For the attention of new entrants to the college...


For the attention of new entrants to the college...





Firstly congratulations for the successful completion of your long School journey, just look back for a while, all that happened were actions to reach this place and it didn’t happen just like that in the path

*
Would have entered college by wish or by force, for that either the marks, money or recommendation would have existed as an added weightage. Should also understand a fact that this place must be someone’s dream, passion and desperation, let us have that in mind!

*
Decide on how these upcoming 3 or 4 years to be spent and what are all to be learnt
*
Thinking this as a college and reading the syllabus may yield a degree, however will that degree be suffice for your future journey?

*
College is not only a place to obtain a degree, It is also a sculpture gallery to carve ourselves as per our thoughts too! Carve yourselves as much as possible within these years and move

*
Whenever we take a bike or a car from home for a journey, have we started without having a clarity on the purpose of the destination and the time it takes? How much it would cost for the petrol? As we think so much for this 100 rupees petrol expenditure, are we clear about this important 3-4 years period? Why, how, where, start exploring soon

*
“Why did I choose this subject?” If you don’t find an answer for this yourself, then there is all possibility you will end up with a question of regretting your choice

*
Find your mentor, he or she is not going to born but already exist in front of you, may be your senior, professor, bus conductor, father, mother, relative, college guest, trainer, it could be anyone or may be a one outside, it’s your sole responsibility to find out

*
 “I’m just a student and someone will take care of all!”, don’t think of escapism with this thought. This generation students has clarity, ability and intelligence to search and attain what they want!

*
Start thinking now about your option after college, “going for work, becoming an entrepreneur, can start an industry”, it could be anything, we are at the last stage of course completion, don’t waste time on finding reasons for procrastination

*
Start thinking about the additional features to be added in your bio data from now on

*
Enrich your attitude and friendship, be cautious with your words and actions

-       Erode Kathir

கல்லூரி முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்கள் கவனத்திற்கு


கல்லூரியில் முதலாம் ஆண்டில் நுழைந்திருக்கும் மாணவ, மாணவியர்கள் கவனத்திற்கு... ஈரோடு கதிர்




*
மிக நீண்ட பயணமான பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்து வந்திருக்கிறீர்கள். முதலில் வாழ்த்துகள். அந்த நீண்ட பயணத்தை சற்றே திரும்பிப் பாருங்கள். நிகழ்ந்தவை அனைத்தும் இந்த இடத்திற்கு வருவதற்கான செயல்களே!. சும்மா போனால் போகிறதென்று, போகிற போக்கில் இங்கு வந்துவிட வில்லை.


*
கல்லூரிக்குள் விரும்பி வந்திருக்கலாம், அழைத்து வரப்பட்டிருக்கலாம், இழுத்தும் வரப்பட்டிருக்கலாம். அதற்காக நம்மிடம் மதிப்பெண், பணம் அல்லது சிபாரிசு என ஏதோவொன்று கூடுதலாய் இருந்திருக்கலாம். ஒரு உண்மையையும் உணரவேண்டும்... தகிப்பும், தேடலும், தேவையும் நிறைந்த யாரோ ஒருவர் ஏங்கிக்கொண்டிருக்கும் இடமாகவும் இந்த இடம் இருக்கலாம். அதையும் கவனத்தில் கொள்வோம்.


*
இனிவரும் நான்கு / மூன்று ஆண்டுகளை, இந்தக் கல்லூரி நாட்களை எவ்விதம் கடக்கலாம், என்னவெல்லாம் அறிந்து கொள்ளலாம் என்பது குறித்து தீர்மானியுங்கள்.


*
வந்திருப்பதை வெறும் கல்லூரியாக மட்டும் நினைத்தால், படிக்க வேண்டியதைப் படித்தால், இறுதியில் பட்டம் கிடைத்துவிடும். வெறும் பட்டம் மட்டுமே எதிர்காலம்எனும் பெரும் பயணத்திற்குப் போதுமா?


*
கல்லூரி என்பது பட்டம் மட்டுமே கொடுக்கும் இடமல்ல. நாம் யாரென நம்மைக் கருதுகிறோமோ, அதைச் செதுக்கித் தரும் சிற்பக்கூடமும்கூட. முடிந்தவரை உங்களை இந்தக் காலத்திற்குள் செதுக்கிக் கொண்டு வெளியேறுங்கள்.


