர்ல மழை பெய்யுது, குளுரடிக்குதுனு சொல்றவங்க மேலதான் ரொம்பப் பொறாமையா இருக்கு!

-0-

எல்லாவற்றிற்கும் காரணம் இருக்கும், பல நேரங்களில் அது தெரிவதில்லை, சில நேரங்களில் தெரிந்து கொள்வதில்லை!

-0-

வாழ்க்கையிலுள்ள புதிர்களின் முடிச்சவிழும் தருணம் பயம் நிரம்பியது

-0-

தன்னை நோக்கி தட்டப்படும் கைகளை பாராட்டு என நினைக்கும் கொசுவுக்குத் தெரிவதில்லைஇன்னிக்கு செத்தா நாளைக்கு பால்என்பது

-0-

3 comments:

R.DEVARAJAN said...

கதிர் அண்ணே
தூள் கெளப்புறீங்க !

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் அருமை.

goma said...

கசியும் மெளனம் பொழியும் பேரிரைச்சல்