நான் எழுதநினைக்கும் உணர்வு தளும்பும் வரிகளை என்னை விடச்சிறப்பாய் எவரேனும் எழுதிடுகையில் நான் தோற்றுப் போகிறேன் என்வரிகள் ஜெயித்துவிடுகின்றன
-
கடவுள் ”ஹிக்ஸ் போஸன்” இருப்பது உண்மை-செய்தி. ஆசிரமம், கெடாவெட்டு, மாலை விரதம்னு ஆளாளுக்கு ஆரம்பிச்சிடுவாங்களே #கடவுள் பாவம் :)
-
சிலரிடம் சேரவேண்டிய செய்தியை, ஒருவரிடம் சொல்லி அந்தச்சிலரிடம் சொல்ல வேண்டாம் எனச்சொல்லுங்கள் அனைவரிடமும் சரியாகப்போய்விடும்! #எப்பூடி:)
-
அடர்ந்து வெற்றி பெறுபவனிடம், கொண்டாடிக் கொண்டாடி உலகம் பொறு(றா)மையாய் எதிர்நோக்கி காத்திருக்கிறது, அவன் முதல் தோல்வியைக் கொண்டாட!
-
சில கடித உறைகளை வாங்கிய வேகத்தில் கிழிப்பது தெரிந்தால், தபால்காரர் வழியிலேயே கிழிச்சுடுவார்னு நினைக்கிறேன் #ஆணிகளில் சில தேவையில்லாததும்
-
உண்ணாவிரதம்னா காலை 6 - மாலை 6 மணிதானே, கொஞ்ச நாளா காலை 8 - மாலை 5 வரைதான் உண்ணாவிரதமாம்# பேசாம இரவு 9 - காலை 8னு கூட மாத்திக்கலாம் போல!
-
பாரதியின் எழுத்தில் வழியும் கம்பீரமே, அவரை வரைந்திருக்கும் அனைத்து ஓவியங்களிலும் வெளிப்படுகிறது
-
"வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்” - பாரதி #வெள்ளக்காரன் கட்டின முல்லை பெரியாறுக்கே மூச்சுமுட்டுது சாமி!
-
அன்பும் நட்பும் எதையும் கொண்டாடும்!
-
16GB SPY PEN 3.2MP Cam Video/Recording/Photos MRP:4999 U pay:1990 Hurry # SMS அனுப்பிட்டே இருக்கான். வாங்கி அவன் வீட்லையே வெச்சுடலாமா?
-
ஜெ.மோ-வின் யானை டாக்டர் படித்த பிறகு, அரசு 48 நாட்களுக்கு யானைகளை காட்டுக்குள் அனுப்புவது அவசியம் என்றுதான் தோன்றுகிறது.
-
ஆண்மையற்ற அமைப்புகளில் மத்திய நீர் ஆணையமும் ஒன்று என்றே நினைக்கின்றேன். தண்ணீருக்கான வஞ்சகம் இனி போராகவும் மாறலாம்.
-
பெரும்பாலானோர் அமைதியாகக் கவனிக்கின்றார்கள் தளும்பும் அரை குடங்களை
-
BMW காரின் பின் இருக்கையில் ஒரு சாக்கு மூட்டையை வெச்சிருக்காங்க. ஒருவேளை பணமூட்டையா இருந்திருக்குமோ!? #பெட்ரோல் பங்க்
-
தண்ணீரைவிடச் சுவையானதும் கண்ணீரைவிடக் கனமானதும் ஏதுமில்லையெனினும் சூழல்களே தீர்மானிக்கின்றன.
-
எழுதுவதில் என்ன பெரிய கடினம். வார்த்தைகளைச் செதுக்குவதும், எண்ணிக்கையை குறைப்பதும்தான் கடினம்ம்ம்ம். :)
-
நீங்கள் எதுகுறித்து வேண்டுமானாலும் வினாத் தொடுக்கலாம். பதில் எனக்குத் தெரிந்ததிலிருந்துதான் #'விதி'
-
யோசிக்காமல் நிகழ்வது உணர்வுப்பூர்வமான தாக்குதல், ஆறஅமர யோசித்து, திட்டமிட்டுத் தாக்குவது ஒளிந்துகிடந்த, தீர்க்கவேண்டிய வன்மத்தின் வடிகால்!
