May 30, 2017

ஒரு தட்டானின் மரணம்



வெடுக்கெனக் நகர்கிறது ரயில்
உயிரற்ற தட்டானொன்று
சன்னல் விளிம்பில்
ஒட்டியிருக்கிறது

காற்றைக் கிழித்து
ரயில் சீறுகிறது
மினுமினு றெக்கையும்
கண்ணாடி வாலும்
ரயிலின் தடதடப்புக்கேற்ப
நடுங்குகின்றன

வால் பிடித்து
றெக்கை படபடக்க
காற்றில் விடுகிறேன்
பறக்கவிடுதலைத் தவிர
வேறெந்த வகையில்
தட்டானுக்கு
அஞ்சலி செலுத்த!

1 comment:

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
(இறுதி வார்த்தையில் ..வது..
விடுபட்டிருக்கிறதோ..)
வாழ்த்துக்களுடன்...

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...