Mar 25, 2014

சல்லி வேர்





அந்தச் செடியை
நான் வைக்கவில்லை
ஒரு நாளும்
நீரூற்றியதுமில்லை
எந்தவகையிலும்
எனக்கு உறவுமில்லை

உயர வளரத் துடித்து
இடைவிடாது காற்றில்
அலையும் கொடியை
அருகாமைப் பந்தலில்
ஏற்றிவிட்டிருக்கிறேன்

படர்ந்து பரவலாம்
வானத்தை நோக்கி
கையும் அசைக்கலாம்
சல்லி வேரொன்றின்
நுனியை மட்டும்
என் ரத்தநாளத்தில்
பிணைத்தபடி!

-

4 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமை அண்ணா...

மகிழ்நிறை said...

மனதை ஓடுருவும் சல்லி வேர்கள்!!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...!

Unknown said...

ஐயோ....செம

பாட்டல் ராதாக்களின் கதை

கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அட...