கீச்சுகள் - 11



நான் எழுதநினைக்கும் உணர்வு தளும்பும் வரிகளை என்னை விடச்சிறப்பாய் எவரேனும் எழுதிடுகையில் நான் தோற்றுப் போகிறேன் என்வரிகள் ஜெயித்துவிடுகின்றன

-

கடவுள்ஹிக்ஸ் போஸன்இருப்பது உண்மை-செய்தி. ஆசிரமம், கெடாவெட்டு, மாலை விரதம்னு ஆளாளுக்கு ஆரம்பிச்சிடுவாங்களே #கடவுள் பாவம் :)

-

சிலரிடம் சேரவேண்டிய செய்தியை, ஒருவரிடம் சொல்லி அந்தச்சிலரிடம் சொல்ல வேண்டாம் எனச்சொல்லுங்கள் அனைவரிடமும் சரியாகப்போய்விடும்! #எப்பூடி:)

-

அடர்ந்து வெற்றி பெறுபவனிடம், கொண்டாடிக் கொண்டாடி உலகம் பொறு(றா)மையாய் எதிர்நோக்கி காத்திருக்கிறது, அவன் முதல் தோல்வியைக் கொண்டாட!

-

சில கடித உறைகளை வாங்கிய வேகத்தில் கிழிப்பது தெரிந்தால், தபால்காரர் வழியிலேயே கிழிச்சுடுவார்னு நினைக்கிறேன் #ஆணிகளில் சில தேவையில்லாததும்

-

உண்ணாவிரதம்னா காலை 6 - மாலை 6 மணிதானே, கொஞ்ச நாளா காலை 8 - மாலை 5 வரைதான் உண்ணாவிரதமாம்# பேசாம இரவு 9 - காலை 8னு கூட மாத்திக்கலாம் போல!

-

பாரதியின் எழுத்தில் வழியும் கம்பீரமே, அவரை வரைந்திருக்கும் அனைத்து ஓவியங்களிலும் வெளிப்படுகிறது

-

"வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்” - பாரதி #வெள்ளக்காரன் கட்டின முல்லை பெரியாறுக்கே மூச்சுமுட்டுது சாமி!

-

அன்பும் நட்பும் எதையும் கொண்டாடும்!

-

16GB SPY PEN 3.2MP Cam Video/Recording/Photos MRP:4999 U pay:1990 Hurry # SMS அனுப்பிட்டே இருக்கான். வாங்கி அவன் வீட்லையே வெச்சுடலாமா?

-

ஜெ.மோ-வின் யானை டாக்டர் படித்த பிறகு, அரசு 48 நாட்களுக்கு யானைகளை காட்டுக்குள் அனுப்புவது அவசியம் என்றுதான் தோன்றுகிறது.

-
ஆண்மையற்ற அமைப்புகளில் மத்திய நீர் ஆணையமும் ஒன்று என்றே நினைக்கின்றேன். தண்ணீருக்கான வஞ்சகம் இனி போராகவும் மாறலாம்.

-

பெரும்பாலானோர் அமைதியாகக் கவனிக்கின்றார்கள் தளும்பும் அரை குடங்களை

-
BMW காரின் பின் இருக்கையில் ஒரு சாக்கு மூட்டையை வெச்சிருக்காங்க. ஒருவேளை பணமூட்டையா இருந்திருக்குமோ!? #பெட்ரோல் பங்க்

-
தண்ணீரைவிடச் சுவையானதும் கண்ணீரைவிடக் கனமானதும் ஏதுமில்லையெனினும் சூழல்களே தீர்மானிக்கின்றன.

-

எழுதுவதில் என்ன பெரிய கடினம். வார்த்தைகளைச் செதுக்குவதும், எண்ணிக்கையை குறைப்பதும்தான் கடினம்ம்ம்ம். :)

-

நீங்கள் எதுகுறித்து வேண்டுமானாலும் வினாத் தொடுக்கலாம். பதில் எனக்குத் தெரிந்ததிலிருந்துதான் #'விதி'

-


யோசிக்காமல் நிகழ்வது உணர்வுப்பூர்வமான தாக்குதல், ஆறஅமர யோசித்து, திட்டமிட்டுத் தாக்குவது ஒளிந்துகிடந்த, தீர்க்கவேண்டிய வன்மத்தின் வடிகால்!