*
எப்பொழுதாவது வீட்டில் இருந்து பைக் அல்லது கார் எடுக்கும்போது, எங்கு போகிறோம், எதற்குப் போகிறோம், எவ்ளோ நேரம் ஆகும் எனும் தெளிவில்லாமல் புறப்பட்டிருக்கிறோமா? அதற்கான பெட்ரோல் செலவு எவ்வளவு இருந்துவிடும்? ஒரு 100 ரூபாய் பெட்ரோல் செலவிற்கே அத்தனை யோசிக்கின்றோம். அப்ப அடுத்து வரும் வாழ்வின் மிக முக்கியமான நான்கு / மூன்று ஆண்டுகள் குறித்து தெளிவாகி விட்டோமா? ஏன், எதற்கு, எப்படி, எங்கு என்பதை உடனடியாக கண்டுபிடிக்கத் தொடங்குங்கள்.


*
ஏன் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தோம்!?” எனும் காரணத்தை, நீங்களாகக் கண்டுபிடிக்கும்வரை, “ஏன்டா இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தோம்!?” எனும் மனநிலை இருக்கவே சாத்தியங்கள் அதிகம்.


*
உங்களை வழிநடத்த பொருத்தமான Mentor யார் என்பதைத் தேடிக் கண்டுபிடித்துவிடுங்கள். அவர் இனிமேலெல்லாம் பிறக்க வேண்டியதில்லை. ஏற்கனவே பிறந்து உங்களுக்கு முன், எட்டும் தொலைவில் சென்று கொண்டிருப்பவரே. மூத்த மாணவர், படித்து முடித்து வெளியேறியவர், பேராசிரியர், கல்லூரிப் பேருந்து ஓட்டுனர், தந்தை, தாய், உறவு, கல்லூரிக்கு வரும் விருந்தினர், பயிற்சியாளர் உள்ளிட்ட இவர்களில் யாரோ ஒருவராக அவர் இருக்கலாம். இவற்றில் இல்லாமல் வெளியிலும்கூட இருக்கலாம். தேடிக் கண்டடைய வேண்டியது உங்களின் உடனடிக் கடமை.


*
எல்லாம் யாரோ பார்த்துக்குவாங்க, நான் ஜஸ்ட் ஸ்டூடண்ட் தானே!என்றெல்லாம் தப்பிக்க நினைக்க வேண்டாம். தனக்கானதைத் தேடி அடையும் தெளிவும், திறனும், அறிவும் கொண்டவர்கள்தான் இந்தத் தலைமுறை மாணவ மாணவியர்கள்.


*
கல்லூரி முடித்து வேலைக்குப் போகலாம், தொழில் துவங்கலாம், நிறுவனம் ஆரம்பிக்கலாம்... அதில் எதுவென இப்பொழுதே சிந்திக்க ஆரம்பியுங்கள். கல்வியின் கடைசி, கால் பங்கு காலத்தில் இருக்கின்றோம். இனியும் தாமதிக்க காரணங்களைத் தேடிக் கொண்டிருக்காதீர்கள்.


*
உங்களுடைய Bio-Dataவில் என்னவெல்லாம் கூடுதலாக இணைக்க முடியும் என்பதை இப்போதிருந்தே சிந்திக்கத் துவங்குங்கள்.


*
நட்பையும், உங்களின் குணத்தையும் செழுமைப் படுத்துங்கள். எவருடனும் சொற்கள், செயல்களில் கவனம் இருக்கட்டும்.


*




உதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :2


கண்களில் கண்ணீரோடு தான் சில வரிகளைக் கடந்தேன் அண்ணா.. பத்து வயது கடந்த நிலையிலேயே என் மகளும் இந்த வலியை அனுபவிக்கிறாளே என்று நிறைய கஷ்டப்பட்டுருக்கேன்.. அந்த மாதிரியான சமயங்களில் அவளின் முகம் கொஞ்சம் வாடினாலும் .. அவளை நாங்கள் பள்ளிக்கு செல்ல அனுமதிப்பதில்லை...

எங்கள் இருவரின் வலியையும் தாயாய் உணர்ந்த என்னவரால் அந்த வலி கூட சுகமாக மாறிவிடும் பல வேளைகளில்...

ஆண்கள் கூட புரிந்து கொள்ளும் வேதனையை அதை நன்றாக உணர்ந்த பெண்கள் புரிந்து கொள்ளாதது வேதனையான விஷயம்...

*

I remember the day .. During 3 rd of my periods ..the situation took me to travel..
After get inside the train with in 2 hours my bleed started unconditional.
Full dress wetted. All knows that the express trains particularly in north side sleeper also we can't travel..near bathrooms and pathways oocupaid by passengers...

I started cry..my husband went to see ttr for a ac coach. That s the most untorable pain in my life in heart and body...

I take one towel and wipe the seat where i sit..with water.. And wrape me with a big bedsheet ...which i bring for sleep...

200 Nos more than i crossed to reach the new coach...

Where i sit there also all know abt my periods all are talk about that..

After this incident i ask myself why i was cry..
That s because of pain.. Or bcoz of shy..
Still i don't know ..

