ஒரு இரவு
ஒரு பிறை நிலா
ஒரு தாழ்வாரம்
ஒரு சொல்
ஒரு முத்தம்
ஒரு உறவு
ஒரு பயணம்
ஒரு தருணம்
ஒரு உண்மை
ஒரு நெகிழ்வு
ஒரு துடிப்பு
ஒரு பரவசம்
ஒரு வாசிப்பு
ஒரு பொய்
ஒரு கடி
ஒரு விலகல்
ஒரு அணைப்பு
ஒரு கவிதை
ஒரு வன்மம்
ஒரு துளி கண்ணீர்
ஒரு ஆறு
ஒரு மரத்தடி
ஒரு பார்வை
ஒரு மயக்கம்
ஒரு பாடல்
ஒரு சீண்டல்
ஒரு மீட்பு
ஒரு அழுகை
ஒரு மணல்வெளி
ஒரு வருடல்
ஒரு வெளிச்சம்
ஒரு வியர்வைத்துளி
ஒரு தென்றல்
ஒரு மழை
ஒரு நொடி
ஒரு விடியல்
ஒரு கதகதப்பு
நீ
நான்
பிறிதென்ன?
-
5 comments:
# I just feel my flashback ,,,,,, re-winding but not binding !
ஒரு ... ஒரு ... ஒரு ... நல்லாருக்கு கதிர் !
பிரிதென்ன??எல்லா இனிய சொற்களையும் நீங்கள் கவிதையில் பயன்படுத்திக்கொண்டபின் வேறு எப்படி கருத்திட?!!!!
அருமை!!
பிரிதென்ன அண்ணா...
எல்லாம் சுகமே
ஒரு FaceBook Status
--விட்டுட்டீங்களே !
Post a Comment