Feb 3, 2015
சபிக்கப்பட்ட வனமொன்று
வேர்களின் நுனிகளில்
பாவ நெருப்பு
பூக்கத் தொடங்கியிருக்கிறது
சபிக்கப்பட்ட இவ்வனத்தில்
விதைகள் எதுவும்
இனி விழப்போவதில்லை
மழைத்துளி வேண்டி
காத்துக்கிடந்த
கோரைப்புல் கிழங்கொன்று
இறுதியாய்
தம் கருமுட்டையை
வெளித்தள்ளியிருக்கிறது
மேய்ந்து பசியாறியவைகள்
விட்டுப்போன
பாதச்சுவடுகளில்
அழிந்துபோகும் நிலையில்
நினைவுகள் மட்டும்
மீந்து கிடக்கின்றன
எல்லாம் இல்லாமல் போன
ஒரு கணத்தில்
பேய் மழையொன்று வரலாம்
அதற்குள்
அந்த முன்னாள் வனத்திற்குச் சூட்டிட
பெயரொன்று
உருவாக்கிட வேண்டும்
-
Subscribe to:
Post Comments (Atom)
வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்
பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...
-
பருவ மழை பொய்த்துப் போய் விடும், வறட்சி தாண்டவமாடும், எல்லோரும் செலவுகளைக் குறைப்போம் என விளம்பர யுக்தியோடு நாடு முழுதும் அரசியல் வாதிகள் அற...
-
ஒரு படைப்பாளி மனதில் மிதந்து கொண்டிருந்த விசயங்களை இறக்கி வைக்கும் ஒரு தளமாகவே பெரும்பாலும் வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கிறான். ஆரம்பத்தில் இலக...
-
வழக்கமான பொழுதுகள் வழக்கம்போல் கடந்து போக , துக்கம் பீடிக்கும் நொடிகள் நகர மறுத்து மனதிற்குள் கனத்தை ஏற்றிக்கொண்டே இருக்கின்றன. நேற்ற...

5 comments:
சென்ற வார வனம்? :)
அருமை......
அருமை......kathir sir
அருமை நண்பரே
அருமையான கவிதை அண்ணா....
Post a Comment