But most unconditional moment..
That struck on my mind..

Even i use napkins during..that much over bleed that's s also a 3 rd day how could it hpn i don't know.

Feeling painful..

*

தங்களின் பதிவால் நிச்சயம் பல நல் உள்ளங்கள் பெண் களின் வலியை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன. பொய்மை விலங்கை உடைக்க முயற்சி எடுத்த தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி

*

கடையில் போய் நாம் கேட்டாலும் அதை பேப்பரில் மடித்து தரும் நிலைதான் இருக்கிறது

*
நாம இன்னும் நிறைய மாற வேண்டியிருக்கிறது இந்த விஷயத்தில்

*

இன்று பல பள்ளிகளில் இயற்கை உபதைகளில் இருந்து விடுபட அனுமதி கேட்பதற்கே இளவயது பெண்கள் கஷ்டப்படுகிறார்கள். இதுதான் உண்மை.

*

ஆண்களுக்கு இதெல்லாம் ஜென்மத்தில் புரியப் போவதில்லை என்ற என் எண்ணத்தை உடைத்து விட்டீர்கள்.

*

அறியாமையை உணர வைக்கிறது....

*

நாம் இன்னும் நாப்கின் பற்றி பேசுவதையே taboo வாக கருதிக்கொண்டிருக்கிறோம்.. Tampon எனும் வகை பேட்கள் இன்னும் சவுகரியமானவை என்கிறார்கள் அதை உபயோகித்தவர்கள்.. இளம் தலைமுறைக்கு அதை பழக்க அம்மாக்கள் தயங்குகிறார்கள் ஏனெனில் அவர்களுக்கே அது ஏற்கமுடியாததாகவும் அச்சமாகவும் இருக்கிறது.. நீச்சலுக்கு செல்ல, கறைப்படும் என்ற கவலையில்லாமல் இருக்க என்று பல விதமாய் உபயோகம். வலி தவிர வேறு எதுவும் அந்நாட்களில் பெண்களின் அன்றாடத்தை கட்டிப்போடக்கூடாது.. இன்னும் கடக்கவேண்டியத்தொலைவு நிறைய இருக்கிறது..

*

எனது வீட்டில் இரண்டு பெண்களுக்கும் மனைவிக்கும் இதுவரை அவர்கள் சென்று வாங்கியதாய் ஞாபகம் இல்லைங்க..அந்த பயமும் ஒரு மன இறுக்கம் இல்லாமல் இன்றும் எதிர்கொள்கிறார்கள் எனது பெண்கள்.இது அவர்களின் சிறு வயதிலேயே கற்பிக்கும் ஒரு முக்கியமான பாடம்

*

இன்னும் நிறைய பதிவுகள்,கட்டுரைகள் வர வேண்டும்.

*

உணரவேண்டிய பதிவு....ஆண்கள் மட்டுமல்ல சில பதவியில் இருக்கும் பெண்களும்..... நான் ஆசிரியையாக வேலை செய்து கொண்டிருக்கும் போது.....வலியுடனும் வேதனையுடனும் விடுமுறை கேட்டும் கிடைக்காத தருணம் இதைப் படிக்கும் போது நினைவில் வந்தது.....

*

நீங்க சொன்ன மாதிரி தனிதட்டு , தனிப்படுக்கைன்னு கிராமங்களில் இன்னும் இருக்குங்க .

*

பெண்ணாய் இதை உணர முடிகிறது, மேலும் இன்றைய பல ஆண்கள் தங்கள் மனைவி மற்றும் மகளின் மாதவிடாய் சமையங்களில் ஏற்படும் மன பிரச்சனைகளை புரிந்து மிகவும் அனுசரனையாக நடந்து கொள்ளகிறார்கள் இதுவும் மிக பெரிய மாற்றமே

*

நீங்க எழுதியிருக்கும். மாணவி, தலைமையாசிரியை நிகழ்வு குறித்து ஒரு கருத்து. பெரும்பாலும் பெண்களுக்கிடையில் இந்த மாதவிடாய் பெரிய விடயமே இல்லாதது போல் ஒரு பாவனை இருக்கும். அதிலும் வயது மூத்த பெண்கள் இளவயது பெண்களின் வயிற்றுவலிக்கு, 'என்னமோ எங்களுக்கு இல்லாதது மாதிரி.. எல்லோருக்கும் உள்ளதுதான்..' என்கிற ரீதியில் அதை பார்ப்பது வழக்கம்.  இம்மாதிரியான அனுபவங்களை சித்தி, அத்தை, அக்கா என்று வயது மூத்த பெண்கள் எங்களிடம் காட்ட தான் செய்தார்கள்.

