அமுது

மேனி தின்று
பசியாறத் துடிக்கும்
அத்தனை விழிகளுக்கும்
மௌனம் பேசும்
பார்வையாலும்
கசப்பு வழியும்
புன்னகைகளாலும்
அமுதூட்டுகிறாள்
நாட்டியக்காரி