-

இணையத்துக்கான புனைப்பெயரை சிலபேரு ரொம்படெர்ர்ர்ர்ரராவெச்சுக்கிறாங்களே... மெய்யாலுமே அவங்க அம்புட்டுடெர்ரரா ஆட்கள்தானா!?

-

இந்தியா மாதிரி ஒரு நாடு உண்டா? குஜராத் சரக்குக்கு தடை, ஒடிசா காய்ச்சி விற்கலாம். கேரளா கர்நாடகா கள் அனுமதி, தமிழக அரசு சரக்குலதான் ஓடுது!

-

போன தலைமுறையின் பிற்பாதியில் ஆரம்பித்தது, தங்களைவிட்டு பிள்ளைகளைப் பிரித்து ஒதுக்கி வைத்து அழகு பார்க்கும் அவலம்!

-

மனிதர்களிடையே 143 உணர்வு சாகும்பொழுது 144 தடையுத்தரவு பிறக்கிறது!

-

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்துஅன்புமணி
# வேணாம்ணே, மனுசமக்கா ஏற்கனவே பஸ் கட்டணம் பால் விலைனு கடுப்புல இருக்காங்க!

-

கத்திக்கதறிய தமிழனின் வார்த்தைகளும், ஓசையும் தமிழர்க(ளுக்கும்)ள் தவிர்த்து புரியவேயில்ல. ’கொலவெறிமட்டும் எப்படி எல்லோருக்கும் புரிஞ்சுது!

-

ரசிப்பின் சுவை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் ரசனை என்பதும் ஒரு வரம் என!

-

ஆள்மாறாட்ட புதுவை முன்னாள் அமைச்சரிடம் 300 கேள்விகள். அடக்கொடுமையே 30 - 40 கேள்விக்கு பதில் எழுத கூலி ஆள் வெச்சதுக்கு 300 கேள்வியா!?

-

தெரியாத எண்ணிலிருந்து போன் செய்துஎன்னை யார்னு தெரியுதா?”னு கேக்குறவங்க தலையில் எல்லாம் கொம்பு முளைக்க கடவுவதாக!

-

மக்களவை உறுப்பினர்கள் iPad வாங்க தலா ரூ.50000 நிதி ஒதுக்கீடு. # iPad இயக்க ஒரு ஆள் வெச்சுக்கனுமே அதுக்கும் சம்பளம் கொடுத்துடுவாங்களா?

-

தியாகங்களின் பின்னால் இருக்கும் வலியும் விலையும் பெரும்பாலும் தெரிவதில்லை

-

கவிதை ஒன்று தேடும் பொழுதில்என்னடா செய்றேஎனும் அவளின் அழைப்பில் கண்டடைந்தேன் எனக்கானதொரு கவிதையை!

-

செய்யவேண்டிய வேலை தவிர, மற்ற எல்லா வேலைகளும் ஆர்வம் மிகுந்ததாக இருக்கு. #உருப்பட்ட மாதிரிதான்

-

திமுக கூட்டத்துக்கு பாட்டுப் போட்டிருக்காங்கஏறுது பாரு விலைவாசி. இந்த எம்.ஜி.ஆரு ஆட்சிக்கு வந்த முகராசி”.  # அட ச்ச்சே கேசட்ட மாத்துங்கப்பா!

-

5 comments:

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

எத்தனை நாளா உக்கார்ந்து யோசிசீங்க இதெல்லாம்...

ராமலக்ஷ்மி said...

அருமை அனைத்தும்:)!

ஓலை said...

Keechchu keechchu super.

'பரிவை' சே.குமார் said...

அனைத்தும் அருமை அண்ணா.

தெய்வசுகந்தி said...

அருமை தவிர வேறு எந்த வார்த்தையும் தோன்றவில்லை!!