இளவயதில் இருக்கும் மாதவிடாய் சிரமங்கள், அதீத இரத்தப்போக்கையும் வயிற்றுவலியையும் புரியாத புதிர் தன்மையையும் கொண்டதாக இருக்கும் என்பதை மூத்தவர்கள் புரிந்துக் கொள்ள தவறுகிறார்கள். இதுவும் ஒரு வகையில் இன்று வரை சமூகத்தில் தொடரும் மாமியார் - மருமகள் பிரசனையைப் போன்றதுதான்.

*

முட்டு வீட்டுல முழுசும் ஓய்வில் இருக்கும் பழக்கம் தான் ,ஆதலால் அந்த நாளில் பெண்கள் ரொம்ப நல்ல சத்தான ஆகாரம் உண்டும்,உடலில் ஏற்படும் அசதியை போக்கவும் தான் அந்த முட்டு வீடு.

*

நாங்கள் இன்னும் கூட இப்படித்தான் இருக்கிறோம்....அந்தக் கடினமான நாட்களை கடத்துதல் என்பது வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மாபெரும் சவால்...தான்...

*

ஒரு தந்தையாக, கணவனாக உங்கள் கூற்று 100% சரியே. தவிர உங்கள் கையாளும் முறை அபாரம். அதற்காக உங்களுக்கு தலை வணங்குகிறேன். பொதுவாக பெண்களின் பிரச்சனையை இப்போது ஆண்கள் சுலபத்தில் புரிந்துகொள்கிறார்கள் என்பது பெரும் நிம்மதியை கொடுக்கிறது. நன்றி அய்யா."தீட்டுஎன்று இப்போதும் தொடர்வது குறித்து கேள்விகளுண்டு" என்று குறிப்பிட்டிருந்தீர்கள். முன்பெல்லாம். பெண்களுக்கு தீட்டு வந்தால் இன்றயத்தை போல பாட்ஸ் எதுவும் கிடையாது. தவிர உடல் உபாதைகள் இருக்கும். அந்த நேரத்தில் அவளுக்கு ஓய்வு தேவை. அதனாலேயே அவர்களை ஒரு வட்டத்துக்குள் மறதி மூன்று நாட்களுக்கு பத்தியமாக பாதுகாத்தார்கள். அதனால் தான் என்னவோ சுலபமாக இந்த ஸ்கேனிங்கும் இல்லாமல் 15 பிள்ளைகள் பெறமுடிந்தது. இப்போ அந்த வழக்கம் அருகிப்போனதால் ஒரு பிள்ளைக்கும் 15 ஸ்கானிங் என்றாகிவிட்டது. எப்போ இந்த வழக்கம் தவறான நோக்கில் பார்க்கப்பட்டது என்று எனக்கு தெரியவில்லை. பாஞ்சாலி சபதத்தில் தான் வீட்டுக்கு விளக்காக இருப்பதாக பாஞ்சாலி கூறும் செய்தியை பார்க்கும் பொது அப்போதெல்லாம் அவர்கள் இதை மறைத்துப் பார்க்கும் செய்தியாக பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது.

ஆனால் இதில் இன்னொரு பக்கமும் இருக்கிறது. இந்த சவாலில் எனக்கு நிச்சயமாக உடன்பாடு இல்லை. ஒரு பெண்ணாக அவளுடைய உணர்வுகளையும் புரிந்துகொள்ள வேண்டும். என்னதான் முற்போக்காக சிந்தித்தாலும் கூட ஒரு பெண் எந்த அளவுக்கு இத்தகைய சவால்களையும் விரும்புகிறாள் என்பதையும் பார்க்க வேண்டும். நிசஹகாயமாக அவளுக்கு இத்தகைய சவால்கள் சங்கடத்தைக் கொடுக்கும். யார் இந்த சவால்களை முன்வைத்தார்களோ எனக்கு தெரியவில்லை. ஒரு பெண்ணாக என்னால் இதை நினைத்ததுக்கூட பார்க்க முடியவில்லை. இதனால் என்னை ஒரு பிற்போக்கு வாதி என்று முத்திரை குத்தாலம். இந்த விஷயத்தில் நான் பிற்போக்குவாதியாகவே இருக்க விரும்புகிறேன். பெண்ணின் மாதவிடாய் என்பது இயற்க்கையாக நடக்கக் கூடிய ஒரு சம்பவம். அந்த நேரத்தில் அவளுக்கு இருக்கும் மனநிலை, உடல் மாற்றம், வலி என்பன எல்லாம் வெறும் சவாலுக்கு உரியதா? அதை இப்படி பகிரங்கமாக விளம்பர படுத்துவது... சரியா என்று எனக்கு தெரியவில்லை. அது பாட்டுக்கு நடந்துகொண்டு போகட்டுமே... விட்டுடலாமே.

