கூடுத‌லாய் பிரகாசித்தது....

மௌனமாய் அந்த மாலை...
கரிய இருள் போல்
ஏதோ குழப்பம் என்னை
சூழ்ந்திருந்த வேளை...

தேவதை போலெல்லாம் நீ
வரவில்லை....

சாதாரணமாகத்தான் நீ வந்தாய்...
எப்போதும் போல்

ஆனால்.....

என் உள்ளுண‌ர்வுக்கு ம‌ட்டும்
உன்னிட‌மிருந்து
சுக‌ந்தமாய் ஒரு வாச‌னை
குளிராய் மெல்லிய‌ காற்று....

நீ உற்று பார்த்த‌போது
உன் கண்க‌ளுக்குள்
நான் அழகாய் தெரிந்தேன்...

சாதார‌ண‌மாக‌ வ‌ந்த‌ நீ
திரும்பிப்போகும் போது
என்னை திருடிக்கொண்டு
போய்விடுவாய் என்ப‌தை வ‌ழ‌க்க‌ம்போல்
தாமதமாக‌வே உண‌ர‌ ஆர‌ம்பித்தேன்..

திருட‌ப்படுவ‌திலும் கூட‌
சுக‌மிருப்ப‌தை நான் உண‌ரும் போது
மாலை நேர‌ம் கொஞ்ச‌ம்
கூடுத‌லாய் பிரகாசித்தது....