Sep 30, 2016

பிரியத்தின் தலைகோதியபடி



இறுதியாய்க் கோர்த்திருந்த விரல்களினூடே
உயிரின் கதகதப்பிருந்தது
எனினும் நம் உள்ளங்கைகளினூடே
ஒரு மௌனம் கதைத்திருந்தது
அறைந்து உறைந்து போன பார்வைக்கு
ஒளிவர்ணம் தீட்டிய படியும்
அணைத்து உணர்த்திய வாசனைக்கு
மலர்களைத் தூவியபடியும்
பகிர்ந்த ஆதிச்சொல்லையும்
பகிரப்போகும் இறுதிச்சொல்லையும் தேடி
துள்ளி விளையாடும் பிரியத்தின்
தலைகோதியபடியும் காத்திருப்பேன்!

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...