*

இதை பற்றி எழுதுவதற்கு ஒரு தைரியம்மும் முற்போக்கு சிந்தனையும்,பெண்கள் மீது நல்ல அன்பும் வேண்டும்.

*

இது குறித்து எனக்கு சில ஆதங்கம் உண்டு. அந்த காலத்தில் தீட்டுன்னு சொல்லி ஒதுக்கி வைத்ததுக்கு முக்கியமான காரணங்கள் இருந்தது. அந்த மாதிரி நாட்கள்ள உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். அப்போ அவங்களுக்கு முழுமையான ஓய்வும் அவசியம் தேவை. அந்த காலத்தில் இதெல்லாம் கிடைச்சது. ஆனா இப்போ, அந்த கஷ்டத்தோட வீட்டு வேலைகளையும் செய்து, வேலைக்கும் போயிட்டு வந்து, குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பெண்கள் பற்றிய சிறு அக்கறை கூட யார்கிட்டயும் இல்லை. அந்த காலத்தில் ஒதுக்கி வைச்சாங்க, இந்த காலத்தில் வீட்டுக்குள்ள சேர்த்திக்கறாங்க. ஆனா அந்த காலத்தில் கிடைத்த ஓய்வும் கவனிப்பும் தொலைந்து போயி மேலும் சிரமங்கள் மட்டுமே மிச்சமானது


*

திரு அக்ஷய் குமார் பல சமூக அக்கறை கொண்ட படங்களில் நடித்திருக்கிறார்... திறந்தவெளியை தவிர்த்தல் மற்றும் ஒவ்வொரு வீட்டிலும் கழிவறையின் அவசியத்தை உணர்த்தும் படம்...

தலைமை ஆசிரியையின் பார்வையும் செயலும் தவறென்பது எனது கருத்து.. பள்ளியின் தேர்ச்சி சதவீதம் நூறாகயிருக்க வேண்டும்.. அனைவரும் எண்பது விழுக்காடுக்கு அதிகமாக மதிப்பெண்கள்... இத்யாதி.. இல்லையேல் மாவட்ட கல்வி அதிகாரி மெமோ... etc., ஒவ்வொரு முறையும் ஒரு மாணவி தன்னை சந்தித்து ஏதாவது கேட்கையில்(However naughty or notorious he/she maybe)... இவள் சொல்வது உண்மை"யோ" எனும் பார்வைதான் இருக்க வேண்டும்... இவர்கள் /இவள் எப்போதும் இப்படித்தான் என்ற... Pre(determined /conceived )closed mind to be shunned. அவரது பதவி, வயதுக்கு முதிர்ச்சியான பார்வையிருந்திருக்க வேண்டும்...

பள்ளி /கல்லூரி மாணவியோ அல்லது பணிக்கு செல்லும் பெண்களோ அல்லது விடுதியில் தங்கியிருப்பவர்களோ (கோவை), விரும்பத்தகாதது நடப்பின் துணிச்சலோடு தட்டிக்கேட்பது மற்றும் தன் சம்பந்தப்பட்டவர்க்கு தெரிவிப்பது பற்றி சிறு பிராயத்திலிருந்தே ஊக்குவித்தல் அவசியம். நீ பாட்டுக்கு பதிலே பேசாம வா... வேறு தெருவில போய்வா.. அலுவலக மேலதிகாரி. Transfer, harassment or CR etc., ஏதாவது ஒன்றிற்கு பயம்... A psychological war within herself subdues her..

மறுபடியும் அதே பள்ளி மாணவி.. பல வழிகளில் சொல்லியிருக்கலாம்... துண்டு சீட்டில் எழுதி.. சைகையால்.. அருகே சென்று மெதுவாக செவியில்.. வெளியே சென்றபோது பின்தொடந்து சென்று.. அதைவிட்டு அதேயிடத்தில் அழுதுகொண்டே.... மாற்றம் தேவை பெற்றோர் /ஆசிரியர்களிடம்...

*

In Dubai I have never seen a used napkin anywhere whether in a public or private toilet but in all my working places in India I have seen used napkins flooding in female toilets . No one takes it seriously..

*


உதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :1


ஒரு கட்டுரை குறித்து ”அருமை... மிகவும் அருமை” என்பது போன்ற பின்னூட்டங்கள் மட்டும் உவப்பளிப்பதில்லை. இசைவான மற்றும் மாற்றுப் பார்வையை அளிப்பதுவும், இன்னொரு தளத்திற்கு நகர்த்துவதுமான உரையாடல் என்பதே அந்தக் கட்டுரையின் வெற்றியெனக் கருதுவேன்.

