மூப்பெய்தும் இரவு உறங்க அழைக்கிறது
ஒரு மடியின் கதகதப்பு வேண்டுமாயிருக்கிறது
புடவையில் பழமையின் வாசனை இருக்கவேண்டும்
மெல்லத் தலை கோதும் விரல்கள்
முதிர்ந்ததாய் சற்று முடிச்சிட்டதாய்
இருத்தல் பிடித்தம்
வீசும் சொற்களில் வெற்றிலையும்
வாசனைச் சுண்ணாம்பும் கொட்டைப் பாக்கும்
கலந்த ஒரு வாசனை வேண்டும்
இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால்
அது ஆயாவின் பிரியமாகவும்
அம்மாயியின் வாசனையாகவும் இருத்தல் போதும்!
கனவிலும் கூடுதல் அன்பாய்
இருக்கப் பிரியப்படுகிறேன்!
-
Subscribe to:
Post Comments (Atom)
அந்த வெகுமதிக்கு இன்னொரு பெயருண்டு
தமக்கு ஒவ்வாத, தம்மை சற்றும் முன்னகரவிடாமல் இழுத்துப் பிடிக்கும் எந்த ஒன்றிலுமிருந்து விடுபடுவது மிகத் தேவையான ஒன்று. ஆனால் அப்படிப் பிடித்த...

-
பொ துவாக வெற்றி அத்தனை எளிதில் வாய்த்துவிடுவதில்லை . பெரும்பாலும் அது நிகழ்த்தக் கோருவது யாராலும் அவ்வளவு எளிதில் நிகழ்த்த முடிய...
-
வாய்ப்பளித்த ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும், நிகழ்ச்சி தயாரிப்பாளர் சரவணராஜ், பதிவுலக நண்பர்கள் ஆரூரன், உண்மைத்தமிழன், வானம்...
-
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி வெறி கொண்டு முழங்கிய தமிழ் இனத்தில்தான், சொட்டுப்பாலுக்கு வக்கில்லாமல்,...
3 comments:
அருமை
உண்மைதான் அந்த மடிக்கும் ,தலைவருடலுக்கும் மனம் ஏங்குகின்றது..
நேசம் சொல்லும் அருமையான கவிதை அண்ணா....
அந்த மடிக்கும்... தலை வருடும் கைகளுக்கும் இன்னும் கொடுப்பினை இருந்தும் வாழ்க்கை ஓட்டத்தில் தூர தேசத்தில்... மனம் ஏங்குகிறது அண்ணா...
Post a Comment