வேகமாய் மனித தலைகள் மறைகின்றன.....
மெல்ல இருள் தழுவுகிறது....
வெளிச்சத்தில் ஆனந்தமாய் இருந்த அலைகள்
தழுவும் இருளில் மிகுந்த மிரட்சியாய்....
அலைகளை விட்டு எதிர்திசையில் பாதம் பதிக்கிறேன்
கனக்கும் மனதைவிட
சற்று அதிகப்படியாகவே பாதம் பதிகிறது
மணல் என்னை உள்வாங்கிக்கொள்கிறது.....
குட்டியாய் ஒரு அலை குதித்தோடி வந்து
பிடனி பிடிப்பது போல் பிரமை....
எங்கோ விடுபட்டு பறந்து வந்த
முனை கிழிந்த வெள்ளை காகிதம்
என்னிடம் படபடக்கிறது
தனக்கு இன்னும் வாழ்க்கை மிச்சமிருக்கின்றதென்று......
Subscribe to:
Post Comments (Atom)
வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்
பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...
-
நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான். உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...
-
அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...
-
வெயில் விழுதுகளாய் விழுந்து கொண்டிருக்கும் நடு மதிய நேரத்தில், கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந...
3 comments:
good writings
kavingare..onnum solrathukku illa..:-)
ஒன்று ஆரம்பிக்கும் போதே அது முடிந்துவிடும் என்று யூகிக்கும் நிமிடங்களில் மனம் திளைக்க ஆரம்பித்து விடுகிறது.ஓ என்றிருக்கும் வீடும் இடமும் தனிமை பயத்தை கொடுக்கும்.கனிவுள்ள மனம் தனிமைப்படாது.அதன் முதல் கூட்டாளி அதுவே.
Post a Comment