உதிரத்தின் நிறம் உரிமை – எனும் கட்டுரை குறித்து ஃபேஸ்புக் / வாட்சப்பில் பகிரப்பட்ட கருத்துகள் தொகுப்பு -1


*******

My wife crying After reading this. She wants to say thanks to you. She will call you soon

*

ஒவ்வொரு பெண்ணும் ஒரு கொடுமையான அனுபவத்தை கடந்துதான் வந்திருகக் வேண்டும். ஆனால் நான் எல்லாவற்றையும் கொஞ்சம் உடைக்கப் பழகிக் கொண்டேன். அந்த கட்டுக்கோப்புகளை நான் தாண்டும்போது தட்டிக் கொடுப்பது ஆணாக இருந்தாலும் தடுப்பது பெண்கள்தான்.

அலுவலகத்தில் கையில் எடுத்துக் கொண்டு பாத் ரூம் போனால் உடன் இருக்கும் தோழிகள்தான் கிண்டலடிப்பார்கள் மறைத்துக் கொண்டு போ என்று. ஆண்கள் அதை பெரிதாக கண்டு கொள்வதில்லை

இந்த சமூகம் இந்த விஷயத்தில் திருந்தும் என்பது நம் காலத்தில் இல்லை. இன்னமும் flex அடித்து சீர் செய்கிறார்கள்

*

உண்மையில் உங்க பேட்மேன் சேலன்ஜ் அப்போதான் அதுல என்ன இருக்குன்னே பார்த்தேன்...திருமணமான இந்த 14 ஆண்டுகளில்... நானும் செஃல்பி எடுத்தேன்... ஆனா போடல... ஏன்னு எனக்கும் தெரியல...

*
ஏற்கனவே தெரிந்த/அறிந்த விஷயம் என்றாலும், பிற்போக்காகத்தண்நாம் அதைக் கையாள்கிறோம்.

என்னுடைய பத்து வயதில் என் அப்பா இதைப்பற்றிய புரிதலை எனக்கு ஏற்படுத்தினார்.

"தீட்டு என்பதெல்லாம் இல்லை. மாதத்திற்கு ஒருமுறை ரத்தம் சுத்திகரிக்கப்படும்போது தேவையற்ற ரத்தம் வெளியேறுகிறது. அதில் கிருமி தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் அந்த நேரத்தில் பெண்களை தொடக்கூடாது என்கிறார்கள்" இதுதான் அவர் கூறியது.

என் இரண்டு பெண்களுக்கும் (தற்போது 14,7 வயது) சிறு வயதிலேயே மாதவிடாய் பற்றி என்னால் முடிந்த அளவு சொல்லி மனதளவில் அவர்களை தயார்படுத்தி இருக்கிறேன். இது என் அப்பாவிடமிருந்து நான் கற்றது...

நீங்கள் இதை ஒரு சமூகத்திற்கே கற்றுக் கொடுக்க முயல்கிறீர்கள்.
இந்தக் கட்டுரை படிப்பவர் மனதில் ஒரு புரிதல்/மாற்றம் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

*

From this article I got one point about my research. Thanks Anna

*

This should taught by mothers to their sons. Then these issues will solve meticulously. Even I remember the days my mom scolded me asking about this.

*

மாத விடாய் நாட்களின் தாக்கம் கூட ஒவ்வொரு பருவத்திலும் மாறுகிறது. அதையெல்லாமும் கூட குடும்பத்தினருக்கு சொல்லிக் கொடுக்கணும். பதின் பருவக் குழந்தைகளுக்கு பள்ளிகளில் பாடமாகச் சொல்லிக் கொடுக்கலாம். தமிழ்நாட்டுல எத்தன பள்ளிகளில் இது நடக்குதுன்னு தெரியல. இங்கல்லாம் பெண் குழந்தைகள் பயமில்லாமல் தெளிவா எதிர் கொள்ளறதப் பாக்கறப்போ, நான் முதல் முறை அழுததுதான் நினைவுக்கு வருது. ஆனால் இப்போஎனக்கு நடக்கும் உடல் மாறுபாடுகளை என் குழந்தைகளிடம் பகிர்கிறேன். மகளுக்கு இன்னும ஆரம்பிக்கலைன்னாலும், எல்லாமே தெரியும்.

பள்ளித்துறையின் சமீபத்திய மாறுதல்கள் நம்பிக்கை கொடுக்குது. பாக்கலாம்...

