Feb 14, 2014

சோதனை





யுகத்துக்குத் திறக்கப்படா
அறையின் சன்னல் திறக்க
உட்புகும் உயிர்க் காற்று!

தானாகவே நிகழும்
ஒரு பெருமரக்கிளையின் முறிவில்
பிதுங்கும் வலியின் ஓசை!

இரண்டுக்கும் சாத்தியமுண்டு
என்மேல் உனக்கு அன்பிருக்கா
எனச் சோதனைக்குள்ளாகும்
காதல் தருணங்களில்!

-

3 comments:

மகிழ்நிறை said...

சத்தியசோதனை தான்!
அருமை !!

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை...

அருமை...

அன்பு தின வாழ்த்துக்கள்...

Unknown said...

ம்ம்..இரண்டிற்க்கும் சாத்தியமுண்டு...

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...