குளிச்சுப்பாருங்க!

தென்மேற்கு பருவமழை துவங்கியதாக அறிவிப்புகள் வந்த போதிலும், அதைச் சிறிதும் கண்டுகொள்ளாமல், எங்கள் பகுதியை மட்டும் வஞ்சித்து வரும் மேகக்கூட்டம், வெயிற்காலம் முடிந்தும் அடித்து வீழ்த்தும் வெயில் என ஈரோடு இன்னும் கசகசத்தே கிடக்கிறது. இந்நிலையில் நண்பர் சேது, தங்கள் குடும்பம் சார்பில் ஏற்பாடு செய்த கிடா வெட்டு விருந்துக்கு வேலூருக்கு அழைத்தார். பதிவுலக நண்பர்களோடு ஆசனூர் வந்ததிலிருந்து, எங்களோடு அவரும் ஒரு அங்கமாக மாறிவிட அழைப்பு எல்லோருக்கும் பொதுவானதாக மாறியது.

கிராமத்துச் சாலை

இடையார் வாய்க்கால் மேலே

செமக் கட்டு!

நண்பர்களோடு


நான், ஆரூரன், கார்த்தி, ஜாபர், பைஜு, சரவணன் என, வழக்கம் போல் பத்து மணிக்கு கிளம்பத் திட்டமிட்டு வழக்கம் போல் பதினொரு மணிக்குக் கிளம்பினோம். தடபுடலான விருந்தில் தாகம்(!), பசியடங்கி திரும்பும் வழியில் ஜாபரின் அன்பு நச்சரிப்பில் ஜேடர்பாளையத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்குச் சென்றோம்.

காவிரியின் குறுக்கே தடுப்பணை அமைத்து, ஆற்றின் கிழக்குப் பகுதியில் இருக்கும் பல ஊர்களுக்கு வாய்க்கால் மூலம் தண்ணீர் செலுத்தப்படுகிறது. ராஜ வாய்க்கால், கொமராபாளையம் வாய்க்கால், மோகனூர் வாய்க்கால் என வேலூர் பகுதிகள் செழித்து வளர இந்த வாய்க்கால்களே காரணம்.

தென்னையும் கரும்பும்!

வெயிலோடு விளையாடி!

ஆட்டம் போடும் ஜாபர், சரவணன்

சரவணனும், நானும்


சரியான மாலை வெயில், தகதகக்கும் தண்ணீர், சலசலத்து ஓடும் நீரின் வெள்ளை நுரை என அடுத்த சில நிமிடங்களில் எல்லோரையும் நீருக்குள் தாவிக்குதிக்க வைத்தது. தடுப்பணையில் நிறுவப்பட்டுள்ள மதகுகளின் வழியே பீறிட்டு வரும் நீர், அருவியின் தாக்கத்தை உடலில் செலுத்துகிறது. ஓடிய நீரில் விளைந்து கிடக்கும் பாசியில் வழுக்கி விழுந்து, நீரில் சிறிது தூரம் அடித்துச் செல்லப்பட்டு, சிரித்தவாறு எழுந்து வருவதும் கூட ஒரு இடைவிடாத விளையாட்டாகவே இருக்கிறது. வீட்டிற்கு வந்த பிறகுதான் தெரிகிறது வயது கூடிப்போனதும், விழுந்ததில் பிறந்து வளர்ந்திருக்கும் வலியும்.

அணைத்தடுப்பில் வழியும் நீரோடு விழும் மீன்கள், விழுந்த வேகத்தில், சரியும் நீரிற்கு எதிராக ஆள் உயரத்திற்கு குதிக்கும் உற்சாகத்தை அலுப்புத் தீர ரசித்துக் கொண்டேயிருக்கலாம். சுற்றிலும் நுரை பொங்க புதிதாய் விழும் நீர், உடல் வெப்பத்தைக் கரைத்து குளிர்ச்சி புகுத்தும் ஓடும் நீரின் வேகம் என அனுபவித்து ரசிக்க அழகியதொரு இடம்.

பைஜு, ஜாபர்

மதகு அருவிகள்

தடுப்பணையில் தாவி வழியும் நீர்

நீல்வானமும்,  நீர் ஓட்டமும்


அதே சமயம், பாதுகாப்பான ஒரு சுற்றுலாத்தளம் என்றும் சொல்லமுடியவில்லை. தண்ணீரோடு(!) தண்ணீருக்கு வந்து தலையெழுத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருவதும், எந்த இடத்தில் வேண்டுமானாலும் தண்ணீருக்குள் உடைந்த கண்ணாடித் துண்டுகள் ரத்தக் காவு வாங்குவதையும் மறுக்கமுடிவதில்லை.

வரும் சீசனுக்கு குழுமம் சார்பில் குற்றாலம் போயே தீரவேண்டும் எனச் சொன்ன நண்பரும் கூட, குற்றாலம் போறதுக்குப் பதிலா இன்னொரு தடவை இங்கேயே வந்து குளிச்சுக்கலாம்பா என்றார்.

-0-

9 comments:

Unknown said...

இங்க வெயில் அடி பின்னுது......
ஜில் பதிவு.

vasu balaji said...

நீர் விளையாட்டு:)

ஹேமா said...

பொறாமைப் பட்டுக்கிறேன் கதிர் !

ஓலை said...

Arumai Kathir.

Anubavinga raasaa anubhavinga # poraamiyila sollala.

எல் கே said...

பரமத்தி வேலூர்தானே ??

arasu said...

It is Highly risky to take bath in any part of Cauvery river in Erode, Karur, Trichy belt.Sand Mining Made
indepth and swirls in many places.Please ensure your safety first.

தாணு said...

I have heard of this place often. Due to the fear in Kaveri, yet attempted visiting it. Twice we went to mannathampalayam.

Guru said...

Where is this place exactly. Can you give direction to travel from Vellore.

மாதேவி said...

கிராமத்துச் சாலையும்,தென்னைகளும், ஆற்றுநீரும், மனத்தை அள்ளிச் செல்கின்றன.