*

The understanding has to come from small age. That is why i like the work you people are doing. If we teach the kids it will improve a generation

*

எம் பையன் எனக்கும் மகளுக்கும் நாப்கின் வாங்கி வருகிறான். அந்த நாட்களைப் பற்றிய ரகசியம் வீட்டில் இல்லை. எங்கள் வலி பற்றிய வெளிப்படை பேச்சு வீட்டில் உண்டு

*
உண்மை நிகழ்வுகளை உன்னதமான எழுத்துக்களால் உனக்கே உண்டான வடிவில். பெரும்பாலான பெண்களிடம் இன்றைக்கும் இருக்கும் தயக்கத்தை மிகவும் அழகாக எடுத்துரைத்து மனதில் எழுச்சியை ஏற்படுத்தியதற்காக பாராட்டுக்கள்

*

நேர்த்தியாக வெளிப்படுத்துதல்...
வீண் வார்த்தைகள், கற்பனை புனைவுகள் கடும் சொற்கள் ஏதுமின்றி படித்து, சிந்திக்கவைப்பது உங்களது எழுத்தின் சிறப்பு

*

Melted down. Thanks for the sharing

*

இதில் நானும் இன்னும் ஒரு குற்றவாளி தான் சார் .... வேண்டுமென்று தவிர்ப் பதில்லை இருந்தாலும் இது பற்றி கண்டு கொள்வதில்லை. கிட்டத்தட்ட 30 வருடங்கள் அம்மா & அக்காவெல்லாம் அந்த நாட்களில் தனி அறை , தனி படுக்கை , காலையில் குளித்து முடித்து பின் சமையல் , என்னென்னவோ வாங்க எத்தனை முறை கடைகளுக்கு அனுப்பினாலும் இந்த நாப்கின் வாங்க மட்டும் சொல்லாமல் , அவர்களே வாங்கி வந்து வீட்டில் ஒதுக்குப்புறமாக வைப்பது , இது போல பல வகைகளில் தள்ளியே இருந்ததால் அதைப் பற்றிய எந்த அறிவும் & யோசனையும இல்லாமல் கடந்து வந்து விட்டு இப்போது வூட்டம்மா அந்த அளவு கட்டுப்பாடு இல்லாமல் சாதாரண நாட்கள் போல கடப்பதை பார்த்து மகிழ்ச்சி தான் இருந்தாலும் அந்த நாட்களில் அவர்கள் வலியை உணர எண்ணினாலும் அது பற்றி பேசியதே இல்லை என்பது தான் எனக்கு குற்றவாளி போன்று உணர வைக்கும் சார் , ஆனாலும் அடுத்த முறையாவது அந்த நாட்களில் விசாரிக்க வேண்டும் என்று நினைப்பேன், ஆனால் செய்ததில்லை, இந்தக் குற்ற உணர்ச்சியால் தான் அந்த பேட்மேன் சேலஞ்ச்ல கூட கலந்து கொள்ள மனம் இடம் தரலை

*
இன்றளவிலும் எவ்வளவு முன்னேற்றம் வந்தாலும் பெண்களாகிய எங்களுக்கு உங்களவு யோசிக்கவோ கேக்கவோ பேசவோ வருத்தப்பட ஆளில்லை என்பதே நிதர்சனமான உண்மை பெண் ஜென்மத்திற்க்கே உண்டான வலிகள் வேதனைகள் அனுபவித்தே ஆகவேண்டும் அவ்வளவுதான்

*
அந்த ஆரோக்கிய சூழல் பள்ளியில் மட்டுமல்லாமல் , சமூகத்திலும் , குறிப்பாக வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆண்களின் பங்கு சரிசமமானது.

*
தங்களால், என்னால் இவ்வளவு உணர்ந்து கொள்ள முடிந்தமைக்கு நன்றி.

ஆனால் சென்னை வெள்ள பேரிடர் துயரத்தின்பொழுது சென்னைGST bhavan யில் உள்ள அதிகாரிகள் ஒண்றிணைந்து whatsapp group எற்படுத்தி இச்சிறியோனையும் அக்குழுவில் உள்ள நல்லிதயமீக்க நண்பரினால் இணைக்கப்பட்டேன்.
எவ்வாறு இக்குழு உருவானதெனில் அத்துறையில் உள்ள கருணையே வடிவான உயர் பெண் அதிகாரி அப்பேரிடாரின் பொழுது கூவம் அற்றங்கரையின் பாலத்தில் நின்று கவனித்தப் பொழுது குடிசைவாழ் பெண்களின் மேற்குறித்த துயரத்தை மனதில் உள்வாங்கி whatsapp group தொடங்கி சென்னையின் அனைத்து குடிசைப் பகுதிகளிலும் நாப்கின்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் தேவையானப் பொருட்கள் வழங்கி இறுதியில் whatsapp group அவரால் நல் உள்ளங்களுக்கு வாழ்த்துச் சொல்லி முற்றுப் பெற்றது சார்.
இச்சிறியோனும் அவர்களால் அன்றுணர்ந்தேன் வலியை இரு பெண் குழந்தைகளின் தகப்பனாக..

