Oct 1, 2018

கனவொன்றின் பாதியில்




நீந்திய மலை
ஏறிய கடல்
பறந்த நிலம்
தவழ்ந்த வானம்
நுகர்ந்த கோபம்
உணர்ந்த மணம்
தொடும் மகிழ்ச்சி
நினைத்த வருடல்
ஒலித்த கண்ணீர்
வழிந்த சொல்
தழுவிய நிழல்
படிந்த தேகம்
உறங்கும் விண்மீன்
ஒளிரும் இருள்
இவைகளைச் சற்றே மிச்சம் வைத்திருக்கும்
கரைந்தொழுகும் கனவொன்றின்
முதற் புள்ளியை
அடைந்துவிடும்
கனவொன்றின்
பாதியில் இருக்கிறேன்!

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...