தடுமனில் தவித்தவனிடம்
ஆவி பிடித்தாயா என்றாள்
அருகில் சூடாய் மூச்சுவிட்டபடியே!
ஆவி பிடித்தாயா என்றாள்
அருகில் சூடாய் மூச்சுவிட்டபடியே!
-
மழைக்கு ஒதுங்க வந்தவள்
உருவாக்கிவிட்டுப் போகிறாள்
ஒரு பெரும் புயலை!
-
விதைகளை பூக்களாக
மாற்றும் இரசவாதத்தை
அவள் மட்டுமே அறிந்திருக்கிறாள்!
-
மௌனங்கள் நிரம்பிய காதலில்
எழுதவும் வேண்டுமா
கடன் வாங்கி ஒரு கவிதையை!
-
பூக்கள் உரசி
நெருப்பு மூளும் மாயம்
முத்தங்களில் மட்டுமே!
நெருப்பு மூளும் மாயம்
முத்தங்களில் மட்டுமே!
-
படத்தில் முத்தம் பதிக்கவா
எனக்கேட்டாள், வேண்டாம்
எறும்பு மொய்க்கும் என்றேன்!
-
11 comments:
எறும்பு மொய்க்கும் என்றேன் ! செம சார் :)
//வேண்டாம் எறும்பு மொய்க்கும் என்றேன்! //
ஸ்ஸப்பா ஓவரா கண்ணகட்டுதே...
அமைதியான காதல் கவிதை
அருமை
Appidi podunga.
/படத்தில் முத்தம் பதிக்கவா
எனக்கேட்டாள், வேண்டாம்
எறும்பு மொய்க்கும் என்றேன்! /
ஏன்? அப்பதான் குச்சி முட்டாய் சாப்டாகளோ?
படத்தில் முத்தம் பதிக்கவா
எனக்கேட்டாள், வேண்டாம்
எறும்பு மொய்க்கும் என்றேன்!
...Honey ? -:)
அன்பின் கதிர் - தடுமன் - வட்டார வழக்கா - எங்கள் பக்கம் வழங்கும் சொல் - கவிதை நன்று - புயலை உருவாக்குவது - இரசவாதம் - பூக்கள் உரசலில் நெருப்பு - எறும்பு மொய்த்தல்- கற்பனை வளம் - கொடி கட்டிப் பறக்கிறது - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
இப்படி ஆகிப்போயிடுச்சா நிலமை :))
எல்லாமே நல்லாயிருக்கு.
2 கிளிஷே.
ரொம்ப நல்லா இருக்குங்க!!!!
பூக்கள் உரச நெருப்பு மூளும் ... அருமை !
Post a Comment