வெற்றிலையும் வாசனைச் சுண்ணாம்பும் கொட்டைப் பாக்கும் கலந்த வாசனை

மூப்பெய்தும் இரவு உறங்க அழைக்கிறது
ஒரு மடியின் கதகதப்பு வேண்டுமாயிருக்கிறது
புடவையில் பழமையின் வாசனை இருக்கவேண்டும்
மெல்லத் தலை கோதும் விரல்கள்
முதிர்ந்ததாய் சற்று முடிச்சிட்டதாய்
இருத்தல் பிடித்தம்
வீசும் சொற்களில் வெற்றிலையும்
வாசனைச் சுண்ணாம்பும் கொட்டைப் பாக்கும்
கலந்த ஒரு வாசனை வேண்டும்

இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால்
அது ஆயாவின் பிரியமாகவும்
அம்மாயி
யின் வாசனையாகவும் இருத்தல் போதும்!

கனவிலும் கூடுதல் அன்பாய்
இருக்கப் பிரியப்படுகிறேன்!

-

3 comments:

Nagendra Bharathi said...

அருமை

Geetha said...

உண்மைதான் அந்த மடிக்கும் ,தலைவருடலுக்கும் மனம் ஏங்குகின்றது..

'பரிவை' சே.குமார் said...

நேசம் சொல்லும் அருமையான கவிதை அண்ணா....
அந்த மடிக்கும்... தலை வருடும் கைகளுக்கும் இன்னும் கொடுப்பினை இருந்தும் வாழ்க்கை ஓட்டத்தில் தூர தேசத்தில்... மனம் ஏங்குகிறது அண்ணா...