சல்லி வேர்





அந்தச் செடியை
நான் வைக்கவில்லை
ஒரு நாளும்
நீரூற்றியதுமில்லை
எந்தவகையிலும்
எனக்கு உறவுமில்லை

உயர வளரத் துடித்து
இடைவிடாது காற்றில்
அலையும் கொடியை
அருகாமைப் பந்தலில்
ஏற்றிவிட்டிருக்கிறேன்

படர்ந்து பரவலாம்
வானத்தை நோக்கி
கையும் அசைக்கலாம்
சல்லி வேரொன்றின்
நுனியை மட்டும்
என் ரத்தநாளத்தில்
பிணைத்தபடி!

-

4 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமை அண்ணா...

மகிழ்நிறை said...

மனதை ஓடுருவும் சல்லி வேர்கள்!!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...!

Unknown said...

ஐயோ....செம