Jul 2, 2013
நானுமற்ற தனிமை!
எவர் கனவிலோ நான்
என் கனவில் எவரோ
எவர்களில் சில அவர்கள்!
***
ஏக்கமாய் கூவும் குயில்
எப்போதும் அறிவதில்லை
ஏக்கப்பிணி ஒரு தொற்றென!
***
உதிர்ந்து கிடக்கும் இறகில்
வரிவரியாய் வாசிக்கிறேன்
உழைப்பின் வரலாற்றை
***
செயல்களில்
உணர்த்திடாத
நேசிப்பையா
கவிதைகளில்
உணர்த்திடப்
போகிறோம்
***
அவசரத் தேவை
யாருமற்ற தனிமை
அது நானுமற்றதாய்!
***
சுமந்து திரியும்
மௌனங்களை
எந்த வார்த்தைக்குள்
இறக்கி வைக்க!
-0-
Subscribe to:
Post Comments (Atom)
வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்
பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...
-
பருவ மழை பொய்த்துப் போய் விடும், வறட்சி தாண்டவமாடும், எல்லோரும் செலவுகளைக் குறைப்போம் என விளம்பர யுக்தியோடு நாடு முழுதும் அரசியல் வாதிகள் அற...
-
ஒரு படைப்பாளி மனதில் மிதந்து கொண்டிருந்த விசயங்களை இறக்கி வைக்கும் ஒரு தளமாகவே பெரும்பாலும் வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கிறான். ஆரம்பத்தில் இலக...
-
வழக்கமான பொழுதுகள் வழக்கம்போல் கடந்து போக , துக்கம் பீடிக்கும் நொடிகள் நகர மறுத்து மனதிற்குள் கனத்தை ஏற்றிக்கொண்டே இருக்கின்றன. நேற்ற...

8 comments:
Nice!
அருமையான கவிதைகள் சார்
ஏக்கப்பிணி ஒரு தொற்றென!// அழகான வரி!
சுமந்து திரியும்
மௌனங்களை
எந்த வார்த்தைக்குள்
இறக்கி வைக்க!//உண்மைதான் முடியாது
கவி அருமை
அன்பின் கதிர் - கவிதை அருமை - செயல்களீல் உணர்த்த இயலாதவைகளையா நாம் கவிதையில் உணர்த்திடப் போகிறோம் - சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அருமையான கவிதைகள் அண்ணா.
எல்லாக்கவிதைகளுமே அருமை.
அதுதானே ?
செயல்களில் உணர்த்த முடியாததையா.
Post a Comment