*
Excellent ....
இதை எழுதக்கூட ஒரு தைரியம் வேணும்....
கடவுளையே சபிக்கத் தோணும் பல கடினமான நேரங்கள்ல....
என்ன செய்ய....

*

படித்தவர்களே சில நேரங்களில் சில இடங்களில் பேச முடியவில்லை

*
இன்றைக்கும் எங்கள் நிறுவனத்தில் மாதவிடாய் ஏற்பட்டதை வெளிப்படையாக சொல்ல தயங்கும் பெண்களே அதிகம்.

*
People don’t have awareness about mensuration .. let us forward max

*

இங்கே பல பெண்களின் நிலைப்பாடு இது தான்..மெனோபாஸ் காரணமாக பதினைந்து நாட்களாக உதிரப் போக்கு அவஸ்தை மூன்று நாட்கள் மருத்துவ விடுப்பு முடிந்து இன்று ஓரளவு பரவாயில்லை என்று பணியில் வந்தேன் .திங்கள்தான் பணியில் சேரலாம் என்று இருந்தேன் ..கடுமையாகத் தான் பேசினார்கள் எங்கள் தலைமை ...கண்களில் நீரொடு கடமை யாற்ற வேண்டிய சூ ழல் .நீங்க அந்த பெண் கிட்ட கேட்டத்தும் அவள் ரியாக்சனும் நெகிழ வைத்து விட்டது .பெண்கள் எல்லோரும் இதைக் கடந்து வந்தாலும் சக பெண்களிடம் ஏன் இப்படி இருக்கிறார்கள்..சில இடங்களில் மாமியார் தொல்லை..சில இடங்களில் கணவர் .சில இடங்களில் உயரதிகாரிகள்...

பெண்களுக்கான பிரச்சனைகளை இவ்வளவு அழகாக பெண்களால் கூட சொல்ல முடியாத அளவு அருமையாக நட்புணர்வுடன், தந்தையுள்ளத்துடன் எழுதிருக்கீங்க...

*

படிப்பவர்களை யோசிக்கவும் பின்பற்ற வைக்கவுமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது

*

இந்த விடயங்களில் நம் வீடுகளில் பெண்களுக்குப் பெண்களே தனிமைப்படுத்துகிறார் களே... அம்மாக்கள் நாசூக்காகவும்.... மாமியார்கள் அதட்டலாகவும் ... பிறகு நாம் என்ன செய்ய ...

*


பள்ளிக்கு செல்லும் குழந்தை மாலை வரை ஒரே நாப்கினை பயன்படுத்தினால் புற்று நோய்க்கான வாய்ப்பு அதிகம் என்பதால் 20162ல் ஜேஸீஸ் மண்டலம் 17-ன் தலைவரின் சிறப்பு திட்டமாக நாப்கின் லெண்டிங் மிசின் இன்சினேட்டர் மிஷின்களை அரசு பள்ளிகளில் நிறுவும் திட்டத்தை கொண்டு வரப்பட்டது. அது 2016 ஆம் ஆண்டு தேசிய தலைவரின் திட்டமாக அறிவிக்கப்பட்டு இந்தியா முழுவதும் செயல் படுத்த பட்டது.

*

பெரிய படிப்பில்லாதவராக இருந்தாலும் எங்க அப்பா, இதில் ரொம்ப அட்வான்சாக இருந்தாங்க. நான் சிறுவனாக இருந்தபோது அம்மா மறைத்து வைத்திருந்த நாப்கினை எடுத்து இது என்ன என கேட்க, அம்மா என்னை திட்டிவிட்டு அதை பிடுங்கி வேறு மறைவான இடத்தில் வச்சிட்டாங்க.

அப்பா தோட்டத்தில் இருந்து வந்தவுடன் இதை நான் சொல்ல, உடனே அப்பா அந்த நாப்கினை எடுத்து வந்து எனக்கு புரியும் வகையில் சொன்னாங்க.

*

நான் எனது வகுப்பறையில் குழந்தைகள் இது பற்றி வெளிப்படையாக ,உரிமையாக , தைரியமாக வெளிப்படுத்த வழிகாட்டி உள்ளேன்

*

ஆணுக்குத் தெரிந்தாலும் தெரியக்கூடாத விஷயமாக ஏன் பார்க்கிறது இச்சமூகம்.!!!

*

முகத்திரையை கிழிக்கும் அற்புதமான விவரணை ங்க அண்ணா....

*

Excellent uncle... my husband mugam sulikkum pothu ennaku romba kastamaa irrukum...periods pathi naan ethana mura sonnaalum atha purinkittathe illa...

*

Fantastic..Happy to come know that important and positive thought processes are going on...This will simply help both the gender to uplift mankind..

*

very touching anna. But here college girls are conveying freely. This trend should spread in nook and corners

*