-
இணையத்துக்கான புனைப்பெயரை சிலபேரு ரொம்ப ”டெர்ர்ர்ர்ரரா” வெச்சுக்கிறாங்களே... மெய்யாலுமே அவங்க அம்புட்டு ”டெர்ரரா”ன ஆட்கள்தானா!?
-
இந்தியா மாதிரி ஒரு நாடு உண்டா? குஜராத் சரக்குக்கு தடை, ஒடிசா காய்ச்சி விற்கலாம். கேரளா கர்நாடகா கள் அனுமதி, தமிழக அரசு சரக்குலதான் ஓடுது!
-
போன தலைமுறையின் பிற்பாதியில் ஆரம்பித்தது, தங்களைவிட்டு பிள்ளைகளைப் பிரித்து ஒதுக்கி வைத்து அழகு பார்க்கும் அவலம்!
-
மனிதர்களிடையே 143 உணர்வு சாகும்பொழுது 144 தடையுத்தரவு பிறக்கிறது!
-
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து – அன்புமணி
# வேணாம்ணே, மனுசமக்கா ஏற்கனவே பஸ் கட்டணம் பால் விலைனு கடுப்புல இருக்காங்க!
-
கத்திக்கதறிய தமிழனின் வார்த்தைகளும், ஓசையும் தமிழர்க(ளுக்கும்)ள் தவிர்த்து புரியவேயில்ல. ’கொலவெறி’மட்டும் எப்படி எல்லோருக்கும் புரிஞ்சுது!
-
ரசிப்பின் சுவை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் ரசனை என்பதும் ஒரு வரம் என!
-
ஆள்மாறாட்ட புதுவை முன்னாள் அமைச்சரிடம் 300 கேள்விகள். அடக்கொடுமையே 30 - 40 கேள்விக்கு பதில் எழுத கூலி ஆள் வெச்சதுக்கு 300 கேள்வியா!?
-
தெரியாத எண்ணிலிருந்து போன் செய்து ”என்னை யார்னு தெரியுதா?”னு கேக்குறவங்க தலையில் எல்லாம் கொம்பு முளைக்க கடவுவதாக!
-
மக்களவை உறுப்பினர்கள் iPad வாங்க தலா ரூ.50000 நிதி ஒதுக்கீடு. # iPadஐ இயக்க ஒரு ஆள் வெச்சுக்கனுமே அதுக்கும் சம்பளம் கொடுத்துடுவாங்களா?
-
தியாகங்களின் பின்னால் இருக்கும் வலியும் விலையும் பெரும்பாலும் தெரிவதில்லை
-
கவிதை ஒன்று தேடும் பொழுதில் ”என்னடா செய்றே” எனும் அவளின் அழைப்பில் கண்டடைந்தேன் எனக்கானதொரு கவிதையை!
-
செய்யவேண்டிய வேலை தவிர, மற்ற எல்லா வேலைகளும் ஆர்வம் மிகுந்ததாக இருக்கு. #உருப்பட்ட மாதிரிதான்
-
திமுக கூட்டத்துக்கு பாட்டுப் போட்டிருக்காங்க ”ஏறுது பாரு விலைவாசி. இந்த எம்.ஜி.ஆரு ஆட்சிக்கு வந்த முகராசி”. # அட ச்ச்சே கேசட்ட மாத்துங்கப்பா!
-
5 comments:
எத்தனை நாளா உக்கார்ந்து யோசிசீங்க இதெல்லாம்...
அருமை அனைத்தும்:)!
Keechchu keechchu super.
அனைத்தும் அருமை அண்ணா.
அருமை தவிர வேறு எந்த வார்த்தையும் தோன்றவில்லை!!
Post a Comment