Apr 13, 2021

மணல் வாசம்

மிச்சமிருந்ததில்
அள்ளி வைத்திருக்கும்
கைப்பிடி ஈர மணலின்
ஒவ்வொரு துகளிலும்
ஒவ்வொரு மழையின் வாசனை!

Apr 10, 2021

அந்த மழை

கை நிறைய அள்ளிய
விதைகள் யாவும்
ஊன்றப்பட்டுவிட்டன

முளைத்தால்தான் தெரியும்
இத்தனை காலமும் விதைகள்
சுமந்து கிடந்த மரங்கள்

வெளிறிய வானத்திலும்
வீசும் காற்றிலும்
துளியும் ஈரமில்லை

அன்றொருநாள் எங்களை நனைத்த
அந்த அழகிய மழையை நினைத்து
நனைந்து கொண்டிருக்கிறேன்!

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...