May 13, 2017

நிற்பதா கடப்பதா



பசியோடு வந்த கொக்கிற்கு
குளத்தின் மையத்தில்
ஒரு கருவாடு மட்டும்
மின்னிக்கொண்டிருந்தது

தவித்துக் கொண்டிருந்த
கடைசி மரமும்
தன்னைத் தானே
துண்டித்துக் கொண்டது

வேறு வழியில்லை...
வெயிலை நோக்கி
ஏறித்தான் ஆகவேண்டும்.
போகும் வழியில்
கருத்த மேகம் ஒன்றிருக்கும்
நிற்பதா கடப்பதா
என்ற சந்தேகம் மட்டுமே

இப்போது!

2 comments:

Nagendra Bharathi said...

அருமை

ராஜி said...

யதார்த்தம்

முதியதோர் உலகு

அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...